என் மலர்
வேலூர்
- காவல் துறையினரிடம் அனுமதி பெற ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறினர்
- விதிமுறைகளை மீறி 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.
விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '22.02.2026 அன்று. தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டம் 08.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தார். இதுகுறித்து காவல் துறை சார்பில் 30.01.2026 அன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண்.05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்பட்ட தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக 'சில தவிர்க்க முடியாத' காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பாடுள்ளது. ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு தங்களிடம் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளித்தார்.
மீண்டும். 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில் 18.02.2026 அன்று அளித்த மனுவில் வேலூர் மாவடத்தில் 23.02.2025 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம். அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்" மேலும் இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காலம் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் போது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.
தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது ஒற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. இச்செயலானது மாண்பமை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.
- தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
- தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!
வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.
இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.
விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
- இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது.
- இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன்.
வேலூர்:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-
இப்போ நம்ம ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்குனாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார். அந்த கொள்ளை அடிச்சி வெச்சியிருக்குற பணத்துல ஒரு பங்கு கொடுத்து அதற்கு பெயர் கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்து இருக்கார்.
ஆனா அவருக்கு நான் சொல்றேன். அருத பழைய கூட்டணி கணக்குகளோ, இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது. ஏன் என்றால் இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன். உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். Confident ஆ இருங்க நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என்றார்.
- போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
- தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.
த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
* இப்பவும் சொல்றேன், உறுதியாக சொல்றேன், சாத்தியமா சொல்றேன், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்முடைய ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருக்கும்.
* சட்டம் ஒழுங்கு ரொம்ப ரொம்ப கண்டிப்பா இருக்கும்.
* அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளும் முதல் தரமா இருக்கும்.
* போட்டித்தேர்வுகளுக்குன்னு லட்சங்களை கொட்டி தனியா படிக்கணும்னு அவசியம் இருக்காது. ஏன்னா அரசு பள்ளி, கல்லூரி சிலபஸ்கள் போட்டித் தேர்வுகளை எளிமையா சந்திக்கிற மாதிரி மாற்றி அமைக்கப்படும்.
* உயர்நிலை பாடத்திட்டங்களிலேயே அடிப்படை அரசியல், சாசன சட்டம் சேர்க்கப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும்.
* அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் கதவுகள் பொருத்தப்பட்ட Rest Roomகள் அமைப்பது உறுதி செய்யப்படும்.
* போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்..
* மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம்.
* மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரசவம் பார்க்கும் வசதியுடன அமைக்கப்படும்.
* பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
* ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ, டாக்சி மற்றும் லாரி டிரைவர்களுக்கென அவர்களின் நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.
*தென்தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.
* விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்.
- அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
- இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய பிளவை உருவாக்கியது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி பற்றிய கேள்விக்கு த.வெ.க. நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே வலுவான கூட்டணி இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார். கடந்த ஒரு மாதத்தில் நாம் காணக்கூடியது என்னவென்றால், தி.மு.க. அமைச்சர்களும், தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் காங்கிரசை பற்றி தவறாக பேசுகிறார்கள். இது இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய பிளவை உருவாக்கியது.
தி.மு.க.வின் வழிமுறை அவர்களின் கூட்டணி கட்சியை அச்சுறுத்துவதோடு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், கூட்டணியில் தொடர்ந்தாலும், தி.மு.க. தங்கள் கூட்டணியில் போட்டியிடும் அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியடைவதை உறுதி செய்யும் என்று பேசுவதை என்னால் காண முடிந்தது," என்றார்.
- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
- எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான் எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன்
தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன்
தங்களுக் பாதுகாப்பு இல்லை என பெண்களே கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
சட்டம்-ஒழுங்கு குறித்து நான் பேசுவதால் முதல்வருக்கு சங்கடம். திமுகவை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.
எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை.
- இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமான விஷயங்கள்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், இப்போ current-ல இருக்குற சில பிரச்சனைகளுக்கு வருவோம். இந்த கரெண்ட் பிரச்சனைக்கு வருவோம் என்று கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
மாதாமாதாம் கரண்ட் பில்லை கட்டுற மாதிரி மாத்துவோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? நிறைய வீடுகளில் 100 யூனிட் தான் ஒரு மாதத்திற்கு செலவாகிறது. மாதாமாதம் அந்த பில்லை கொடுத்தா அது அவங்களுக்கு ப்ரீயா ஆகிடும். ஆனா இரண்டு மாதத்திற்கு ஒரு பில்லு கொடுத்தா 200 யூனிட்டுக்கு மேல் போனால் அது அவங்களுக்கு அது சுமைதான். இதை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது. இதை ஒரு மாடன் கராப்ஷன்னு எடுத்துக்கலாமா?
அடுத்து பஸ் வசதி. நிறைய கிராமங்களில் பஸ் வசதி இல்லைன்னு சொன்னா... இந்த ஒட்டுமொத்த தி.மு.க. அரசும் கத்துக்கிட்டு வந்துருவாங்க. நாங்க பஸ் விடாத கிராமமே இல்லைன்னு சொல்லுவாங்க. அது உண்மை அப்படின்னா முதல்வர் அவர்கள் கிட்ட எங்க தங்கச்சி ஒருத்தங்க கேள்வி கேட்டாங்களே, எங்க ஊருக்கு ஒரு மினி பஸ்சாவது விடுங்க சார் என்று. அத எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது. நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை. நிறைய மலை கிராமங்களில் ஆஸ்பிட்டல் வசதி இல்லை. இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமான விஷயங்கள். பஸ் வசதியும், ஆஸ்பிட்டல் வசதியும் இல்லாததால் வீட்டிலேயே பிரசவ பார்க்குற ஆபத்து இருக்குதுன்னு எவ்வளவு நியூஸ் பார்க்குறோம். இதெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது.
இதை எல்லா மீட்டிங்கில்லும் பேசுறது தான். பெண்களுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்னா இருக்குறது என்று சொல்றாங்க. அது என்ன We Safe மாடலா? பெண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா அது We Safe மாடல் இல்லை, We are not safe மாடல் என்று சொல்கிறாங்க. இப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் எங்கே போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக்கிடக்குதாம். இப்படி சொன்னா எப்படி சார். கேக்குறவங்க எல்லாம் கேசரி சாப்பிடுறவங்கன்னு நினைச்சிங்களா.
அடுத்து இந்த சட்டம் ஒழுங்கு. அது காணாமல் போய் ரொம்ப நாளாச்சு. இவன் வேற, இந்த விஜய் வேற எங்க போனாலும் இந்த மக்கள் கிட்ட சட்டம் ஒழுங்கு பற்றி பேசி ஞாபகம் படுத்திக்கிட்டு இருக்கான்னு முதல்வர் அவர்கள் கூட இருக்குறவங்க கிட்ட எல்லாம் சொல்லி சங்கடம் பட்டாராம். நாம என்ன பண்றது. நாம தான் தமிழ்நாட்டோட விசில் ப்ளோயர் ஆச்சே. நாம எப்படி சைலட்டா இருக்க முடியும். நாமளும் கேள்வியா கேட்குறோம். ஆனா பதில் தான் வந்த மாதிரியே தெரியல. இருந்தா தானே வரும். வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாரு. 5 வருஷமா பதிலே சொல்லாமல் கடந்து வந்துட்டார். இனிமேல் அப்படி இருக்க முடியாது. பதில் சொல்லியே ஆகணும். மக்களே.. இந்த தீய சக்தியை... அட்ராசிட்டியே... ஒரு எண்ட்ரி கார்டு போடணும்னு அப்படி என்றால் அவங்களை Switchoff பண்றது தான் ஒரே solution. அதுக்கான ரிமோட் தான் வரப்போகுற எலெக்ஷன். அந்த ரிமோட்டுல நீங்க ஒரு அழுத்த வேண்டியது ஒரேயொரு ஆப்ஷன். அதுதான் நம்ம விசில் சின்னத்தோட பட்டன். இந்த நாலு விஷயத்தை நீங்க செய்தாலே போது. ஒவ்வொரு EV மெஷினிலும் விசில் சின்னத்திற்கு நேரா இருக்கக்கூடிய பட்டனை பசக், பசக், பசக்குன்னு ஒரு அழுத்து அழுத்துங்க. அவ்வளவுதான் என்றார்.
- கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
- தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர், கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விஜய், "எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அந்த நண்பர் முதல்வர் அவர்கள் தான். சமீபத்தில் நிருபர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது, அவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் என்று முதல்வர் பதிலளித்தார். உண்மையில் நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், ஏன் கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா?
நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், நிகழ்வுகளுக்கு ஏன் அனுமதி கொடுக்க மறுக்கின்றீர்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டு, போகிற போக்கில் பொய்களை அடித்துவிடுகின்றீர்கள். உங்களது உண்மையான நண்பர்கள் யாரென்று சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் - இதெல்லாம் தான் உங்களது உண்மையான நண்பர்கள்.
தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நமக்கு அது அவசியமும் இல்லை. ஆனால், உங்களது ஆட்சி தான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டிற்கே தேவையில்லாத ஆட்சி," என்றார்.
- இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
- இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லை.
சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் அல்ல. விஜய்க்கும் ஸ்டாலின சாருக்குமான போர்.
இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
வரும் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் அல்ல. 50 ஆண்டுக்கு ஒருமுறை வருவது போன்ற தேர்தல்.
தவெகவுக்கும் நமக்கும் எதிரான சூழ்ச்சிகள் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.
இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது அதிசய தேர்தல். ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆ் இருந்தபோது நல்ல ஆட்சி. அவர்கள் ஆண்டபோது தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டாராக இருந்தது.
எனக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. நானும் மக்களும் ரத்தமும் சதையும் போல்.
இந்த தமிழ்நாடு விஜயை நம்புகிறார்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறார்களா? என நிரூபிக்கும் தேர்தல்.
நாம் ஏதாவது பேசினால் களத்தில் இல்லாதவர்கள் wanted ஆக வண்டியில் ஏறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு சின்ன பையன் ஒரு எண்ட்ரி கொடுக்கறான்.
- என்ன பண்றது தலையை குனிஞ்சு நிக்குறாங்க.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் மத்தியில் விஜய் ' எங்கள் ஓட்டு... எங்கள் உரிமை...' 'எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்...' 'எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது' என்ற உறுதிமொழியை ஏற்று ஒரு குட்டி கதையுடன் ஆரம்பிக்கலாமா என்று பேசத்தொடங்கினார்.
அந்த கதையில், ஒரு பெரிய ஊரு. ஒரு நாலு ரோடு ஜங்ஷனில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஏரியாவில் அதன் நடுவில் ஜல்லிக்கட்டு காளை நின்னுக்கிட்டு இருக்கு. அதன் பக்கத்திலே யாராலயும் போக முடியல. அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஊர்ல இருக்குற ஒரு சில பேருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். ஆனா அவங்க யாரும் இல்லை. அந்த காளையை அடங்கினவங்களோட இருந்த ஒரு சில பேர் எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்க பாக்காத காளையா, நாங்க பாக்காத மாடா... என்று சொல்லி காளையை அடக்கப்போறாங்க. ஒருத்தராலையும் அடக்க முடியல. எல்லாரையும் அடிச்சி வீசிட்டுச்சு. அந்த நேரத்தில் கூட்டத்தைய விலக்கிவிட்டு ஒரு சின்ன பையன் ஒரு எண்ட்ரி கொடுக்கறான்.
