என் மலர்
நீங்கள் தேடியது "திருவாரூர்"
- கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
- நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற அம்மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை வருவாய், கூட்டுறவு, பொதுப்பணி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
- 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
- சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று இரண்டாம் கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து, திருவாரூரில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்," தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை" என்றார்.
மேலும், விஜய் பேசியதாவது:-
கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்க ரூ.40 கமிஷன் வாங்குவதாக திருவாரூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
கமிஷன் விவகாரத்தை வேறு யாரும் சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன், இதனை கூறியதே விவசாயிகள் தான்.
உங்களுக்கு வேண்டுமென்றால் 40-க்கு 40 என்றால் வெற்றி, டெல்டா விவசாயிகளுக்கு நீங்கள் வயிற்றில் அடித்த ரூ.40 கமிஷன் தான்.
விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.
டெல்டா பகுதியில் 40-க்கு 40 என்பது விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெற்ற கமிஷன், இதற்கு சிஎம் சாரின் பதில் என்ன?
எது நடைமுறைக்கு சாத்தியமோ எதை உண்மையாக செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக தவெக தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
- உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார்.
திருவாரூில் பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக தோளில் பச்சை துண்டு அணிந்து வந்தார்.
அதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்," திருவாரூர் தியாகராஜன் கோவில், திருவாரூர் தேர் தான் நியாபகம் வரும், திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம் என்றார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான் தான் என பெருமை தட்டியவர் யார் என உங்களுக்கு தெரியும்.
ரொம்ப நாளா ஓடாம இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொள்கிறார். அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறார்.
அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
திருவாரூர் மாவட்டம் தங்களின் சொந்த மாவட்டம் என சொல்லிக் கொள்பவர் கருவாடாக காய்வதை கண்டு கொள்ளவில்லை.
எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீர்கள், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி இல்லை.
உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார். திருவாரூரில் உள்ள மெடிக்கல் கல்லூரி தான் வைத்தியம் பார்க்கும் நிலையைில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளம்பினார்.
- திருவாரூரில் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளப்பிய விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தவெகவிரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
- இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
- தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
- வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்:
மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து ஆற்றில் வந்த நீரை வைத்து விவசாயிகள் நெல்நடவு செய்து, போதிய உரமிட்டு வளர்த்து எடுத்துள்ளனர். இதற்காக ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் வரை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
பருவம் தவறிய இந்த மழையால் திருவாரூர் அருகே உள்ள பழையவலம், தென்ஓடாச்சேரி கானூர், கள்ளிக்குடி, அலிவலம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வயலில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்க வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் இளம் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்ப தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, ரெயில்வே மேம்பாலம் அருகில் நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், இரவு சன்னதி தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயத்தமானார். அப்போது திடீரென சன்னதி தெருவில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் தி.மு.க. அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்த பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார்.
- திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
- பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக 9-ந்தேதி காலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார்.
மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
9-ந்தேதி இரவு திருவாரூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ந்தேதி காலை திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார்.
- தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சசிகலா மற்றும் அவரது தம்பி திவாகரன் ஆகியோர் சாமிதரிசனம் செய்ய வந்தனர்.
அவர்கள் 2 பேரும் கோவிலில் உள்ள சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார். தற்போதைய அரசு பஸ்களில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். அரசு பஸ்களின் நிலை மோசமாக தான் உள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி கட்டி கொண்டிருந்தால் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்க முடியும். இவர்கள் வட்டி கட்ட முடியாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கி கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தின் கடன்சுமையை இந்த அரசு உயர்த்தி விட்டது.
மேலும் இவர்கள் திட்டங்களை கொண்டு வந்து அதில் பெருமளவு கமிஷன் பெற்று கொள்கிறார்கள். அப்படி கமிஷன் பெறுவதால் ஒப்பந்ததாரர்களால் அந்த பணியை முடிக்க முடியவில்லை. பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது. பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றிய பிறகு 3 மடங்கு, 4 மடங்கு வரிகட்டும் நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.
தி.மு.க. அரசு ஒவ்வொரு பொதுமக்களின் வீட்டை தட்டி வரி வசூலிப்பதிலேயே குறியாக உள்ளது. சொத்துவரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்திவிட்டது. இதனால் விலைவாசி அதிகமாக உயர்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தி.மு.க. அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
- மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது.
திருவாரூரில் வானில் திடீரென ஒலித்த பலத்த சத்தத்தால் மக்கள் பீதியமடைந்துள்ளனர். சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் வீட்டைவிட்டு மக்கள் வௌியேறினர்.
மன்னார்குடி, கமலபுரம், வடபாதி மங்கலம் பகுதியில் சத்தம் உணரப்பட்டது. சத்தம் கேட்ட அதே நேரத்தில் விமானமும் சென்றதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்ததாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனம் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், "பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட்டனர்" என்றார்.






