என் மலர்
ஆந்திர பிரதேசம்
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
- கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி அடுத்த ராவ் பள்ளியை சேர்ந்தவர் சிம்மாசலம் (வயது 25). இவரது மனைவி பவானி (19). இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
சிம்மாசலம் உள்ள ஜகத்கிரி குட்டாவில் தங்கியிருந்து ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.
கணவன், மனைவி இருவரும் ரெயிலின் வாசல் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர். ரெயில் புவனகிரி அடுத்த வாங்க பள்ளி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கணவன், மனைவி இருவரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த 17 வயது சிறுவன், மேலும் மது வாங்க ரூ.10 கேட்டுள்ளார்.
ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த தாத்தாஜி (49) என்ற நபர் நேற்று முன்தினம் மதுக்கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போதையில் தள்ளாடியபடி வந்த 17 வயது சிறுவன், மேலும் மது வாங்குவதற்காக தாத்தாஜியிடம் 10 ரூபாய் கேட்டுள்ளான். தாத்தாஜி பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாத்தாஜி அந்தச் சிறுவனை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சிறுவன், அங்கிருந்து சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து, மதுக்கடைக்கு சற்று தொலைவில் வைத்து தாத்தாஜியை சரமாரியாகக் குத்தினான். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சனை தொடங்கியது.
- கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது.
திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்ணின் குணத்தை பார்ப்பதில்லை, அவளது நிறத்தைதான் பார்க்கிறார்கள். மணப்பெண் கொண்டு வரும் வரதட்சணையையும், சீர் வரிசைகளையும்தான் பார்க்கிறார்கள்.
அந்த வகையில் கருப்பு நிறமாக இருப்பதால் தனது மருமகளை மாமியார் தனது வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
அங்குள்ள பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சனை தொடங்கியது. கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது. மாமனார், மாமியாரும் துன்புறுத்தியதாக தெரிகிறது.
திருமணத்தின்போது 25 பவுன் தங்கநகையும், ரூ.12 லட்சமும் கோபிலட்சுமியின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கருப்பாக இருப்பதால் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கோபிலட்சுமியை வீட்டை விட்டு மாமியார் விரட்டி விட்டதாக தெரிகிறது.
இதை கண்டித்து கோபிலட்சுமி தனது கணவர் வீட்டின்முன்பு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே கணவரும் மாமனார், மாமியாரும் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதையடுத்து கோபிலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கணவர் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
- இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு நாராயணமூர்த்தி (54)
இவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி சாலையில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை விபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டதாக நாராயண மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாராயணமூர்த்தியின் உடல் மீது இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஆறு மாதங்களுக்கு முன்பு நாராயணமூர்த்தியின் பெயரில் பல்வேறு எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ரூ.1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் பாலிசிகள் பெறப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
நாராயண மூர்த்தி இறந்தால் காப்பீட்டுத் தொகை தங்களுக்கு வந்துவிடும் என்ற பேராசையில் மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர்களை கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
- 37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
- னித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.
37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தனியார் பேருந்தில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பயணிகள் இருந்தனர். இந்தக் குழு புனித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு பேருந்து வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை வழியாகச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்ததோடு, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர், காயமடைந்த பயணிகள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
- விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டினார்.
- மாதந்தோறும் 5-ம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ஸ்ரீதேவி. மகன் வேத சாய் தத்தா (வயது 13).
வேத சாய் தத்தா கடந்த 2016-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார். பாசத்துடன் வளர்த்த மகன் இறந்துவிட்டதால் பெற்றோர்களால் வலியில் இருந்து மீள முடியவில்லை. மகன் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி கிழக்கு கோவதாரி மாவட்டம், கொருக்கொண்டா அடுத்த கனுப்பூரில் உள்ள விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டினார்.
ரூ.45 லட்சம் செலவில் பளிங்கு கற்களால் நினைவிடம் கட்டப்பட்டது. அதற்கு வேத சாய் தத்த மந்திர் என பெயரிட்டனர். சுற்றிலும் பூந்தோட்டம் அமைத்தனர்.
மகனின் நினைவாக ஓம்காரேஸ்வரர் அறக்கட்டளை நிறுவி ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளனர். மாதந்தோறும் 5-ம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
- திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார்
- ஸ்ரேயாவிக்ரு தற்போது பெண் குழந்தை உள்ளது.
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை ஸ்ரேயா குறைத்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்தார். தற்போது நான் வயலன்ஸ் படத்தில் கனகா பாடலுக்கு ஸ்ரேயா நடனமாடியிருந்தார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
- விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார்.
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் தொடர் நாயகன் விருது வென்று தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
3 ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், அந்த ஊரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வருகிறது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.
விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.






