என் மலர்
நீங்கள் தேடியது "மாயம்"
திருச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை உசிலம்பட்டி தவிட்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஜீவானந்தம் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி., ஐ.டி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு புறப்பட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர.
நண்பர்களிடமும் விசாரித்தனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து சண்முகம் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதில் மாயமான தனது மகனை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் வள்ளி(வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வள்ளியின் தாய் சங்கீதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகிறார்.
- இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி கிருத்விக்(4) என்ற மகன் உள்ளார். கோபாலகிருஷ்ணன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சொந்த ஊரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மனைவி, குழந்தையை அனுப்பி வைத்தார். விசேஷம் முடிந்த பின்பு அவர்களை கோபால கிருஷ்ணனின் உறவினர் திருச்சிக்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் முத்துலட்சுமி திருச்சி செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் குமாரலிங்க புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (28), மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ஆமத்தூர் போலீசில் அவரது தாய் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசி வந்ததாக தகவல்
- மனைவியை மீட்டு தரும்படி கணவர் போலீசில் புகார்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளம்பெண் யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தார். இது அவரது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் இளம்பெண்ணின் தாயிடம் கூறினார். அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அவரது கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் அக்கம் பக்கத்தினரிடம் தான் ஏற்கனவே வேலை செய்த மில்லுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் திருமணமான 6 மாதத்தில் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்
- அரியலூரில் வீட்டை விட்டு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
- விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டி திருக்கோணம் காங் கேயம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவரது மகள் தேன்மொழி (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கடந்த 15-ந் தேதி தேன்மொழியின் தாத்தா-பாட்டி ஆகியோர் வீட்டு வேலை செய்யவில்லை என திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த தேன்மொழி வீட்டை விட்டு சென்று ள்ளார்.ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படு கிறது. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரம ங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தேன்மொழியை வலைவீசி தேடி வருகிறார்.
- விழுப்புரம் அருகே பள்ளி மாணவி மாயமானார்.
- குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர், மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செஞ்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
- இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார்.
விழுப்புரம்:
செஞ்சி தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பிரியாவை பல இடங்களில் தேடினார்.
எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தவுட்டுப்பாளையம் நர்சிங் கல்லூரி மாணவி மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி கல்யாணி (35). இவர்களது மகள் ஹர்சினி(17). இவர் புன்னம் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக ஹர்சினி வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் ஹர்சினி வீடு திரும்பவில்லை.
பெற்றோர்கள் கல்லூரிக்குச் சென்று விசாரித்த போது ஹர்சினி கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், இது குறித்து வர்சினியின் தாய் கல்யாணி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி உறையூரில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் பெண் மாயமாகி உள்ளார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது மனைவி கண்ணகி வயது 47 இவர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் சமையல் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கண்ணகிக்கு அழகு முருகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது கண்ணகியின் மகன் வினோத் அதிர்ச்சி அடைந்தார் பின்னர் தாயை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் வீட்டிலிருந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற கண்ணகி மாயமானார் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதுகுறித்து கண்ணகியின் மூத்த மகன் விமல் உறையூர் போலீஸ் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணன் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார்.
சேலம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசப்பாக்கம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சேலம் சூரமங்கலம் அருகே மற்றொரு லாரிக்கு லோடை மாற்றி உள்ளார். அப்போது லாரியில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
- அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கடலுார்:
பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.