search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி பரேசி- மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வெஸ்லி பரேசி அவுட் ஆனார். இதனையடுத்து கேம்ஸ் ஓ டாவ்ட் - அகேர்மான் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓ டாவ்ட் 43 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் அகேர்மான் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். 92 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர்.

    சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டுமே நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நபி 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் மற்றும் சத்ரான் முறையே 10 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகமத் ஷா தன் பங்கிற்கு 52 ரன்களையும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிடி 56 ரன்களையும் குவித்தனர்.

    போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் ஷஹிடி 56 ரன்களுடனும், உமர்சாய் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழ்வாதாரத்திற்காக ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்
    • வெளியேற பாகிஸ்தான் விதித்த கெடு நவம்பர் 1-உடன் முடிவுக்கு வந்தது

    1979ல் ஆப்கானிஸ்தானை ரஷியா ஆக்கிரமித்தது. 1979லிருந்து 1989 வரை அமெரிக்க உதவியுடன் ஆப்கானிஸ்தான் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வந்தது. பல வருடங்கள் நடைபெற்ற இந்த போரின் விளைவாக பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால், வாழ்வாதார காரணங்களுக்காக அங்கிருந்து பலர் வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

    கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மேலும் பலர் அந்நாட்டிலிருந்து அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகப்பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு கடன் வழங்கும் உலக நிதி அமைப்புகள் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்றுடன் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற ஆப்கானியர்களுக்கு பாகிஸ்தான் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது.

    எந்த ஆவணங்களும் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அகதிகளுக்கான அட்டை வைத்துள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், அட்டை வைத்துள்ளவர்களும் குறி வைக்கப்படுவதாக பல அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கடந்த 2 மாத காலத்தில் சுமார் 2 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டனர்.

    வெளியேற்றப்படும் ஆப்கானியர்களில் பெரும்பாலானோர் கூலிப்பணிகளில் ஈடுபட்டு வறுமையில் வாழ்ந்து வந்ததால், அவர்களிடம் சேமிப்புகளோ, வேறு பொருட்களோ இல்லாமல் கேள்விக்குறியாகும் எதிர்காலத்துடன் டிரக்குகளில் அடைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் கொண்டு விடப்படுகின்றனர். அவர்களின் கண்ணீர் கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பெண்களுக்கு கடுமையான கோட்பாடுகளை வலியுறுத்தும் தலிபான் ஆட்சி நடைபெறுவதால் அங்கு செல்ல அஞ்சும் மக்கள், பாகிஸ்தானில் வசிக்க இயலாமல் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் என சுமார் 4 லட்சம் ஆப்கானியர் பாகிஸ்தானில் வசிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தலிபான் அரசாங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால், 40 ஆண்டு காலம் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இடம் கொடுத்து விட்டதாகவும், இனியும் அதை தொடர முடியாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாக பதிலளித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
    • சனிக்கிழமை நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    இந்த நிலையில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது.
    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டி வங்காளதேசம் அணியுடன் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

    2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணியினருக்கு பட்டாடை அணிவித்து பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன.

    ஆப்கானிஸ்கான் அணி உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தர்மசாலாவில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இது உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி ஆகும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா சாஹிதி கேப்டனாக இருக்கிறார். இவர் தவிர ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சாட்ரான், ரியாஸ் ஹாசன், ரகமது ஷா, நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகிள், அசமதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரகுமான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சட்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சட்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுக்கலாம்.
    • சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது ஆப்கானிஸ்தானுக்கு தெரியவில்லை.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஆட்ட அதிகாரிகளால் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆப்கானியர்கள் கூறினர்.

    37 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. சூப்பர் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நுழைய ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தகவல் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 37-வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் தூக்கி அடித்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனால் நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த ரஷித் கான் போட்டி முடிந்து விட்டது என சோகத்தில் இருந்தார்.

    ஆனாலும் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுத்தால் கூட ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அதிகமாகி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இந்த தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ட்ராட் கூறியுள்ளார்.

    இது குறித்து ட்ராட் கூறியதாவது:-

    கூறப்பட்ட நிபந்தனைகளை அதிகாரிகள் தனது அணிக்கு தெரிவிக்கவில்லை. அந்த கணக்கீடுகள் எங்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 295 அல்லது 297 ரன்களைப் பெறலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
    • ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கையும், ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

    இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும்.

    தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் சேர்க்கிறது என்றால், எதிரணியை குறைந்தது 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். இதே போல் இலக்கை விரட்டிப் பிடிக்கும் (சேசிங்) நிலை ஏற்பட்டால் 35 ஓவருக்குள் எட்ட வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டில் முன்னிலை பெற முடியும். லாகூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்கானானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ஆப்கனில் இதுவரை 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது.

    ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. இதனையடுத்து, சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.

    தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சி, அங்கு அதுவரை ஆட்சி செய்து வந்த அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டே வெளியேறினார்.

    அதற்கு பிறகு தற்போது வரை நடைபெறும் தலிபான்கள் ஆட்சியில் மனித உரிமைகளை கண்டு கொள்ளாமல் பல கடுமையான சட்டங்களை அந்த அரசாங்கம் போட்டிருக்கிறது. இவற்றை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில் உனாமா (UNAMA) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தானுக்கான உதவும் அமைப்பு, அங்கு நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்தும், தலிபான்களின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவம், சட்டம் மற்றும் அரசாங்க அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேரை தலிபான் கொன்றிருக்கிறது. தலிபானின் பழைய எதிரிகள் என கருதப்படும் ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இதை மீறும் விதமாக இவை அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளன."

    "சுமார் 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் பாதிக்கும் மேல் தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களுக்காகவே நடைபெற்றிருக்கிறது. அனேக குற்ற செயல்களுக்கு குற்றவாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளைவுகளை பற்றி கவலைப்படாமல் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் அழிக்கப்படுவது தொடர்ந்து வருவது கவலைக்குரிய ஒன்று."

    "முன் அறிவிப்பின்றி கைது செய்தல், சித்தரவதை செய்தல் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் சம்பந்தமான 800-க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறோம். காபுல், காந்தகர் மற்றும் பால்க் பிராந்தியங்களில் இவை அதிகமாக நடைபெற்று இருந்தாலும், 34 பிராந்தியங்களிலும் இவை பதிவாகியுள்ளன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தலிபான் அமைப்பு, "முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த அரசாங்க மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என மூத்த தலிபான் தலைவர்கள் முடிவு செய்தனர். இது மீறப்பட்டதாக எங்கும் புகார்கள் வரவில்லை. முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த யாரும் முறையற்ற வழியிலோ, நீதிக்கு புறம்பாகவோ கைது செய்யப்படவோ, காவலில் வைக்கப்படவோ, சித்தரவதை செய்யப்படவோ இல்லை," என்று தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சமீபத்திய மாதங்களில் நகர்ப்புற மையங்களில் நடந்த பல பெரிய தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.