search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

    • பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    குத்தகையை இந்து சமய அறநிலை யத்துறைக்கு செலுத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு பருவம் தவறிய மழையால் சாகுபடி கடுமையாக பாதி க்கப்பட்டது.

    நடப்பாண்டும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

    இச்சூழலை கருத்தில் கொண்டு தற்போது குத்தகை பாக்கியை செலுத்த வலியுறுத்தி அனுப்ப ப்பட்டுள்ள அறிவிப்பு நோட்டீஸை திரும்பப் பெருவதோடு, குத்தகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் காலங்காலமாக இக்கோவிலின் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் வெண்டை யம்பட்டி தான்தோ ன்றீஸ்வரர் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முகில் ஆகியோர் பேசினர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.
    • சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அந்த பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக சென்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் அல்லிமுத்து, முத்துக்குமரன், மக்கள் அதிகாரம் நகர செயலாளர் நந்தா, பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மாநில தலைவர் கு. பாலசுப்பிரமணியன், மக்கள் அதிகாரம் மாநில தலைமை நிர்வாகிகள் பாலு, மாவட்ட செயலாளர் ராசாமணி, துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் விவேகானந்தன், பலராமன், ராஜேஷ் குமார், பாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் இணை செயலாளர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

    காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி

    பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்கக் கோரி காரைக்குடி அண்ணா சிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். 

    மாநில விவசாய பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட துணை தலைவர் நாராயணன், மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி வேலங்குடி பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா, பேரூராட்சி கவுன்சிலர் செல்வா, நகர செயலாளர்கள் மலைக்குமார், பழனிக்குமார், நகர துணை தலைவர்கள் கண்ணன், முனியசாமி பாண்டியன், சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    திருவெண்காடு-மங்கைமடம் இடையே சாலையோரம் தனியாரால் கொட்டப்படும் மருத்துவ, இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கைகோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்ததினர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு - மங்கைமடம் இடையே அமைந்துள்ள மணிகரனையாற்றின் கரையோரமும் பிரதான சாலையோரமும் இருந்த குளத்தை ஆக்கிரமித்தும் இரண்டு ஊராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளையும் கொட்டி வருகின்றனர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனிநபர்கள் அபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் காற்றின் காரணமாகவும் குப்பைகள் சரிந்தும், அருகில் உள்ள நீர் நிலைகளில் காற்றில் குப்பைகள் அடித்து செல்வதால் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அவ்வப்போது குப்பைகள் தீ வைத்து எரிக்கபடுவதால் புகை மூட்டத்தாலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய ஊராட்சியே குளத்தை மூடி குப்பைகளை கொட்டியதுடன் ஆற்றின் கரையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய தனிநபர்களும் அபாயகரமான மருத்துவ கழிவுகுப்பைகள், இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த குப்பைகளையும் இறைச்சி கழிவு துர்நாற்றத்தையும் கடந்தே திருவெண்காடு புதன் ஸ்தலத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

    எனவே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வாகன ஓட்டிகள் இணைந்து கண்ணில் கருப்பு துணி கட்டி குப்பை கொட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்றின் கரையோரமும், கொட்டப்படும் கழிவுகளை, குப்பைகளை உடனே அகற்றவும் குப்பைகளால் மூடப்பட்ட குளத்தை மீட்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுஇடத்தில்  1.5 ஏக்கர் பொது இடத்தை ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள  மதுரை வீரன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இடத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருந்தது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீண்டும்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டுமென  அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இந்த போராட்டத்தில்  தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் கண்ணையன், அரசம்பாளையம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரில் புதிய பஸ் நிலைய இடத்தை மாற்றுவதை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூரில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றுவது கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கழக துணை பொது செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம், அக்ரி முருகேசன் , மோகன், அய்யனார், ஞானமூர்த்தி, கோமுகி மணியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். 

    காலி பணியிடங்களை நிரப்பதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ரெயில்வே பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    ரெயில்வே துறையில் ஆட்குறைப்பு செய்ய வேண்டாம், காலியிடங்களை குறைக்கக் கூடாது, தெற்கு ரெயில்வே முழுவதும் உள்ள 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கிளை செயலாளர்கள் ஜெகன், நெடுஞ்செழியன், அருண், ஜோன் நவீன்,  முத்து சுப்பிரமணி, எல்.ஆர்.எஸ் கோட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட எஸ்ஆர்எம்யூ  தொழிற்சங்கத்தை சேர்ந்த ெரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வலங்கைமானில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெ ருவில் மத்திய அரசு உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.

    இதில்  இந்திய கம்யூனிஸ்ட்மாவட்ட நிர்வாக குழு ரங்கராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிபிஐஎம் ஒன்றியசெயலாளர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழியில் சீமானை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சீர்காழியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரியகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

     காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லெட்சுமனன், வட்டார தலைவர்கள் பாலகுரு, பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம், மாவட்ட நிர்வாகி விஆர்ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் உருவ பொம்மையை காங்கிரசார் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். 

    அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து உருவ பொம்மையை கைப்பற்றி அப்புறப்படுத்தி தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×