என் மலர்
வேலூர்
- வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார்.
- படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினி குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது55), விவசாயி. இவரது மனைவி மல்லிகா(50). இவரது மகன்கள் விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22).
லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். விகாஷ், ஜீவா ஆகியோர் சொந்த ஊரிலேயே ஜானகிராமனுக்கு உதவியாக நர்சரி கார்டன் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு ஜானகிராமன் மற்றும் அவரது மகன்கள் விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார். இதனை பார்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது 3 மகன்களும் மின் வேலியில் சிக்கி கொண்டனர்.
சிறிது நேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லோகேஷ் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்த பக்கத்து நிலத்தை சேர்ந்த சங்கர் (52), விவசாயி என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குப்பம்பட்டு கிராமத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.
- வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது.
வேலூர்:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது.
அவர் 4-ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.
ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள்.
வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
- கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.
கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.
விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது.
- திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே,உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு செல்வப் பெருந்தகை பதில் அளித்ததாவது:-
எல்லோருக்கும் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை உள்ளது. அவரவர் கருத்துகனை தெரிவிக்கின்றனர். எந்த கருத்து சொன்னாலும் காங்கிரஸ் மேலிடத்தில் அதை சொல்லி விடுகிறேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டும்தான் முடிவு எடுக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும். இது குறித்து பேசுவார்கள். இதை பெரிது படுத்த வேண்டாம். திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போய்ட்டாங்க. தற்போது செங்கோட்டையன் போய்க்கொண்டிருக்கிறார். அதிமுக மூழ்கும் கப்பல். அதில் ஏற பயந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் யார் யார் போவார்கள் என்று தெரியாது. பயத்தில் அச்சத்தில் அங்கு இருக்கிறார்கள். 5 தேர்தல்களில் தொடர் தோல்வி.. 6-வது தேர்தலில் இன்னும் அதைவிட மோசமான தோல்வியை அதிமுக தழுவப் போறாங்க.
தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கிறது என்று யார் சொன்னது. உங்களுக்கு ஏன் இந்த பேராசை, நப்பாசை. 20 ஆயிரம் கமிட்டிகளை போட்டிருக்கோம். அதற்கான Database (தரவுகள்) மேலிடத்தில் உள்ளது. ஆயிரம் பொறுப்பாளர்களை நியமித்து கமிட்டிகளை போட்டிருக்கோம்.
வேலூர் மாவட்டத்தில் கிராம கமிட்டி உள்ளது. கூட்டத்தில் கிராம கமிட்டி தலைவர் என ஒருவரை அறிமுகம் செய்துள்ளேன். காங்கிரசை பற்றி குறைத்த மதிப்பிடாதீர்கள். இது யானை மாதிரி. எந்திச்சி நின்னுன்னு வச்சிங்கோங்க, என்ன நடக்கும்..,
விஜய் பற்றி கேள்வி கேட்காதீர்கள்.
இவ்வாறு செல்லப்பெருந்தகை பதில் அளித்தார்.
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர்,
வேலூர்:
வேலூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், நாளை (16-ந் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகர்,ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, ஈ.பி.நகர், வசந்தம் நகர் விரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர்.
- வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஜெயராஜ். அரசு மற்றும் தனியார் ஒப்பந்த தொழில் செய்து வருவகிறார். இவர் இரிடியம் விற்பனை செய்வதாக புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் காரில் இன்று காலை கிறிஸ்டியான் பேட்டை வந்தனர். அப்பகுதியில் ஜெயராஜுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திடீரென்று சோதனை நடத்தினர்.
வீட்டிக்கு வெளிப்பகுதியில் வேலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட வருவாய்த்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
- அதிமுக கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
- விஜய் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.
வேலூர்:
வேலூர், காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து...
பதில்: தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து...
பதில்: அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
கேள்வி: தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறாரே?.
பதில்: நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.
கேள்வி: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து...
பதில்: நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.
- உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி, வேலூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
காட்பாடி தொகுதி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காட்பாடி தொகுதி பாதி நகரம், பாதி கிராமம், விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம், பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம், பேரிடர் நேரத்தில் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். வறட்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன், கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில்தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.
