என் மலர்
நீங்கள் தேடியது "துறைமுகம்"
- பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை ஒட்டி பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
- கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.
ஆபரேஷன் சிந்தூா் எதிரொலியாக நேற்று இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்க்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் அதிநவீன போர்க் கப்பலான விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவை போலியானவை என்று உண்மை சரிபார்ப்பு மூலம் தெரிய வருகிறது. காசாவில் 2020 நடந்த தாக்குதலின் புகைப்படத்தை தவறாக கராச்சி துறைமுகம் என்று பகிரப்படுவதாக தெற்காசியாவில் தவறான தகவல் போக்குகளைக் கண்காணிக்கும் அங்கிதா மஹலனோபிஷ் தெரிவித்தார்.
மேலும் எக்ஸ் தளத்தின் குரோக் சாட்பாட்டும் இதை அவை போலியானவை என்று உறுதி செய்துள்ளது. மேலும் கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.
- பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்
- பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறை முகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
- ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
- பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
டெஹ்ரான்:
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
- பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
டெஹ்ரான்:
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்தது தெரிய வந்துள்ளது.
- கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம்.
- வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்
ஈரானின் தெற்கு பிராந்தியமான பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜேய் துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு எழும்பி யது.
மேலும் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டன.
இந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள் என்றும் 700 பேர் காயம் அடைந்தனர் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. 750-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இந்த எரிபொருள் சீனாவிலிருந்து 2 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்ட அம்மோனியம் பெர்க்ளோரேட்டின் ஒரு பகுதியாகும் என்று கூறப்படுகிறது.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் திட எரிபொருளை கொண்டு வந்த கப்பலை முறையற்ற முறையில் கையாண்டதன் விளைவாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தனியார் பாதுகாப்பு நிறு வனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
இந்த வெடிவிபத்து சத்தம் சுமார் 50 கி.மீ தொலைவுக்கு கேட்டது. இதில் பல துறைமுக கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
இதற்கிடையே வெடி விபத்து காரணமாக அம்மோனியா, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற ரசாயனங்களால் காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜேய் துறைமுகம், எண்ணை மற்றும் பெட்ரோ கெமிக்கல்களை கையாளும் வசதிகள் கொண்ட, மிகப் பெரிய கண்டெய்னர் போக்குவரத்துக்கான முக்கிய துறைமுகமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
- ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
- பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
டெஹ்ரான்:
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
ரஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரான் துறைமுக வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான்-அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் - அமெரிக்கா, ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
- ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
ராஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி மெஹ்ர்தாத் ஹசன்சாதே ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில், துறைமுகத்தில் ஒரு பெரிய கரும்புகை மேகம் காணப்பட்டது. ராஜாய் துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுகிறது, மேலும் எண்ணெய் தொட்டிகள் மற்றும் பிற பெட்ரோ கெமிக்கல் வசதிகளையும் கொண்டுள்ளது.
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும், மேலும் எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில், பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
- மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரி:
குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
கடலூர்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.
- தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது.
- மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
வங்கக் கடலில் ஏற்பட்டு ள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டல மாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்ட லம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலை விலும் காரை க்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக நாகப்பட்டினம், காரை க்கால், சென்னை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் புயல் கூண்டு திடீர் காற்றுடன் மழை பெய்திடும் என்பதை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றமாக காணப்படு வதால் மீன்வளத் துறையில் எச்சரிக்கை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லவில்லை
- குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 விசை படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசை ப்படகுகள் ஆழ் கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதி யில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை.
அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படா ததால் சில படகுகள் குமரி மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்து வருகின்றன.
இது தவிர காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாது காப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.
இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.






