என் மலர்
நீங்கள் தேடியது "கணவன் கொலை"
- கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கொலை செய்த பரகா போராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணஜோதி போரா. இவரது மனைவி பரகா போரா. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் வந்தனர். நர்சிங்கி, கோகோ பெட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்தது. இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. கணவர் தினமும் தன்னிடம் தகராறு ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ண ஜோதி போரா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நர்சிங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கொலை செய்த பரகா போராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கணவர் கன்னத்தில் அறைந்ததால் ரேணுகா கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், விகாராபாத்தை சேர்ந்தவர் குமார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேணுகா.
நேற்று விடுமுறை என்பதால் குமார் வீட்டில் இருந்தார். அப்போது அவரது மனைவி ரேணுகா புதியதாக சேலை வாங்கி தரும்படி கணவரிடம் கேட்டார். அதற்கு குமார் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குமார் தனது மனைவியை கன்னத்தில் அறைந்தார். கணவர் கன்னத்தில் அறைந்ததால் ரேணுகா கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
வீட்டு சமையலறைக்கு ஓடிய ரேணுகா அங்கிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் கண்ணில் வீசினார். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் ரேணுகா புடவையை எடுத்து கணவரின் கழுத்தில் சுற்றி இறுக்கினார். இதில் அவர் துடி துடித்து இறந்தார்.
பின்னர் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கணவரை கொலை செய்து விட்டதாக கதறி துடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரேணுகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.
- மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
டெல்லி உத்தம் நகரை சேர்ந்தவர் கரண் தேவ் (வயது 36). இவரது மனைவி சுஷ்மிதா. கரண்தேவின் உறவினர் ராகுல் (24). ராகுல் அடிக்கடி சகோதரர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
அப்போது சுஷ்மிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கரண்தேவ் வேலைக்கு சென்ற பிறகு சுஷ்மிதா ராகுலுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கரண்தேவுக்கு தெரியவந்தது.
கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட சுஷ்மிதா முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 13-ந்தேதி இரவு கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட கரண் தேவ் சாகாமல் மயங்கி கிடந்தார்.
சுஷ்மிதா, ராகுலுக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கரண் தேவின் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை செய்தனர்.
இதையடுத்து கரண் தேவை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கரண்தேவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கரண்தேவின் உறவினர்களிடம் மின்சாரம் தாக்கியதில் கணவர் இறந்து விட்டதாக சுஷ்மிதா தெரிவித்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
இந்த நிலையில் கரண்தேவின் சகோதரர் குணால் சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தார். அதில் சுஷ்மிதா ராகுலுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்தது தெரியவந்தது. மேலும் கணவரை கொலை செய்வது குறித்து ராகுலுடன் ஆலோசித்ததும் தெரிந்தது.
போலீசார் சுஷ்மிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார்.
- போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
திப்தூர் நகரில் உள்ள கல்பதரு கல்லூரியின் பெண்கள் விடுதியில் சமையல்காரராக சுமங்கலா பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் சமையல் உதவியாளராக கரடலு சாந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏறப்பட்டது. 2 பேரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த சங்கரமூர்த்தி மனைவி சுமங்கலாவை கண்டித்தார். இது பற்றி சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவிடம் தெரிவித்தார். தகாத உறவுக்கு சங்கரமூர்த்தி ஒரு தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய சுமங்கலாவும், நாகராஜுவும் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அதன்படி கடந்த 24-ந்தேதி இரவு சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். பண்ணை வீட்டில் சங்கரமூர்த்தி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கால்களை நாகராஜூ இறுக்கமாக பிடித்துக் கொண்டார். சுமங்கலா, கணவரின் கண்களில் மிளகாய் பொடி, உப்பு பொடி கலந்து ஊற்றினார். இதனால் சங்கரமூர்த்தி சத்தம் போடவே, அவரை கம்பால் அடித்து அவரது கழுத்தை மிதித்து துடிக்க, துடிக்க சுமங்கலா கொலை செய்தார்.
பின்னர் சுமங்கலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று அங்கே வீசினர். பின்னர் எந்த சந்தேகமும் ஏற்படாதபடி இருவரும் கிராமத்திற்கு திரும்பினர்.
இதையடுத்து சுமங்கலா தனது கணவர் மாயமானதாக நோனவினகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சங்கரமூர்த்தி மீது காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முதலில் சுமங்கலாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆராய்ந்த போலீசார் சுமங்கலாவின் கள்ளக்காதல் மற்றும் கொடூரமான சதித்திட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சங்கரமூர்த்தியின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சங்கரமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் மிளகாய், உப்பு பொடி மற்றும் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டன.