மக்களுக்கு பிரச்சனை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜக-வோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.
அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.
உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்.
உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பஞ்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.
நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின. அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாரலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- இன்றைக்கு ED ரெய்டுக்கு அனைத்து அமைச்சர்களும் பயந்துபோய் உள்ளனர்.
- நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி தொகுதி மக்களை சந்தித்துவிட்டு. அடுத்தபடியாக வேலூர் அண்ணாசாலையில் திரண்டிருந்த மக்களிடம் உரை நிகழ்த்தினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்த வேலூர் மாநகரத்துக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்தோம். அதிமுக திட்டத்தை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. ஆனால், இன்னும் பாதாள சாக்கடைத் திட்டம் முழுமை பெறவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து திட்டங்களும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்கப்படும்.
திமுக என்றால் குடும்ப ஆட்சி. அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சி. திமுக-வில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு அதிகார மையங்கள்தான் ஆட்சி நடத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் சென்று பேசிக்கொண்டிருக்கிறார் என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே நான் சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் வந்ததற்கே உங்கள் தூக்கம் தொலைந்துவிட்டது. நீங்கள் வந்த பாதை வேறு, நாங்கள் வந்த பாதை வேறு. நான் கஷ்டப்பட்டு வந்து உங்கள் முன் நிற்கிறேன். ஸ்டாலின் அப்படியில்லை. அப்பா பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் அவரை முன்னிலைப்படுத்துகிறார்.
அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல, ஜனநாயகம் உள்ள கட்சி. யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி பதவி வழங்கும் கட்சி. அதிமுக-வில் சாதாரண தொண்டரே எம்.எல்.ஏ,, எம்பி, மந்திரி மட்டுமல்ல முதல்வராகவும் ஆகலாம். திமுகவில் அப்படி யாரும் வர முடியுமா?
திமுக குடும்ப கட்சி, கருணாநிதி தொடங்கி இன்பநிதி வரை வந்துவிட்டனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் ஆள வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அதிமுக-வில் இருந்தால் மட்டுமே யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும். திமுக-வில் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்துக்கு வரமுடியும்.
திமுக என்றால் குடும்பக் கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனி மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதை நீங்கள் முறியடிக்க வேண்டும். மீண்டும் ஒரு குடும்பம் நாட்டை சுரண்டி பிழைக்கும் சூழலை உருவாக்கிவிட வேண்டாம். தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணிக்கு ஆதரிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல்லாயிரங்கோடியில் பல ஒப்பந்தங்களை போட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம். நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது. திமுகவும் முதலீட்டாளர் மாநாடு நடத்தியது. அதுபற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம், இன்றுவரை கொடுக்கவில்லை.
இப்போது மீண்டும் ஸ்டாலின் வெளிநாடு போகிறாராம். அங்கே போய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதாகச் சொல்கிறார், ஆனால் இவர் போய் சைக்கிள் ஓட்டுகிறார். இதுவா மக்களுக்கு முக்கியம்? உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது, மருத்துவமனைக்குச் சென்றார், நாங்களும் வாழ்த்தினோம். ஆனால், அங்கு போயும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதாக டிராமா போட்டார். 18 நாட்கள் வெளிநாட்டில் உல்லாசமாக இருந்தீர்களே, அப்போது தமிழ்நாடு மக்களை நீங்கள் பார்க்கவில்லையே? தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து வந்த மாதிரியும், அதற்கு தீர்வு காண்பது போலவும் மருத்துவமனை நாடகம் ஆடுகிறார்.
இன்றைக்கு ED ரெய்டுக்கு அனைத்து அமைச்சர்களும் பயந்துபோய் உள்ளனர். நீதிமன்றம் ஏறி இறங்குகிறார்கள். இதே திமுக என் மீது நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டது. அவர்களே வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று சொன்னபோதும், நான் மறுத்து வழக்கை நடத்தி நிரபராதி என்று உங்கள் முன் நிற்கிறேன். திமுகவினர் வாய்தா வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.
