என் மலர்
நீங்கள் தேடியது "bus accident"
- பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைபாதையில் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து காவல் உதவி ஆணையர் சையத் மெஹ்தாப் ஷா கூறுகையில், " இஸ்லாமாபாத்தில் இருந்து குவெட்டாவுக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, மலையின் கூர்மையான வளைவில் நெருங்கியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், இதுவரை 19 பேரில் உடல்களை மீட்டுள்ளோம். காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் " என்றார்.
மேலும், பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் ஆகியோர் இந்த துயரமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
- 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது.
- எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது.
பொள்ளாச்சி:
-
சர்க்கார்பதியில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று காலை அரசு பஸ் சென்றது.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியிலிருந்து திருச்சூர் செல்லும் சிமெண்ட் லாரி தனக்கு முன்னால் வந்த வாகனத்தை முந்த முயன்றது.
இதில் எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது. லாரி உரசுவதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் சுரேஷ்குமார் பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
அப்போது தரை பாலத்தின் பக்கவாட்டில் அரசு பஸ்சின் முன்பக்கம் மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 7 பேர் லேசான காயம் அடைந்தனர். லாரி டிரைவர் முஹம்மது சாலி என்பவரிடம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவியை பார்க்க சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலியானார்.
- இவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்.
சிவகங்கை
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜுக்குட்டி. இவர் மதுரையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகே உள்ள மனக்கரையை சேர்ந்த கலைச்செல்விக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்தபின் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க மதுரையில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ராஜுக்குட்டி சிவகங்கை நோக்கி சென்றார்.
அவர் நல்லாகுளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பூவந்தி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிவகங்கை பகுதியில் பொதுமக்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வாலாஜா;
வாலாஜாபேட்டை பஜார் எம்.பி.டி சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே பழஜூஸ் கடை நடத்தி வருபவர் பாரூக் (வயது 35) இவரது மனைவி ஷாயின் பாணு (30) இவர்களுக்கு ஹத்மா பர்வீன் (7) என்ற மகளும், பரான் (2) என்ற மகனும் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று பாரூக் தனது மகள் படிக்கும் பள்ளியில் பாட புத்தகங்கள் வாங்க மொபட்டில் மனைவி ஷாயின்பாணு, ஹத்மா பர்வீன், பரான் ஆகியோருடன் மொபட்டில் தென்கடப்பந்தாங்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அரசு மகளிர் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு பின்னால் வேலூரில் இருந்து கல்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதியது.
- சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதியது.
செங்கம்:
செங்கம் அருகே கரியமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஒருவர் நடந்து சென்றார். அப்போது சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
ஜேப்பியார் பால்பண்ணை அருகே வந்த போது நடந்து சென்றவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஏசுராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை புதுவாணியங்குளம் 8-வது தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது 39) ஆட்டோ டிரைவர். இவரது மகன் விக்னேஷ்(19). பி.காம்.பட்டதாரி.
நேற்று மாலை இவர்கள் தங்களது சொந்த ஆட்டோவில் செஞ்சி வட்டம் வி.நயம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். ஆட்டோவை அரிகிருஷ்ணன் ஓட்டி சென்றார். ஆட்டோ செஞ்சி அருகே உள்ள செம்மேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து புதுவைக்கு தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென்று ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ டிரைவர் அரிகிருஷ்ணன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பலத்த காயம்அடைந்த விக்னேஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார் (வயது 46) என்பவர் ஓட்டினார். நடத்துனராக அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் சென்னை கொரட்டூரில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ரகுபதி (67) என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த போது பஸ்சில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அனைவரும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த ஹரிகரன் (12), மகேஸ்வரி (22), பாலாஜி, அமுதா, ராஜேஸ்வரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த ரகுபதி தனது மனைவி விஜயகுமாரி மற்றும் 2-வது மகள் லாவண்யா, பேத்தி மவுலிகாவுடன் தஞ்சாவூரில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். லாவண்யாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த ரகுபதி அவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தஞ்சை வந்ததாகவும் தெரியவந்தது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் முத்து (வயது 24).
கட்டிட தொழிலாளியான இவர் கோவையில் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் புறப்பட்டு சேலம் வந்து கொண்டிருந்தார்.
இரவு சுமார் 11 மணிக்கு சேலம் சுந்தர்லாட்ஜ் சிக்னல் அருகே வந்தபோது, பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் இருந்து முத்து கீழே விழுந்தார். இதில் அவரது கை முறிந்தது. முகத்திலும் பலத்த காயம் அடைந்தார்.
மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை, ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், முத்து பஸ் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததும், அவரை அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கண்டு கொள்ளாமல் சென்றதும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளருக்கு, செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பந்தப்பட்ட பஸ்சையும், டிரைவரையும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் பஸ்சை ஓட்டி வந்தார். அவரை போலீசார் கைது செய்து, பஸ்சை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், விபத்து நடந்ததும், முதலில் பஸ்சை நிறுத்தி சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதன்பிறகு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இந்த இரண்டையுமே டிரைவரும், கண்டக்டரும் செய்யவில்லை. சி.சி.டி.வி. காமிரா உதவியால் தான், பஸ் அடையாளத்தையும் விபத்து எப்படி நடந்தது? என்பதையும் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது, என்றனர்.
விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று வளவனூர், மடுகரை வழியாக புதுவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை காத்தவராயன் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு அந்த பஸ் கண்டமங்கலம் அருகே அற்பிசம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்தது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் அந்த பஸ் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்1சி) வந்து கொண்டு இருந்தது.
கத்திவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்ட கட்டுமான கலவை எந்திரம் திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது அந்த எந்திரத்தின் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் படிக்கட்டு உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
இந்த விபத்தில் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதாலும், படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்யாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கத்திவாக்கம் மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றி இயக்கப்பட்டன. இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:
தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக