search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத் தகராறில் கணவன் கொலை
    X

    குடும்பத் தகராறில் கணவன் கொலை

    • மனைவி கைது
    • ஒருவரையொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 37), கூலி தொழிலாளி.

    இவ ரது மனைவி மைதிலி(35). இவர் சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், நேற்று முன் தினம் இரவு குடிபோ தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மைதிலியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒருவரை யொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த மைதிலி, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.இதை கவனிக்காத மைதிலி தூங்க சென்றுவிட்டார்.

    நேற்று காலை மைதிலி மயங்கிய நிலை யில் இருந்த மணிகண் டனை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எழுந்தி ருக்கவில்லை. அப்போது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல றிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைதி லியை நேற்று கைது செய் தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×