search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல்"

    • 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
    • தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால் அந்த அலை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    ஆம். 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக கடற்கரை வாழ் மக்களால் மறக்க இயலாது. அன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.

    குமரி மாவட்டத்தில் சுனாமியில் சிக்கி கடலோர கிராமங்களான குளச்சல் , கொட்டில்பாடு, மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    பலர் காணாமல் போனார்கள். குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.


    இதேபோன்று மணக்குடி கிராமத்தில் 119 பேரும், கொட்டில்பாடு பகுதியில் 140-க்கும் மேற்பட்டோரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்ப்பட்டு உள்ளன.

    இந்த நினைவு ஸ்தூபியில் ஆண்டுதோறும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும் அன்றைய தினம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுவாக உள்ள சுனாமி தாக்கி இன்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று காலை சுனாமி நினைவு ஸ்தூபிகளில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரி வேணி சங்கமம் கடற்கரை யில் அமைந்து உள்ள சுனாமி நினைவு சின்ன த்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு. குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் ஆகி யோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி னார்கள்.

    இதில் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணக்குடியில் இன்று காலை 7 மணிக்கு அங்குள்ள புனித அந்தி ரேயா ஆலயத்தில் நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமை யில் நடந்த இந்த திருப்பலி யில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். 119 பேரை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு வந்ததும் அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் இன்று காலை 7 மணி அளவில் சுனாமி காலனியில் இருந்து மவுன ஊர்வலம் பங்குத் தந்தை ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் 199 பேர் அடக்கம் செய்யப் பட்ட கல்லறைதோட்டத்தில் இறந்தவர்களின் நினை வாக மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலை அணிவித்தும். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட ஜவான்களும் கலந்து கொண்டனர்.

    கொட்டில் பாடு புனித அலெக்ஸ் ஆலய பங்குத்தந்தை, ராஜ் பிரார்த்தனை செய்தார். குளச்சலில் இன்று இரவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 

    • வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு
    • மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

    குளச்சல் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்கராமன் அறிவுரைப்படி குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கள் சுரேஷ்குமார், பாலசெல்வன் உள்ளிட்ட போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 4 நாட்களில் குளச்சல், கருங்கல், இரணியல், தோட்டியோடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மது குடித்து வாகனம் ஓட்டிய டிரைவர்கள், இரணியல் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அமீர்தீன் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர், வழக்குகளை விசாரித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்

    • கப்பல் மூலம் தேட முடிவு
    • 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28-ந்தேதி நள்ளிரவு ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் எதிர்பாராமல் திடீரென கடலில் மூழ்கியது. இதனால் கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது.

    இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில், கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30-ந்தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொச்சி கப்பற்படையிலிருந்து கப்பல் வரவழைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கப்பற்படை அதிகாரிகள் மணப்பாடு கடல் பகுதி விசைப்படகு மூழ்கிய பகுதியில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். கப்பல் தேடும் பணியை தொடங்கும் முன் அங்கு ஆய்வு நடத்தப்படுவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அல்லது நாளை கொச்சியிலிருந்து கப்பல் மணப்பாடு கடல் பகுதிக்கு செல்லும் என துறைமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் மீட்கப்படாதது மீனவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • ரவுடி உள்பட 2 பேர் கைது
    • கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வெட்டு மடை மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் கடந்த சனிக்கிழமை காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. குத்துவிளக்கு களும் திருடப்பட்டிருந்தன. கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பவர் படுகாயத்துடன் கிடந்தார்.

    இதை பார்த்த வேலாயுதம் காயத்துடன் கிடந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்குதலில் கணேசன் இறந்திருப்பது தெரியவந்தது.

    இசக்கியம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய கொள் ளையர்கள், மண்டைக்காடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் வெட்டு மடை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளை யர்கள் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்திய போது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த உருவம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 2 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் குளச்சல் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கர், குமார் என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவாஸ்கர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட கவாஸ்கர், குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது.
    • விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • 65 கிலோ பறிமுதல்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள்.

    நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப்டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலை மையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். 4கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 40 கிலோ குட்கா புகை யிலை பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமை யாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த குட்கா புகையிலையை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மார்த்தாண்டம் இரணியல் குளச்சல் தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    குட்கா புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் கடையில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 66 கிலோ புகையிலை பறிமுதல் செய்ததுடன் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×