என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan"

    • பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர்.
    • வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

    பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். ஹெசன் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஏஎல்) நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    50 வயதான இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி கூறியதாவது:-

    பாகிஸ்தானின் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது நிபுணத்துவத்தையும் தலைமையையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று நக்வி கூறினார்.

    பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளராக முன்பு நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன், கில்லஸ்பி உள்ளிட்டோர் சில நாட்களிலேயே பதவியில் இருந்து விலகிய நிலையில், இடைக்கால பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்
    • சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் எனக் கூறி இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய அவர், "பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பது போல் வளர்த்தெடுத்து வருகிறது; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
    • அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம்.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் மந்திரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை.

    இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.

    • உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் என்பவர் ஒரு சாதார மனிதர்
    • ஹபீஸ் அப்துல் ரவூஃப் தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

    காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ் தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் தீவிரவாதிகள் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இவர்களது இறுதி சடங்கு பாகிஸ்தானில் உள்ள முரிட்கே பகுதியில் நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டி னன்ட் ஜெனரல் பயாஸ் ஹூசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிக்கே டியர் முகமது புர்கான், பஞ்சாப் மாகாண காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் உஸ்மான் அன்வர் மற்றும் மாலிக் சோஹைப் அகமது ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த இறுதி சடங்கில் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப் பட்ட ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட குவாரி அப்துல் மாலிக், காலித், முதாசீர் ஆகியோர் ஜமாஅத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாகவும், முரிட்கேயில் உள்ள மசூதியின் காப்பாளர்களாகவும் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களின் உடல்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மட்டு மின்றி பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்-மந்திரி மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மருமகள் ஆகியோர் கலந்து கொண்டு, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தனர்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைபாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த வீடியோ மூலம் சர்வதேச தீவிரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூப் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஹபீஸ் அப்துல் ரவூப் 1999-ம் ஆண்டு முதல் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினராகவும், தடை செய்யப்பட்ட பலா-இ-இன்சானியத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடை பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஹபீஸ் அப்துல் ரவூப்பை 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்ட சாதாரண மனிதர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தானில் பொதுச்சேவைகள், பொது உறவுகள் அமைப்பின் அதிகாரியான அகமது செரீப் சவுத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹபீஸ் அப்துல் ரவூப் 1973-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்" என காட்டினார்.

    இதற்கிடையே, ஆபரே ஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படத்தை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டு பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை காட்டுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

    • பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
    • இன்று பிற்பகல் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் இன்று பிற்பகஙல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

    இன்று பிற்பகலில் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால், ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

    உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை. 

    • இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 32 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது.
    • இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    இதனால் இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 32 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது. இதில், சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், தரம்சாலா, பதிண்டா, ஜோத்பூர், ஜாம் நகர், பூஜ், ஆதம்பூர், அம்பாலா, ஹல்வாரா, ஹிண்டன் காசியாபாத், கண்ட்லா, கங்ரா, கேசோட், குலுமணாலி, முந்த்ரா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.

    இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
    • இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
    • அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கடந்த 7-ந்தேதி இரவு இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டன. இதில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் நடுவானில் தடுத்து அழித்தன. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.

    அதே சமயத்தில் 8, 9, 10-ந்தேதிகளில் 3 நாட்கள் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியாவின் முப்படைகள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டன. 4 நாட்கள் நடந்த தொடர் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்தது.

    நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், 35-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இதனால் 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேற்றும், இன்றும் போரில் தாங்கள் வெற்றி பெற்றது போல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக ஆதாரப்பூர்வ செய்திகள் இன்று வெளியிடப்பட்டன.

    அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமானப்படை நிலையங்கள், ரேடார் சாதனங்கள் இருந்த பகுதிகள், முன்பு எப்படி இருந்தன? இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு அவை எப்படி உருக்குலைந்து கிடக்கின்றன என்பதை செயற்கை கோள் படங்களை வெளியிட்டு இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 11 ராணுவ தளங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக தெரிய வந்தது.

    அது மட்டுமின்றி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்ட செயற்கைகோள் படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தலைமை பயிற்சி முகாம் தரைமட்டமாக்கப்பட்ட படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த அடி கொடுத்து இருப்பதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய விமானப்படை நேற்று முன்தினம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி வரை ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தின் ரேடார் நிலையம், வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அழித்து இருப்பதற்கு இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் போலாரி விமானப்படை தளம் இந்திய ஏவுகணைகளால் துவம்சம் செய்யப்பட்டது. செயற்கைகோள் படங்கள் மூலம் துல்லியமாக தெரிய வந்துள்ளன. அந்த விமானப்படை தளத்தில் கட்டிடங்கள் நொறுக்கப்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக பாதுகாப்பு அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.

    சீன செயற்கைகோள் படங்களும் பாகிஸ்தானில் விமானப்படை தளங்கள் நொறுக்கப்பட்டு இருப்பதை துல்லியமாக காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நூகான் விமானப்படை தளம் பெரும்பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கான செயற்கைக் கோள் படத்தையும் இந்தியா வெளியிட்டு இருக்கிறது. இந்த விமானப்படை தளத்தில் ஓடும் தளங்கள் முற்றிலும் சேதம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை இனி பயன்படுத்த இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டதன் எதிரொலியாகத் தான் பாகிஸ்தான் பயந்து பணிந்து அமெரிக்காவுடன் கெஞ்சி இந்தியாவுடன் சமரசம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது. அதோடு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துக்கொண்டது.

    இதற்கிடையே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 19 நாட்களாக பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று பீரங்கி தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் எல்லையில் அமைதி நிலவியது.

    மீண்டும் பீரங்கி தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முப்படை தளபதிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை விளக்கம் அளிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

    • 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
    • இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும்.

    பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி நேற்று விளக்கம் அளித்தார்.

    அப்போது ஆபரேசன் சிந்தூர நடவடிக்கையின் போது ரஃபேல் விமானம் உட்பட ஏதேனும் தளங்களை இந்தியா இழந்ததா என்று ஏ.கே.பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? என்பது தான். அதற்கான பதில் ஆம். இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும். நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

    நாங்கள் குறிவைத்த இலக்குகளை அடைந்துவிட்டோம், எங்கள் அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது

    இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அரசின் தலையீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

    ×