search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earthquake"

    • நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.
    • சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    கரீபியன் தீவு கடலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையில் இருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் தொடர்பான விவரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.

    எனினும், போர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிக்கையில், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டா ரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியில் இருந்து 620 மைல்களுக்குள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட "அபாயகரமான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    • நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.
    • சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர்.

    ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள கிரீஸ் நாட்டின் சாண்டோரினி தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.

    கடந்த ஒரு வாரத்திற்குள் 7,700 நிலநடுக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், புதன்கிழமை இரவு பதிவான நிலநடுக்கமே சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது.



    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டது. இந்த அவசர நிலையானது மார்ச் 3-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர். சுமார் 7ஆயிரம் பேர் படகு மூலமாகவும், 4ஆயிரம் பேர் விமானம் மூலமாகவும் புறப்பட்டனர். 

    • மியான்மரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது.

    நைபிடால்:

    மியான்மரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலநடுக்கத்தால் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்தது.
    • பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    தைபே:

    தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதில் 27 பேர் காயமடைந்தனர்.

    தைவானில் நள்ளிரவில் தாக்கிய நிலநடுக்கமானது யூஜிங்கிற்கு வடக்கே 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்ததாகவும், 27 பேர் படுகாயமடைந்ததாகவும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    தைவானில் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிடுநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் கட்டிடங்களை கடுமையாக சேதப்படுத்தியதுடன் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள கைஷூ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 37 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இதனை ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் தென் மேற்கு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    • பிலிப்பைன்ஸ் நாட்டி டெல் சுர் மாகாணத்தில் ஹினதுவான் உள்ளது.
    • இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    பிலிப்பைன்சில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் உள்ள ஹினதுவானில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. 

    • திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தை நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஷிகாட்சேவை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் ஷிகாட்சே நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளை கடுமையாக உலுக்கியது. வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 126 பேர் பலியாகினர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    சீன அதிபர் ஜின்பிங்கின் உத்தரவின்பேரில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்த்து வருகின்றனர்.

    கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே திபெத்தில் நேற்று முன்தினம் முதலில் 6.8 புள்ளிகள் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 500-க்கும் அதிகமான முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாக சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 8-ந் தேதி காலை 8.00 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகளுக்கு கீழே இருந்தன. 24 நிலஅதிர்வுகள் 3.0 முதல் 3.9 புள்ளிகள் வரையிலும், 27 நிலஅதிர்வுகள் 4.0 முதல் 4.9 புள்ளிகள் வரையிலும் பதிவாகின" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திபெத்தில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மடோய் நகரில் உள்ளூர் நேரப்படி மாலை 3.44 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் நேற்றைய நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

    • அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
    • இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.

    திபெத்தில் நேற்று [செவ்வாயன்று] எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்  குறைந்தது 126 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    டிங்ரி கவுண்டியில் காலை 6:35 மணிக்கு இமயமலைக்கு சுமார் 80 கி.மீ. வடக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நேபாளம், பூடான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சீன அதிகாரிகளால் 6.8 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வில் 7.1 ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் லாசா தொகுதியில் [Lhasa block] ஏற்பட்ட உடைவால் தூண்டப்பட்டது. இது குறிப்பிடத்தக்க டெக்டோனிக் அழுத்தத்தின் கீழ் உள்ள பகுதியாகும்.

    கடந்த 60 மில்லியன் ஆண்டுகளாக இமயமலையின் வடிவத்தை தீர்மானித்து வரும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் தொடர்ச்சியான மோதல் காரணமாக இந்த பகுதி அதிக நில அதிர்வு ஏற்படும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் திபெத் பல நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது. இங்கு 1950 இல் 8.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மற்றும் திபெத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இதில் 4,800 பேர் உயிரிழந்தனர்.

    டெக்டானிக் தகடுகள் அல்லது நிலத் தட்டுகள் (tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலின் அடிப்பகுதியும் பகுதியும் இணைந்த பாறைகளால் ஆனவை. புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ அடர்த்தியினைக் கொண்டன. 

     

     

    • திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படை விரைந்து சென்றது.

    புதுடெல்லி:

    திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

    இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு இந்திய அரசும் மக்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அங்குள்ள ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

    இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

    மக்கள் கடும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

    திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது எனவும், 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பீஜிங் நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு நேபாள எல்லைக்கு அருகே திபெத் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத் நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

    இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதால் அந்த பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமாகும். இன்று காலை திபெத் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து 6 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    முதல் நில அதிர்வு அதேபகுதியில் காலை 7.02 மணிக்கு 4.7 ரிக்டர் அளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. பிறகு காலை 7.07 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் 30 கி.மீ. ஆழத்திலும் நில அதிர்வு பதிவானது. அதன்பின் திபெத்தின் 2-வது பெரிய நகரமான ஷிகாட்சே நகரில் 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுபோன்று 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    நேபாள நாட்டின் லொபுசே என்ற மலைப் பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் காலை 6.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் திபெத்தில் உள்ள ஷிகாட்சே நகரில் மையம் கொண்டு ஏற்பட்டது. இப்பகுதி நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே உள்ளது.

    நேபாள தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல் நிலநடுக்கம் மேற்கு சீனாவின் சில பகுதிகளிலும் ஏற்பட்டது.

    திபெத் மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்ததால் அவர்கள் நிலநடுக்க பாதிப்புக்குள்ளானார்கள்.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற பீதியில் வீடுகளுக்கு செல்லாமல் சாலைகளிலேயே இருந்தனர்.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திபெத், நேபாளத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திபெத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. திபெத்தின் மலைப்பகுதியில் நிலநடுக்கம் உண்டானதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியும் நடந்தது.

    திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா, முங்கர், அராரியா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச், வைஷாலி, நவாடா மற்றும் நாளந்தா உள்ளிட்ட பல பகுதிகளில், சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இதேபோல் மற்ற பகுதிகளிலும் சில வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் வங்காளதேசம், பூடானிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.

    • நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீதிகளுக்கு வந்தனர்.

    நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 



    ×