வேலூர் பாலாற்றில் உடல் புதைப்பு: தொழிலாளி கொலையில் 5 பேர் கைது

வேலூர் பாலாற்றில் நடந்த தொழிலாளி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆந்திராவில் பறிமுதல் செய்த 24 தமிழக பஸ்கள்விடுவிக்க படவில்லை- அதிகாரிகள் மீண்டும் பேச்சு வார்த்தை

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசு பஸ்கள், ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆந்திர அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது. அதற்கு பிறகும் தமிழக பஸ்கள் விடுவிக்கப்படவில்லை இதனால் மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடியாத்தம், பனமடங்கி, அத்தியூர் ஆகிய 3 இடங்களில் காளை விடும் விழா

பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி

அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.
போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாகாயம், அரியூரில் கஞ்சா, மது விற்றவர்கள் கைது

பாகாயம், அரியூரில் கஞ்சா, மது விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி

ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வேலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் உள்பட 4 மாவட்டத்துக்கு 42,100 டோஸ் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு

வேலூர், திருண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா அருகே வேன் மோதி பெண் பலி

பள்ளிகொண்டா அருகே வேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் மாயமான தொழிலாளியை கொலை செய்து பாலாற்றில் புதைப்பு - போலீசார் விசாரணை

வேலூரில் மாயமான தொழிலாளியை கொலை செய்து பாலாற்றில் மர்மநபர்கள் புதைத்துள்ளனர். பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை- 3 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

வேலூர் அருகே சாரயம் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் மாநகராட்சி பெண் பணியாளர் தீக்குளிப்பு

வேலூரில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பெண் பணியாளர் தீக்குளித்தார். அவர், எரியும் தீயுடன் நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவலம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

திருவலம் அருகே டிரான்ஸ்பார்மரில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி- ரூ.4 லட்சம் தப்பியது

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுநீர்- கமல்ஹாசன் வருத்தம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு மன வேதனை அடைந்தார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும்- கமல்ஹாசன் பேச்சு

அரசுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
ஆற்காடு அருகே காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

ஆற்காடு அருகே காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.