என் மலர்
தான்சானியா
- பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள எதிர் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது
- தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த விவகாரம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மீண்டும் வெற்றி பெற்று சாமியா சுலுஹு ஹாசன் மீண்டும் அதிபராக தேர்வானார்.
அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சியான சடேமா குற்றம் சாட்டியது. இதையடுத்து அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையால் தான்சானியா நாட்டில் இணையத்தை முடக்கிய ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மோதிய வேகத்தில் 2 பஸ்களும் தீப்பிடித்து எரிந்தது.
- 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மோனி டங்கா சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று 2 பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் 2 பஸ்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் வெளியில் வர முடியாமல் உயிர் பயத்தில் அலறினார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயைஅணைத்தனர். ஆனாலும் 2 பஸ்களில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றவர்கள் பஸ்சின் டயர் பஞ்சரானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
டோடோமா:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் சீர்திருத்தத்துக்கு அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் 2030-ம் ஆண்டு வரை நடைபெறும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைய இயக்குனர் ராமதானி கைலிமா அறிவித்துள்ளார்.
- இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது.
- வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.
கொத்தடிமை முறை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மன்னராட்சி காலத்தில், பெரும் பணக்காரர்களும், மன்னர்களும் கருப்பினத்தவர்களை விலைக்கு வாங்கி, தங்கள் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
அப்படி அடிமைகள் அடைக்கப்பட்ட பாதாள சிறை பற்றிய ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் தள்ளி உள்ளது. கட்டிட கலைஞரான ரஸ்ஸல் என்பவர், பழமையான அந்த கட்டிடத்தின் பாதாள பகுதியை படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது தான்சானியா நாட்டின், சான்சிபார் நகரில் உள்ளதாம்.
வீடியோவில் பேசும் ரஸ்ஸல், "இந்த இடம் மிகவும் சிறியது. மிகவும் வேதனையும் துன்பமும் நிறைந்தது. இது 1800-களில் சான்சிபாரில் உள்ள ஸ்டோன்டவுனில் ஓமானி அரேபியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அடிமைகளின் வாழ்விடம். மலம் கழிக்கவும், தூங்கவும் ஒரே இடம். தண்ணீரும் அசுத்தமாக இருக்கும், வெளிச்சம் வராது, நோய் தொற்றும் அபாயம் அதிகம். சிறிய இடத்தில் 70 பேர் வரை அடைக்கப்பட்டு இருப்பார்கள். அனைத்து கொடுமைகளிலும் உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள்" என்று பேசுகிறார்.
வீடியோ சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டு உள்ளது.
- டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார்.
- இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று அவரது தந்தை தெரிவித்தார்.
தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.
ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய டெக்பீர் சிங், ஆகஸ்ட் 23 அன்று, அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.
டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார். தனது மகனின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது தந்தை, "டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
- ஓய்வுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவார்கள்
- உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பித்தான் உள்ளது
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா (Tanzania) நாட்டுடன் இணைந்துள்ள முக்கிய சுற்றுலா பிரதேசம், ஜான்ஜிபார் (Zanzibar).
இப்பகுதியின் வருவாயில் 90 சதவீதம், இந்திய கடல் பகுதியில் அழகான கடற்கரைகளும் பாரம்பரியமும் உள்ள இதன் தீவுகளில் ஓய்வு எடுக்க வரும் சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.
கோடை காலம் நெருங்கும் நிலையில், உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் ஜான்ஜிபாருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் குளிர்ந்த பீரை விரும்பி அருந்துவது அங்கு வழக்கமான ஒன்று.
சமீப சில மாதங்களாக இப்பகுதியில் மதுபானங்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பீரின் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது.
மதுபான தட்டுப்பாட்டால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கும் நிலையில் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மதுபானம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தால் வரும் மாதங்களில் பயணிகள் வருகை குறைந்து விடும் என விடுதி உரிமையாளர்கள் அச்சப்படுகின்றனர்.
ஜான்ஜிபார் தீவுகளின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அங்கு மதுபான உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேவைகளுக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து மதுபானங்களை இறக்குமதி செய்கின்றனர்.
இறக்குமதியாளர்கள் ஜான்ஜிபாரிலேயே பிறந்திருக்க வேண்டும் என்பதும் $12000 ஆண்டு கட்டணம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதும் விதிமுறை.
புதிதாக 3 இறக்குமதியாளர்களுக்கு உரிமம் வழங்கியதிலிருந்து பல்வேறு காரணங்களால் தொடரும் சிக்கலில் இறக்குமதியாக வேண்டிய மதுபானங்கள் வருவதில்லை.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் சுற்றுலாவையே நம்பி உள்ளதால் இந்த நிலைமை அவர்களை அச்சுறுத்துவதாகவும், அரசு விரைந்து நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2023ல், அதற்கு முந்தைய வருடங்களை விட ஜான்ஜிபாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 16 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






