search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore accident"

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை, மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் அதன் டிரைவர் சாதுர்யமாக நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நின்ற நிலையில், 3-வதாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதற்கு பின்னால் வந்த 4-வது காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து முதலில் நின்ற கார் மீது, 2-வதாக நின்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் 4 காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த புதுவை மாநிலம் மணமேட்டை சேர்ந்த பூவரசன், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டை சேர்ந்த கதிரேசன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கோகுல்ராஜ், அஜய், சரத்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டு வடலூர் நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தனர். மினி லாரியை ஞானப்பிரகாசம் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மீது பலமாக மோதியது.

    இதில் மினி லாரியை ஓட்டி வந்த ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதில் பயணம் செய்த தினேஷ், பிரபு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வேன் அருகில் வந்தனர்.
    • காரில் இருந்து இறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன், இன்று காலை கோ.மாவிடந்தல் கிராமத்தில் இருந்து 6 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டது.

    இந்த வேன் கோ.மாவிடந்தலில் இருந்து மிகவும் குறுகலான சாலையில் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக சாலை ஓரத்தில் பள்ளி வேனை டிரைவர் நிறுத்தினார்.

    விளை நிலங்களுக்கு செல்லும் குறுகலான சாலையில் பள்ளி வேன் நின்றபோது, தொடர் மழையினால் ஈரப்பதத்துடன் இருந்த சாலையோர மண் சரிந்தது. இதில் வேன் மெல்ல மெல்ல சாய்ந்து விளைநிலத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது.

    இதனை சற்றும் எதிர்பாராத பள்ளி மாணவர்கள் அலறினர். அவ்வழியே சென்றவர்கள், விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வேன் அருகில் வந்தனர். அதில் இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் டிரைவரை மீட்டனர். சாலையோரம் நிறுத்தப்பட்ட பள்ளி வேன் கவிழ்ந்ததால் சிறு காயங்களுடன் மாணவர்களும், டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இத்தகவல் அறிந்த கோ.மாவிடந்தல் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மிகவும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாலை அகலப்படுத்தப்பட்டிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று குற்றஞ்சாட்டினர்.

    மேலும், விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவ்வழியே அரசு காரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் வந்து கொண்டிருந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரினை முற்றுகையிட்டனர். காரில் இருந்து இறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். சாலையோரம் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்க முன்வந்தால் சாலை அகலப்படுத்தப்படுமென அவர் கூறினார்.

    தொடர்ந்து மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் கோ.மாவிடந்தல் கிராம மக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் இன்று காலை கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கார் டிரைவரும் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • விபத்தில் இறந்து கிடந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டியை அடுத்த அரிசி கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி தாட்சாயணி (48). இவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்கவரப்பட்டில் நடந்து வரும் 100 நாள் வேலைக்கு இன்று காலையில் சென்றனர். மாளிகைமேடு-கடலூர் சாலையில் சென்ற போது, மேல்குமாரமங்கலத்தில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் எதிரில் வந்தது.

    இந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களும் கீழே விழுந்தனர். அப்போது கரும்பு லோடு ஏற்றப்பட்டிருந்த டிராக்டர் இவர்கள், 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பெண்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    இத்தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். இது அவ்வழியே சென்றவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்து கிடந்த 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலைக்கு சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள், டிராக்டர் மோதிய விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிதம்பரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து நகைக்கடை உரிமையாளர் மனைவி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழரதவீதி பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி (வயது 42). மங்கேஷ்குமார் கீழரத வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சுபாங்கியின் தம்பி நாம்தேவ் கடந்த சில நாட்களாக தனது அக்காள் சுபாங்கிக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலையில் சுபாங்கிக்கு நாம்தேவ் கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வந்தார்.

    இந்த கார் சிதம்பரத்தில் இருந்து தெற்கு பிச்சாவரம் சாலையில் சென்றது. அப்போது சுபாங்கி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் இருந்த வடிகால் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கார் ஆற்றில் வேகமாக பாய்ந்ததால் காரில் இருந்த சுபாங்கி, அவரது தம்பி நாம்தேவ் ஆகியோர் செவ்வதறியாது திகைத்தனர். பின்னர் நீரில் கார் மூழ்கியது. காரில் இருந்து தம்பி நாம்தேவ் மட்டும் போராடி வெளியே வந்து விட்டார். ஆனால் சுபாங்கியால் காரை விட்டு வெளியேவர முடியவில்லை. நாம்தேவ் காருக்குள் மாட்டிக்கொண்ட அக்காளை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களின் உதவியுடன் நாம்தேவ் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய காரை போராடி மீட்டனர்.

    நீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் காருக்குள் இறந்த நிலையில் சுபாங்கி கிடந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் காரினுள் இறந்து கிடந்த சுபாங்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாங்கிக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பலியானவர்கள் அஜித், மதுமிதா என்பதும் மற்ற 2 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
    • விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.கம்பனியில் பணிபுரிந்து வந்தார்.

    அஜித் சென்னையில் இருந்து காரில் தனது மனைவி மதுமிதா (23), மகள் ஜனனியா பிரித்தி (2), மாமியார் திண்டுக்கல் நாகல் நகர் ரெயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (47) ஆகியோருடன் ஆண்டிபட்டி சென்றார். காரை அஜித் ஓட்டினார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் கோமுகி ஆற்றின் அருகே கார் வந்த போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

    இதில் பலத்த காயமடைந்த அஜித், அவரது மனைவி மதுமிதா, மகள் ஜனனியா பிரித்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழ்செல்வியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.

    வேப்பூர் போலீசார் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
    • 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கடலூர் நோக்கி நேற்று காலை 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. இதேபோல கடலூரில் இருந்து மற்றொரு தனியார் பஸ் பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் வேலை செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் பஸ்களில் சென்றனர்.

    இதில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பஸ்களில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மற்றொருவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும், 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிக்சைக்காக புதுவை ஜிப்மர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த துரை (68) சிகிச்சை பலனின்றி இன்று நண்பகலில் இறந்தார். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    • பஸ்களில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பஸ், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பஸ்களில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் , லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் நிதியுதவியும் அவர் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பஸ் டிரைவர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
    • பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பண்ருட்டி:

    கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போல திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    இதில் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த பஸ் மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்தது. அப்போது பஸ் முன்பக்கத்தில் டிரைவர் சீட்டிற்கு கீழே இருந்த டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சின் டிரைவர் இதனை கவனித்தார். தாறுமாறாக வரும் பஸ் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்பதை கணித்து, பஸ்சை சாலையின் ஓரமாக இயக்கி மெதுவாக சென்றார்.

    இருந்தபோதும் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பஸ், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தின் போது, இடி இடித்தது போல் பலத்த சத்தம் எழுந்தது. இதில் 2 தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    விபத்தில் 2 பஸ்சின் முன்பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்கு இடையே பயணிகளும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    2 பஸ்களிலும் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. மேலும், பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவரை மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், கிரேன், பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

    இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.

    காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் பாலமுருகன் (வயது 23) சென்னை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

    அரியலூர் மாவட்டம் சுண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (24) நெய்வாசலில் தனது பாட்டி வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பாலமுருகன், சதீஷ்குமார் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நெய்வாசல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து பாலமுருகன் வந்தார். இன்று காலை சதீஷ்குமார், பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் நெய்வாசலில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டிசென்றார்.

    ஆவணங்குடி-பட்டூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது மோட்டார் சைக்கிளின் முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முற்பட்டனர். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் எதிரே வந்த டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், பாலமுருகன் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் இறந்தார். இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    சிதம்பரம் அருகே இன்று அதிகாலையில் நின்ற லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் டைல்ஸ் கடை அதிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
    சிதம்பரம்:

    சேலம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). இவர் அந்த பகுதியில் டைல்ஸ் மற்றும் கிரானைட் கடை வைத்துள்ளார். இவரது மாமனார் துரைசாமி. இவர் மயிலாடுதுறை அருகே மாதானம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீட்டுக்கு டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு மினிலாரியில் செல்வக்குமார் மாதானம் நோக்கி நேற்று இரவு புறப்பட்டார். இந்த லாரியை சேலத்தை சேர்ந்த டிரைவர் நகுலேந்திரன் (28) என்பவர் ஓட்டினார். லாரியில் செல்வக்குமாரின் மனைவியின் தங்கை கற்பகவள்ளி (27), செல்வக்குமாரின் மகன் மிதுன் (4) ஆகியோர் சென்றனர். மினி லாரியின் பின்புறம் தொழிலாளர்கள் 4 பேர் அமர்ந்து இருந்தனர்.

    இந்தமினி லாரி இன்று அதிகாலை சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கூத்தங்கோவில் சிதம்பரம்-மயிலாடுதுறை புறவழி சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற லாரி மீது டைல்ஸ் ஏற்றி சென்ற மினிலாரி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் செல்வக்குமார் அவரது மகன் மிதுன், கற்பகவள்ளி, லாரி டிரைவர் நகுலேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் வலியால் அலறினர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×