என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Attack on woman"
- மதுரை அருகே கணவனை கொன்ற வழக்கில் தனிப்படை போலீசார் பெண்ணை தேடி வருகின்றனர்.
- உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.
திருப்பரங்குன்றம்
தனக்கன்குளம் திருவள்ளு வர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.
இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரையின் மகன்கள் சுந்தர பாரதி மற்றும் ராஜ்குமாரை சந்தேகத்தின் போது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அன்னலட்சுமி மட்டுமே கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- மடுகரையில் வியாபார போட்டியில் வேர்கடலையை வீசி ஏறிந்து பெண்ணை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மடுகரை அருகே தமிழக பகுதியான மேல்பாதி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அச்சுதன்.
புதுச்சேரி:
மடுகரை அருகே தமிழக பகுதியான மேல்பாதி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி குப்பம்மாள்(வயது48). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மடுகரை-சிறுவந்தாடு ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு வேர்கடலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடை அருகே மடுகரையை சேர்ந்த கிருபாகரன்(38) மற்றும் அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்த் ஆகியோர் தனித்தனியாக சால்னா கடை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே குப்பம்மாளுக்கும் கிருபாகரனுக்கும் வியாபார போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று கிருபாகரன் குப்பம்மாளிடம் உன்னிடம் வேர்கடலை வாங்குபவர்கள் தோல்களை எனது கடை முன்பு வீசி செல்கிறார்கள். எனவே கடையை காலி செய் என்று கூறினார்.
அதற்கு குப்பம்மாள் கடையை எடுத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே கிருபாகரன் வேர்கடலை கூடையை ரோட்டில் வீசி குப்பம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் குப்பம்மாளின் தலைமுடியை பிடித்து கையாலும், காலாலும் தாக்கினார். மேலும் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து குப்பம்மாளை கையிலும், தலையிலும் தாக்கினார். அதோடு அருகில் சால்னா கடை வைத்திருக்கும் கிருபாகரனின் உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்த் ஆகியோரும் குப்பம்மாளை தாக்கி இனிமேல் இந்த பக்கம் வந்தால் உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறிய படியே குப்பம்மாளை விரட்டி தாக்க முயன்றனர்.
இதனால் பயந்து போன குப்பம்மாள் அந்த கும்பலிடமிருந்து தப்பி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் கண்ணில் காயமடைந்ததால் அதற்காக தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து குப்பம்மாள் மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்