அமலாக்கத்துறை ரெய்டுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று சொல்பவர்கள் ஏன் ரூமை பூட்டி வைத்திருக்கிறீர்கள். தூய்மையான ஆட்சி என்று சொல்பவர்கள் ஏன் பூட்டுகிறீர்கள்..? நீங்கள் உத்தமராச்சே ஏன் பயப்படுகிறீர்கள்..?
டாஸ்மாக் ஊழல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. 40 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. வரிகளை உயர்த்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு எல்லா வரிகளையும் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் பெருமளவு உயர்த்திவிட்டனர். மாநகராட்சியில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் கட்டணமும் உயர்த்திவிட்டனர்.
வேலூர் மையப்பகுதியில் 198 கோடியில் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அது அறைகுறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தேவையான மருத்துவக் கருவிகள் இல்லை, போதிய டாக்டர், செவிலியர் இல்லை. மக்களுக்குப் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியவில்லை.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழில்கள் அதிகம். கழிவுநீர் பாலாற்றில் கலப்பதாக புகார் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் எங்கெல்லாம் கழிவுநீர் வெளியேறுகிறதோ, அங்கெல்லாம் பேபி கனால் அமைக்கப்பட்டு, சம்ப் கட்டி, சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விடப்படும். இத்திட்டம் அற்புதமான திட்டம். பாலாற்று நீரும் மாசு படக் கூடாது, தொழிலும் முடங்கக் கூடாது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல தான் நடந்தாய் வாழி காவிரி திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்தேன். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 11600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 1000 கோடியில் திட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சித்தலிபுரம் ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அங்கேயும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இஸ்லாமியப் பெருமக்கள் நிறைந்த பகுதி இது. அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று தவறான செய்திகளை திமுக கூட்டணிக் கட்சிகள் பரப்புகின்றன. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் ஓட்டுகள் சிதறாமல் இருக்க அமைக்கப்படுகிறது, கொள்கை என்பது நிரந்தரமானது. கொள்கை வேறு கூட்டணி வேறு.
ஆகவே சிறுபான்மை மக்களே சிந்தியுங்கள். 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஜாதி மதச் சண்டைகள் இல்லை. இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி கொடுத்தோம், ஹஜ் பயண மானியம் கொடுத்தோம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், மதிப்பூதியம், இருசக்கர வாகன மானியம், வக்ப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளிவாசல், தர்கா புனரமைப்பு நிதி, சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தோம், ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் கலைக் கல்லூரி அமைத்தோம். காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் அமைத்தோம். இவ்வளவும் இஸ்லாமியர்களுக்குக் கொண்டுவந்த திட்டங்கள். இதையெல்லாம் ஓட்டுக்காக சொல்லவில்லை. அவதூறு செய்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். கண்ணை இமை பாதுகாப்பது போல நாங்கள் உங்களை பாதுகாப்போம்.
இன்று உலக புகைப்பட தினம், புகைப்படம் என்பது கலை. சுகம், துக்கம், மாநாடு, பொதுக்கூட்டம், எதிலும் புகைப்படம் தவிர்க்க முடியாது. எல்லோருக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரையும் செல்போனில் புகைப்படம் எடுத்து வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். (கேமராவை வாங்கி மக்களை இபிஎஸ் புகைப்படம் எடுத்தார்).
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும் கூட்டணி நின்றால் அவர்கள் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
- அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதில் நோயாளியாக ஆஸ்பத்திரிக்கு செல்வார் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். இரவு 10.30 மணி அளவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது, கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நோயாளிகள் யாரும் இல்லை.
ஆவேசம் அடைந்த எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்சை விட்டு இடையூறு செய்கின்றனர்.
மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு? இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
நான் பேசிய கூட்டங்களில் இடையூறு செய்வதற்காக ஆம்புலன்சுகளை விட்டுள்ளனர். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதில் நோயாளியாக ஆஸ்பத்திரிக்கு செல்வார் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.
- தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர்.
- மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். அவரை புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். இரவு 10.30 மணி அளவில் அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கிய போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர்.
மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர். இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும் என்றார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.