அப்போ அங்கிருந்தவர்கள், எங்களாலையே முடியல, எங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்கு, நாங்களே அடிப்பட்டு இருக்கிறோம். நீ போய் என்னத்த கிழிக்கப்போற, அந்தப்பையன், இந்தப்பையன் என ஏளனமாப் பேசுறது ஒரு பக்கம்.
மற்றொரு பக்கம் பரிதாப்பட்டு பேசுறாங்க. அந்த சின்ன பையன் எதையும் காதில் போட்டுக்காமல் இரண்டு கைகளும் பாக்கெட்டில் போட்டு உள்ளே போறான். ஒரு அடி எடுத்து வைக்கிறான் அந்த காளை சீறிக்கிட்டு இருக்கு, மற்றொரு அடி எடுத்து வைக்கிறான் அந்த காளை சீறிக்கிட்டு முன்னாடி வருது. அந்நேரம் அங்கு கூடியிருந்த மக்கள் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க.. இன்னொரு அடி எடுத்து வைக்கும் போது காளை முட்ட வரும்போது பாக்கெட்டுக்குள் மறைச்சு வைச்சிருந்த இரண்டு புல்லுக்கட்டை எடுத்து காளைக்கிட்ட காட்டுறான். காளை சட்டென மாறி அந்த புல்லை சாப்பிட ஆரம்பித்துச்சிடுச்சு.
அப்போ அந்த சின்ன பையன் காளையை தடவ காளை சின்னக்குழந்தை மாதிரி அந்த சின்ன பையனுடன் நடந்து வருது. அருகில் இருந்த வயல்வெளியில் அந்த காளையை மேய விட்டுட்டு வரான். மக்கள் எல்லோரும் அந்த பையன ஆச்சரியமாக பார்க்குறாங்க. அந்த அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிங்க தலையை தொங்கப்போட்டு நிக்குறாங்க. ஏன்னா அவங்க பேசின பேச்சு அப்படி. வாய் இருக்கது என்பதற்காக நக்கலுமாக, நயாண்டியுமாக நசநசன்னு ஒரே பேச்சு. என்ன பண்றது தலையை குனிஞ்சு நிக்குறாங்க.
அங்க ஒரு பெரியவர் வரார். அவர் சின்னப்பையன் கிட்ட வந்து எப்படிப்பா அந்த காளைய அடக்குன? அதற்கு அந்த பையன், ஐயா எனக்கு அந்த காளைய பார்த்தா கோபமாக இருந்த மாதிரி தெரியல. பசியோட இருந்த மாதிரி இருந்தது. அதனால தான் அந்த புல்லுக்கட்டை காட்டியதும் அதற்கு தேவையானதை கிடைத்த மகிழ்ச்சியில் என்னோடு வந்தது என்றார்.
இதைக்கேட்டு அந்த பெரியவர் சொன்னார், இந்த சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் இருக்குறவங்க, அனுபவம் இல்லாதவங்க என்பது விஷயமே கிடையாது. யாராக இருந்தாலும் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி என்ன செய்து அந்த பிரச்சனையை தீர்க்குறான் அது தான் விஷயம் என்றார்.
- த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன்.
- செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
அ.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வகியாக இருந்து சமீபத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். காலக்கட்டத்தில் இருந்தே அ.தி.மு.க. கட்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இடையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ெசங்கோட்டையன்.
த.வெ.க. கட்சியில் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி மாறிய போதிலும், தனது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைப்பதை செங்கோட்டையன் மாற்றாமல் இருந்தார். மேலும், முக்கிய தினங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ் பாடுவதையும் செங்கோட்டையன் நிறுத்தாமல் இருந்தார். இந்த நிலையில், த.வெ.க. நிர்வாகியான செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
முதல் முறையாக தனது சட்டைப்பையில் விஜய் படத்தை செங்கோட்டையன் வைத்திருக்கிறார். அதில் ஒருபக்கம் எம்.ஜி.ஆர். படமும், மறுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.
- தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
- 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கர்ப்பிணி, முதியோர், மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரவேண்டாம் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






