என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"
- கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
- திமுக அரசைக் கண்டித்து 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.
- மழை எச்சரிக்கையால் இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
- சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
- இதனால் ஆர்ப்பாட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் 17.11.2025, திங்கட்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025, வியாழக்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
- ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்குரிமையை தடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாம் நதி போல பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
நமது செயல்பாடுகள் மூலம் தி.மு.க.வினர் இன்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. ஏன் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை. கிராமப்புறங்களில் காலையில் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் இரவில் தான் வீடுகளுக்கு வருவார்கள். இதுபோன்ற நபர்களிடம் எப்படி விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்வது என்கிற சிக்கல்கள் உள்ளன.
இது போன்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாம் இப்போது வைத்திருக்கும் வாக்காளர் அட்டை இனி செல்லுபடியாகாது. அது போன்ற சூழல் ஏற்படும்போது ஆதார் அட்டையும் செல்லுபடியாகாமல் போகலாம். பின்னர் இந்திய குடிமகனா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புவார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று இந்தியாவிலேயே இந்த தலைவரும் செய்யாத செயலை நேற்று வெளியிட்ட எஸ்ஐஆர் தொடர்பான வீடியோ மூலமாக நமது தலைவர் விஜய் செய்து உள்ளார்.
நேற்று இரவு 12 மணிக்குள் மூன்று கோடி பேர் அதனை பார்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோதும் அவரிடம் எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்கள். ஆனால் அவர் மக்கள் ஆதரவை பெற்று முதலமைச்சரானார்.
தற்போது நம்மை பார்த்தும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஆனால் நமது தலைவரோ மக்களையே கட்டமைப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இளம் வாக்காளர்கள் முதல் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் நாம் அனைவருமே வீடு வீடாக செல்ல வேண்டும்.
இப்படி அனைவரது வாக்குரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதனை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் 2026 தேர்தலில் நமது தலைவர் தான் முதலமைச்சராக அமருவார்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
- வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
- தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள்.
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது:-
மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
வாக்காளர்களின் பெயர்களை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் கூறி வருகிறார்கள்.போலியான காரணங்களை கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்குரிமையை நீக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
அதே நேரத்தில் ஒரே நபரின் பெயரை பல இடங்களில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சியாளர் கள் குறுக்கு வழியில் வெல்வதற்கு துடிக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால் முறையான பதில் அளிக்க முடியவில்லை.
5 ஆண்டுக்கு ஒருமுறை தலைவிதியை நிர்ணயிக்கும் வாக்குகளை நாம் யாருக்கு போட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று யார் ஓட்டு போட வேண்டும் என்பதையே அதிகார வர்க்கம் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
எனவே இதனை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள். இதன் மூலமாக இளம் வாக்காளர்கள் முதல் அனைவருக்குமான வாக்குரிமையும் பறிபோகும் சூழல் உள்ளது.
எனவே நாம் அனைவரும் வாக்குகளையும் உறுதி செய்து 2026 தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதற்கான உரிமையை பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்று 2026 தேர்தலில் நமது தலைவர் முதலமைச்சராவது உறுதி.
இவ்வாறு ஆனந்த் பேசினார்.
- சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், SIR நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
- ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும்.
கரூரில் த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வருகிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு குளறுபடிகளை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதற்காக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் போலீஸ் அனுமதி கேட்டு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார்.
இதையடுத்து 6 முக்கிய நிபந்தனைகளை விதித்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைப்பதற்கு அனுமதி இல்லை, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடத்தவேண்டும், மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் யாரேனும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும்.
ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு கூம்பு வடிவ ஒலி அமைப்புகள் பயன்படுத்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
- தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
- SIR-க்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:-
* கொஞ்சம் ஏமாந்தா.. நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்.
* வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி சென்று சேரும்?
* SIR பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள்தான்.
* FORM கொடுக்க வருவீர்கள் என்பதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா?
என்று தெரிவித்தார்.
- சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
- சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.
சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆனால் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இடவசதி போதாது. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.
அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
- மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
- தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, SIR-ஐ கண்டித்து வரும் நவம்பர் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை:
காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஐ.யு.எம்.எல். பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச்செயலாளர் நித்யானந்தன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.






