search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

    சேலம்:

    திருச்சியில் வருகிற 23-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

    இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோவை மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்ககான கலந்தாய்வு கூட்டம் சேலம் ஓமலூரில் எம்.ஆர்.பி. முத்துமகால் திருமண மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
    • 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

    அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

    வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
    • 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பின்னர், 5 மணி நிலவரப்படி 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள்.
    • ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.

    வாக்குப்பதிவின் முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். காலை 11 மணிக்குள் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது
    • எஸ்.ஆர்.எம்.யூ. மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் பார்வையிட்டார்

    திருச்சி,

    பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்பது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் 3 நாட்கள் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ் ஆர் எம் யூ ரெயில்வே தொழிற்சங்கத்தினர் வாக்களித்து வருகின்றனர். எஸ் ஆர் எம் யூ மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் பார்வையிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் 5 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் செய்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.
    • தவறான ஆட்சி, ஊழல் மற்றும் ஊழல் நிறைந்த அரசை காங்கிரஸ் உங்களுக்கு வழங்கியது.

    முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால் காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, இருவரும் தேர்தலுக்கு கைகோர்ப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள் என்றும் அதில் எதுவும் உண்மையில்லை என்றும் கூறினார்.

    ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    காங்கிரசை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் தேர்தல் நேரம் வந்தவுடன், ஒன்றாக புகைப்படம் எடுக்கிறார்கள். டெல்லியில் இருந்து பெரிய தலைவர்கள் இங்கு வந்து முதல்வரையும், முதல்வராக விரும்பும் மற்றொரு தலைவரையும் கேமரா முன் கைகுலுக்க வைக்கிறார்கள்.

    ஐந்தாண்டுகளில் ஒரு முறை கைகுலுக்கல், ஆனால் நல்லிணக்கம் இல்லை. இவர்கள் கைகோர்ப்பது போல் நடிக்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயங்களில் அழுக்கு உள்ளது.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் 5 ஆண்டுகளாக மக்களுக்கு துரோகம் செய்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

    ஒரு பக்கம் காங்கிரஸ் கொள்ளையடிக்க உரிமம். மறுபுறம் மோடியின் உத்தரவாத அட்டை. யாரை நம்புவீர்கள்? நாடு முழுவதும் மோடியின் உத்தரவாத அட்டையை நம்பினால், அதற்கு சில உறுதியான காரணங்கள் உள்ளன. உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இரவும் பகலும் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணிக்கிறேன்.

    ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று பாஜக உத்தரவாதம் அளித்தது. மோடி அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றினாரா இல்லையா?

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, முத்தலாக் தடை, மக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்டவையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு அடியிலும் துரோகத்தைத் தவிர வேறெதையும் கொடுக்கவில்லை. தவறான ஆட்சி, ஊழல் மற்றும் ஊழல் நிறைந்த அரசை காங்கிரஸ் உங்களுக்கு வழங்கியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்,
    • தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க கிளை மாநாடு சேலத்தில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மகளிர் உரிைம திட்ட பணிகளை செம்மையாக செய்திட மாவட்ட, வட்ட அளவில் அரசு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தாசில்தார், ஆர்.டி.ஓ. கலெக்டர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் மிஷின், இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலின் போது அரசு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர் முருகபூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற பாராளுமன்றத்தேர்தலில் கிங் மேக்கராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

    மதுரை

    தேவர் குருபூஜை விழா வில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) காலை மதுரை வருகிறார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பாக வலையங்குளம் டோல்கேட் அருகே சீருடை அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. இதன் முன்னேற்பாடாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன் னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தேசியமும், தெய்வகமும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு, வீர அஞ்சலி செலுத்த எடப்பாடி யார் வருகிறார். எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது தேவர் குரு பூஜை விழாவின் போது எதிர்க்கட்சிகள், சமய தலை வர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுக ளையும் செய்து கொடுத்தார். அதேபோல் தற்போதும் பாதுகாப்பான ஏற்பாடு களை முதலமைச்சர் செய் வார் என்று மக்கள் நம்புகி றார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என எடப்பாடியார் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆளுநர் மாளிகை யில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட சி.சி.டி.வி. காட்சியில் அந்த நபர் பெட்ரோல் குண்டை பொருத்தி அதை வீசும் காட்சி வெளியிடப்பட்டது.

    இப்படி சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் அலுவலகத்திலும் பெட் ரோல் குண்டு வீசி உள்ளனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை எடப்பாடியாருக்கு மக்கள் வழங்குவார்கள். அரசியல் கிங் மேக்கராக எடப்பாடியார் விளங்கு வார். கால சக்கரம் சூழல்கி றது, அதற்கு ஏற்றாற்போல் எடப்பாடியாருக்கு என்ன பதவி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். வரு கின்ற நாடாளுமன்ற தேர்த லின் மூலம் இந்திய ஆளுமை களின் கிங் மேக்கராக எடப் பாடியார் திகழ்வார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெற்றி பெற்றவர்கள் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதிடம் வாழ்த்து
    • தொழிலாளர் பிரதிநிதிகள், வார்டு செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    வால்பாறை,

    வால்பாறை ஏ.டி.பி. தொழிற்சங்கம் சார்பில் முடீஸ் எஸ்டேட் நிர்வாகத்துக்குட்பட்ட முத்துமுடி எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடந்தது.

    இதில் ஏ.டி.பி.தொழிற்சங்கம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 9 பேரில் 7 தொழிலாளர்கள் வெற்றி பெற்று தொழிலாளர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது வாழ்த்து கூறினார்.

    அவரிடம் வெற்றி பெற்றவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். வருங்காலங்களில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைக்களை தொழிற்சங்கம் மூலம் தீர்வு காண வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்சி பணியை இப்போதே தொடங்க வேண்டும் என வால்பாறை அமீது கேட்டுக்கொண்டார்.

    இதில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் சலாவூதின் அமீது மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளின் தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிலாளர்கள், வார்டு செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.