என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி
அரியலூர்,
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கட்சியினர் மொழி அரசியலை செய்ய வேண்டாம். பொறியியல், மருத்துவம் படிப்புகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட மேற்பார்வையாளர் சந்திரசேகரன், அரியலூர் நகரத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story






