search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்"

    • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.

    அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

    கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

     

    கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.

    இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிக்கின்றன.
    • எக்டோபிக் கருவுறுதல் என்று குறிப்பிடுகின்றனர்.

    பெண்கள் கருவுற்றால் பத்து மாதங்களில் குழந்தை பிறப்பதே இயற்கை. கருவுற்ற பெண்களின் கருப்பையில் சிசு படிப்படியாக வளர்ந்து பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும். மருத்துவ துறையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எளிமையாகி வரும் நிலையிலும், மனித உடல் பற்றிய பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிப்பதை யாரும் மறுக்க முடியாது.

    அந்த வகையில், மருத்துவ துறையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 56 ஆண்டுகள் கருவுற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனது வயிற்றில் குழந்தை உண்டாகி இருப்பது குறித்து அந்த பெண்ணுக்கே தகவல் தெரிந்திருக்கவில்லை.

    நீண்ட காலம் வயிற்றில் குழந்தையை சுமந்து வந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த டேனியலா வெரா சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். வலி தாங்க முடியாமல் மருத்துவமனை சென்ற டேனியலாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனையில் டேனியலா வயிற்றில் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள், டேனியலா வயிற்றில் கருவுற்று வளராமல் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே டேனியலா உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு டேனியலாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கருவுறும் பெண்களுக்கு சில சமயங்களில் கருப்பை தவிர உடலின் மற்ற இடத்தில் கரு உருவாகும் என்று மருத்துவர் பேட்ரிக் டெசிரெம் தெரிவித்தார். இதுபோன்ற நிலையை "எக்டோபிக் கருவுறுதல்" (ectopic pregnancy) என்று மருத்துவ துறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலை தான் டேனியலாவுக்கும் ஏற்பட்டது.

    இந்த சூழலில் குழந்தை சரியாக வளர முடியாது என்பதால் அது பெண்ணின் உடலில் கால்சியமேற்றம் (கரு கால்ஷியமாக மாறிவிடுதல்) ஆகி விடும். இந்த நிலையில், பெண்களின் வயிற்றில் சிசு இருப்பது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாது. மேலும் வலியும் ஏற்படாது. எக்ஸ்-ரே செய்யாமல் இந்த நிலையை கண்டறியவே முடியாது.

    • பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
    • ஹாசன் கான் பிரசவம் பார்த்திருக்கிறார்.

    ஜார்டனில் இருந்து லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு மருத்துவர் ஹாசன் கான் பிரசவம் பார்த்திருக்கிறார்.

    சுமாராக இரண்டு மணி நேர விமான பயணத்தின் போது விமானத்திற்குள் மருத்துவ அவசர நிலை உருவானது. இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஹாசன் கானிடம் விமான குழுவினர் உதவி கோரினர். உடனே உதவ முன்வந்த மருத்துவர், பெண் ஒருவருக்கு பனிக்குடம் உடைந்து பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.

    இதை பார்த்த மருத்துவர், உடனே பிரசவ பணிகளை துவங்கினார். மருத்துவரின் உதவியால் 38 வயதான பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வர்த்தக விமானம் ஒன்றில் பிறந்த 75-வது குழந்தை இது என கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததை அடுத்து விமானம் அருகாமையில் உள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    அங்கிருந்து குழந்தையை பெற்றெடுத்து பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து பேசிய மருத்துவர், "விமானம் வேறு பாதையில் திருப்பப்பட்டதால், எனது பணிக்கு செல்ல தாமதமாகி விட்டது. தாமதத்திற்கான காரணத்தை அறிந்த எனது உயரதிகாரி என்னை பாராட்டினர்," என்று தெரிவித்தார். 

    • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
    • பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

    மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.

    இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.

    மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
    • உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.

    அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.

    அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

    5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

    • அங்கு போங்கள்... இங்கு போங்கள் என்றுதான் அலைக்கழிக்கிறார்கள். எனக்கு உதவி செய்ய யாருமில்லை.
    • ஆபத்தில் தவிப்பவர்களை அலைக்கழிக்க வைக்கலாமா?

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை தவிக்க விட்டுள்ளது.

    உதவிகள் தேவைப்படுபவர்கள் வாட்ஸ்அப், வலைத்தளம் மூலமாகவும் உதவிகள் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் புளியங்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவரை காப்பாற்றும்படி கதறி அழுது வருவது வைரலாகி உள்ளது.

    கண்ணீர் மல்க அந்த பெண் கூறியதாவது:-

    எனது கணவர் அவரது நண்பர் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சென்றார். அப்போது காரை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. கார் மீது ஏறி நின்றபடி என்னுடன் பேசினார். மாலை வரை தொடர்பில் இருந்தார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.

    யாரும் உதவிக்கு வரவில்லை. கடவுளே... என் கணவரை யாராவது காப்பாற்றி கொடுங்களேன். ஒவ்வொரு அலுவலகமாக சென்று உதவி கேட்டேன். அங்கு போங்கள்... இங்கு போங்கள் என்றுதான் அலைக்கழிக்கிறார்கள். எனக்கு உதவி செய்ய யாருமில்லை.

    எனக்கு யாருமில்லை. எப்படியாவது என் கணவரை காப்பாற்றி கொடுங்கள் என்று அந்த பெண் கண்ணீர் விட்டு கதறுவது கல் நெஞ்சையும் கரைய வைக்கிறது.

    இயற்கை பேரிடர்களும், பேரழிவுகளும் யாருக்கு எப்போது வரும் என்று தெரியாத நெருக்கடியான சூழலில் வாழ்கிறோம்.

    உதவி செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் உதவி கேட்டு செல்பவர்களிடம் இது எங்கள் சம்பந்தப்பட்டது அல்ல என்று சொல்ல எப்படி மனம் வருகிறது? எல்லோரும் அரசு ஊழியர்கள்தான்.

    இந்த மக்கள் பணத்தில் வாழ்பவர்கள் தான் என்பதை உணர வேண்டும். எந்த துறையை, யாரை தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களை நீங்களே தொடர்பு கொண்டு உதவி செய்யலாமே. ஆபத்தில் தவிப்பவர்களை அலைக்கழிக்க வைக்கலாமா?

    சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவஹரி (வயது31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (26). இருவரும் நேற்று இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு திருவாமூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாமூர் ரோட்டில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டு கொண்டு வெளியே வந்தனர். அப்போது திருச்சியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதனால் படுகாயம் அடைந்த சிவஹரியும் சந்திரலேகாவையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
    • குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

    அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.

    துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

    • பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து வந்தன.

    இதனை பார்த்த பொதுமக்கள் இரு உடல்களையும் மீட்டனர்.

    உடனடியாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இருவரும் தாய், மகளா ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பெண், இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வீழிவரதராஜப்பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் மனைவி வஹிதா ரகுமான்(வயது58). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செய்யது இப்றாஹிம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இதனால், வஹிதா ரகுமானுடன், தங்கை ரஹமத் நிஷா(49) மற்றும் தாய், தந்தை சகோதரனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், சமீபகாலமாக, தங்கை ரஹமத் நிஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து, வஹிதா ரகுமான் நேற்று முன்தினம் மாலை, தங்கை ரஹமத் நிஷாவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திருக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரஹமத் நிஷா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற அவர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×