search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்க கட்டணம்"

    • நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை.
    • தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இம்மாதம் (டிசம்பர்) 31ம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
    • மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1997 முதல் தனியார் மூலம் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் 34 சுங்கசாவடிகளில் கட்டணம் அமல்படுத்தப்பட்ட நிலையில் 2004-2008 கால கட்டத்தில் சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 63 சுங்கசாவடிகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டிற்கு 2 பிரிவுகளாக ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய நாட்களில் கட்டண உயர்வை அமுல்படுத்தி கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    அதன்படி இன்று நள்ளிரவு முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, ஓமலூர், வைகுந்தம், கரூர் மாவட்டத்தில் வேலன் செட்டியூர், மணவாசி, தர்மபுரியில் பாளையம், ஈரோட்டில் விஜயமங்கலம் மற்றும் விக்கிரவாண்டி, கொடைரோடு, பொன்னம்பலப்பட்டி, சமயபுரம், திருப்பராய்த்துறை, மொரட்டாண்டி, புதூர் பாண்டியபுரம், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திருமாந்துறை, வாழவந்தான் கோட்டை, எலியார்பத்தி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    அதன்படி ஓமலூர் சுங்க சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை சென்று வர பழைய கட்டணம் 90-ல் இருந்து 95 ரூபாய், பல முறை சென்று வர 130-ல் இருந்து 145 ரூபாய், மாத கட்டணம் 2 ஆயிரத்து 600-ல் இருந்து 2 ஆயிரத்து 870 ரூபாய், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 155-ல் இருந்து 165 ஆகவும், பல முறை சென்று வர 230-ல் இருந்து 250 ஆகவும், மாத கட்டணம் 4 ஆயிரத்து 520-ல் இருந்து 5020 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

    கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 300-ல் இருந்து 335, பல முறை சென்று வர 480-ல் இருந்து 500, மாத கட்டணம் 9640-ல் இருந்து 10,040 ரூபாய், 2 அச்சு மிக கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 480-ல் இருந்து 540, பல முறை சென்று வர 750-ல் இருந்து 805 மாத கட்டணம் 15ஆயிரத்து 100ல் இருந்து 16 ஆயிரத்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்பட மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலை வாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    இந்த சுங்க கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள், அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுங்க கட்டண உயர்வால் லாரி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் வாடகை உயரும் அபாயம் உள்ளது. வாடகை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சுங்க கட்ட ண உயர்வை குறைக்க வேண்டும் என்பது அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் கூறியதாவது-

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சம் லாரிகள் இயங்கின. தொடர்ந்து டீசல் விலை ஏற்றம், காப்பீட்டு கட்டண உயர்வு, லோடு கிடைக்காமை, ஆன்லைன் அபராதம், போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி உள்பட பல்வேறு காரணங்களால் 1.5 லட்சம் லாரிகள் தற்போது இயங்கவில்லை.

    4.5 லட்சம் லாரிகள் மட்டும் இயங்கி வருகிறது. இதில் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. மற்ற லாரிகள் தமிழகத்திற்குள் இயக்கப்படுகிறது. லாரி தொழில் லோடு கிடைக்காததால் நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சவாடிகள் உள்பட நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லிக்கு செல்ல அதிக பட்சமாக ஒரு லாரிக்கு 1500 ரூபாயும், சேலம் சென்னைக்கு 300 ரூபாயும், கன்னியாகுமரி-சென்னைக்கு 500 ரூபாய் வரையும் சுங்க கட்டணம் உயருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.

    ஏற்கனவே லாரி வாடகை உயர்வால் லோடு கிடைக்காத நிலையில் மேலும் வாடகையை உயர்த்தினால் லாரி தொழில் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் லாரி வாடகையை உயர்த்தும் எண்ணம் இல்லை. எனவே மத்திய அரசு காலாவதியான சுங்கசாவடிகளை நீக்க வேண்டும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வாகனங்களிலும் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்கள் சாலைகளை பராமரிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள் படி கழிப்பறை, ஓய்வறை, வாகன நிறுத்தம் உள்பட எந்த வசதிகளையும் செய்வதில்லை. தமிழகத்ததில் உள்ள 63 சுங்க சாவடிகளில் 1997-ல் ஏற்படுத்தப்பட்ட 14 சுங்க சாவடிகள் அதன் திட்ட மதிப்பீட்டை தாண்டி மக்கள், வாகன உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தி விட்டன.

    இது குறித்து மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் பார்வைக்கு இந்திய மோட்டார் காங்கிரஸ் கொண்டு சென்ற நிலையில் தன்னிறைவு சுங்க சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த போதும் வசூல் வேட்டை தொடர்கிறது. இந்த நிலையில் சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை அமல் படுத்துவது மோட்டார் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தன்னிறைவு எட்டிய சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், கட்டண அதிகரிப்பை ரத்து செய்ய வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது போல டீசல், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், மாநில அரசு டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அப்போது தான் நலிவடைந்துள்ள லாரி தொழிலை கொஞ்சமாவது பாதுகாக்க முடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே லாரிகளுக்கு போதுமான லோடு கிடைக்காத நிலையில் தற்போது சுங்க சாவடி கட்டணம் உயர்வதால் வாடகை கட்டணத்தை உயர்த்த லாரி உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    • சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக்கொண்டே வருகிறது.
    • சுங்கச்சாவடிகள் அதன் கால அளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவைகள் மூடப்பட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக்கொண்டே வருகிறது.

    இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையில், இதில் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் அதன் கால அளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவைகள் மூடப்பட வேண்டும்.

    பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 1.4.2023 முதல் உயர்த்தப்படவிருக்கும் சுங்கக்கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×