என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "school student"
- ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார்.
- ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 42) இவரது மகள் ஜெயமித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது சகோதரி லீனா (வயது 13) அதே பகுதியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தம்பி மெதுஷ் (வயது 12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.
இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக்கொடுக்க தொடங்கினர்.
இதனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார் சிறப்பாக வாசித்தார்.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வருவதால் தன்னுடைய கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் கச்சிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் சீரிய முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ந்தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்துகொண்டார்.
இதல் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பள்ளியின் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
- பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
- தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி எல்கேஜி படிக்கும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
அதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கிபோது டயரில் சிக்கி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் உடலை மீட்ட கோத்தகிரி போலீசார், தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை தேடி வருகின்றனர்.
- பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம்.
- மாணவன் சீருடையில் இருந்துள்ளான்.
சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ், ரெயில்களில் மீது ஏறி சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும் வழக்குப் பதிவு செய்தும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அபாயகரமான பயணம் அவ்வப்போது தொடர்கிறது.
உயிரை பொருட்படுத்தாமல் சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் இது போன்ற சம்பவத்தால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பும் நேர்ந்து விடுகிறது. பஸ், ரெயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய செயல்களை போலீசார் கண்காணித்த போதும் திடீரென பயணத்தின் போது பஸ், ரெயில்கள் மீது ஏறி தொங்கி ஆட்டம் போடுகிற சம்பவம் சென்னையில் தொடர் கதையாக நடக்கிறது.
அந்த வகையில் தற்போது பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பொது மக்களை பதற வைத்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயிலில் மயிலாப்பூரில் இருந்து ஏறிய பள்ளி மாணவன் ஒருவன் திடீரென பதறவைக்கும் வகையில் ஜன்னலில் தொங்கிய படி பயணம் செய்தார்.
100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்ற அந்த ரெயிலில் மாணவன் தன் உயிரை பொருட்படுத்தாமல் ஜன்னல் மீது நின்றும் தொங்கியும் பயணம் செய்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை ஒரு பயணி செல்போனில் படம் எடுத்து அதை வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பல ரெயில்களை கடந்து மாணவன் தொங்கிய படி சாகச செயலில் ஈடுபட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. சாகச செயலில் ஈடுபட்ட மாணவன் சீருடையில் இருந்துள்ளான். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
விபத்தை உணராமல் சிறிதும் அச்சமின்றி சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவனின் செயல் சிறிது நேரம் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ? ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தையும், பீதியையும் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியது.
மாணவர்களின் சாகச நிகழ்ச்சியை படம் பிடித்து வெளியிட்ட பயணி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ரெயில் பயணத்தில் நடப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து ரெயில் பாதுகாப்பு படை போலீசார் அந்த ரெயில் எண், பயண நேரம், நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
- சரியாக படிக்காததால் மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வெளியே சென்ற மாணவன் திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே எட்டப்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் சூர்யா (வயது13). இவர் ஜி.உசிலம்பட்டி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் சூர்யா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடை க்காததால் கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
- களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் மைக்கேல் ஜெரோன் பிளஸ்-2 படித்து வந்தார்.
- மைக்கேல் ஜெரோன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு, சரோஜினி புரத்தை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் கேரளாவில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தனபிரபா. இவர்களது மகன் மைக்கேல் ஜெரோன் (வயது18). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் இவர் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். இதற்கான பயிற்சி வகுப்பில் சேர பணம் இல்லாததால் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் மைக்கேல் ஜெரோன் வீட்டில் உள்ள அறையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்ச மால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்க சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
- சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.
திருப்பூர்:
கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட கற்றல் இடைவெளி போக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.வரும் 2025 வரை, இந்த சிலபஸ் அடிப்படையில் தான் பாடம் கையாளப்படும். 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை, அரும்பு, மொட்டு, மலர் என 3 வகையினராக பிரித்து பாடம் நடத்தப்படுகிறது.
வினாத்தாள் பிரத்யேகமாக வடிவமைத்து, மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களின் கற்றல் நிலை பரிசோதிக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று, 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு வகை வினாத்தாள் திரையில் தோன்றும். இதை ஆசிரியர்கள் உதவியோடு விடையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்தேர்வு ஆசிரியர்களின் மொபைல் போன் மூலமாக நடத்தப்படுகிறது. அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வாராந்திர தேர்வு வெள்ளிக்கிழமை துவங்கி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை தொடருகிறது.சர்வர் குளறுபடி, நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் இருந்தால் மட்டுமே, இருநாட்களில் அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் தேர்வை முடிக்க முடியும்.மீதமுள்ள நாட்களில் வகுப்பு கையாள்வதோடு, அதிக வகுப்பு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் இரண்டாம் பருவத்தில் இருந்து இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், வாரத்தில் அதிகபட்சம் 3 நாட்கள் வரை, ஆன்லைன் தேர்வு நடத்திவிட்டு மீதமுள்ள நாட்களில் மட்டுமே பாடம் கையாள வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் ஆன்லைன் தேர்வு நடத்துமளவுக்கு கம்ப்யூட்டர்களோ, டேப்லெட் போன்ற எந்த உபகரணங்களும், தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.சொந்த போனில், ஆசிரியர்களே இணையதள கட்டணம் செலுத்தி ஆன்லைன் தேர்வு நடத்தி வருகிறோம்.
இதுகுறித்து தொடர்ச்சியாக ஆசிரியர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் தற்போது இருவாரத்திற்கு ஒருமுறை ஆன்லைன் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றனர்.
- விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
- தன் திறமையை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் இவருடைய மகன் கௌசிக் (வயது 14). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு துறையில் அதி கம் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இந்த மாணவன் உள்ளூரில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி அரியலூரில் நடை பெற்ற மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொண்டு இந்திய தேசியப் பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் வரும் நவம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவி லான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் மாணவன் கௌசிக் வெற்றி பெற உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்.
சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பள்ளிக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும். அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பும். பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதில் ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும். 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். 20 நாட்கள் வராத பிறகு கல்வித்துறை சட்ட நடவடிக்கையை தொடங்கும்.
- பெங்களூருவை சேர்ந்தவர் 13 வயது பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஹரிஷ்.
- இவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் எம்ஆர்எப் எம்எம்எஸ்சி எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த பைக்கர் ஷ்ரேயாஸ் ஹரிஷ் பங்கேற்றார்.
பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்றது. இதனால், அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கடந்த மே மாதம் மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களிலும் முறையே 5-வது மற்றும் 4-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் பயின்று வரும் 462 மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. இதே பள்ளியில் படிக்கும் சகோதரர்களான 8-ம் வகுப்பு பயிலும் விஜய விஜேஷ்குமார், 10-ம் வகுப்பு பயிலும் விஜய விவேஷ்குமார் ஆகியோர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
இதுகுறித்து தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கேரம் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகளை கொண்டு சுமார் ரூ.10 ஆயிரத்தை சகோதரர்கள் சேமித்தனர்.
சேமித்து வைத்த பணத்தை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயார் செய்து தாங்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
மறைந்த சகோதரர்களின் தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பாரி மற்றும் அடையாள அட்டை வழங்கிய மாணவர்களின் தாய் ப்ரீத்தி விஜயகுமார், ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர்.
இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.