என் மலர்tooltip icon

    உலகம்

    ஆப்கானிஸ்தானில் 5.8  ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
    X

    ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    • 90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
    • 2025ல் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

    ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாஞ்ச்ஷீர் மாகாணத்தை மையமாகக் கொண்டு 90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    உள்ளூர் நேரப்படி மாலை 5:40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காபூல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நங்கர்ஹார், பமியான், வர்தக் போன்ற மாகாணங்களில் உணரப்பட்டன.

    காபூலின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தை தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    முன்னதாக, ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 2025ல் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×