search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணவாளக்குறிச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்
    X

    கோப்பு படம் 

    மணவாளக்குறிச்சி அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்

    • உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கடியப்பட்ட ணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஆன்றனி மைக்கேல் (வயது 43). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி சபின் சஜோனா (32). இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சபின் சஜோனா தனது மகன்களுடன் வீட்டிலிருந்து மாயமானார். ஆன்றனி மைக்கேல் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த வித தகவலும் இல்லை.

    இச்சம்பவம் குறித்து ஆன்றனி மைக்கேல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×