இதனால் போலீசார் சுமங்கலாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியை கொலை செய்ததை சுமங்கலா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சங்கரமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மனைவி மிளகாய், உப்புப் பொடியை ஊற்றி, அவரது கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார்.
- நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
காஜியாபாத்:
டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரில் வசிக்கும் சோட்டேலால் என்பவர், கடந்த 10-ந்தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பாலை (வயது 42) ஒரு வாரமாக காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.
சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். சதீஷ்-நீத்து குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.
கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க அவர்கள் தீர்மானித்தனர்.
அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டிவிட்டனர்.
கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தநிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கள்ளக்காதலனுடன் பெண் நீத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.
'திரிஷ்யம்' பட பாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை அருகே கணவனை கொன்ற வழக்கில் தனிப்படை போலீசார் பெண்ணை தேடி வருகின்றனர்.
- உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.
திருப்பரங்குன்றம்
தனக்கன்குளம் திருவள்ளு வர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.
இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரையின் மகன்கள் சுந்தர பாரதி மற்றும் ராஜ்குமாரை சந்தேகத்தின் போது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அன்னலட்சுமி மட்டுமே கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்
- பெண்ணை ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் 2 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
சுரே சுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் கண வன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 14-ந் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் மனை வியை சரமாரியாக தாக்கினார்.
ஆத்திரம் அடைந்த லதா வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து வந்து சுரேஷ் மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் உடல் முழுவதும் தீப் பற்றியது. இதனால் சுரேஷ் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குவந்த சுரேஷ் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் லதா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
- சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
வேண்டா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சந்தானம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதுமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று காலை மது குடித்துவிட்டு வந்த சந்தனத்துடன் தகராறு செய்த வேண்டா ஆவேசத்துடன் அங்கு இருந்த அம்மிக்கலை தூக்கி சந்தனத்தின் தலையில் போட்டார். மேலும் கோபம் அடங்காமல் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்தார். இதில் சந்தானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சந்தானம் இறந்ததை உறுதிப்படுத்தி கொண்ட வேண்டா பின்னர் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் பாரதி (வயது 35). இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். இதில் பாரதி மட்டும் சென்னையில் தங்கியிருந்து ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக பாரதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போதும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் திருவிழாவுக்கு வந்திருந்த பாரதியை காணவில்லை என அவரது உறவினர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் திவ்யாவும், அவரது கள்ளக்காதலன் கீழ்மாந்தூர் ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் ( 38) என்பவரும் சேர்ந்து பாரதியை கழுத்தை நெறித்து கொன்று பாலத்தின் அடியில் புதைத்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசாரிடம், மேலும் திவ்யா கூறிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு :-
எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும். அவர் சென்னையில் வேலை பார்த்தாலும் போனில் பேசும் போதெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.
அந்த சமயத்தில் எங்கள் ஊர் அருகே உள்ள சதீஷ்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம். கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக கணவர் பாரதி ஊருக்கு வந்தார். அப்போதும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தோம்.
அதன்படி வீட்டில் இருந்த பாரதியை, நானும் சதீஷ்குமாரும் சேர்ந்து அடித்து கழுத்தை நெறித்து கொன்றோம். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மினிலாரியில் போட்டு கொண்டு திருப்பனந்தாள் அருகே பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். பின்னர் யாருக்கும் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க மற்றவர்களிடமும் சகஜமாக பேசினேன். ஆனால் எப்படியோ போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு பாரதி உடலை தோண்டி எடுத்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திவ்யா, சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனோடு சேர்ந்து தொழிலாளியை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
- கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே உள்ள வடபருத்தியூர் கிராமம் தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் நாட்டுத்துரை(70). இவரது மனைவி கருப்பாத்தாள்(65). இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நாட்டுத்துரை மற்றும் அவரது மனைவி ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.
நாட்டுத்துரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரே வீட்டில் அவர்கள் இருந்தபோதும் தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் அந்த அரிவாளை பறித்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டுத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவி கைது
- ஒருவரையொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 37), கூலி தொழிலாளி.
இவ ரது மனைவி மைதிலி(35). இவர் சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், நேற்று முன் தினம் இரவு குடிபோ தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மைதிலியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒருவரை யொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த மைதிலி, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.இதை கவனிக்காத மைதிலி தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை மைதிலி மயங்கிய நிலை யில் இருந்த மணிகண் டனை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எழுந்தி ருக்கவில்லை. அப்போது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல றிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைதி லியை நேற்று கைது செய் தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






