என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 



    • படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

    வசாய் தாலுகாவில் உள்ள நாரங்கி சாலையில் சாமுண்டா நகருக்கும் விஜய் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 25 நபர்கள் வரை வசித்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    • விபத்தில் பலியானோருக்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
    • பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

    சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலா நகரம் ஆகும். மலைகள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே தொங்குபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஏறி நின்று இயற்கை அழகை ரசிப்பதற்காக ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் அங்கு சென்றிருந்தனர்.

    அப்போது அந்த பாலத்தின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் பாலத்தின் மீது நின்றவர்கள் ஆற்றங்கரை அருகே கற்கள் நிறைந்த பகுதியில் விழுந்தனர்.

    மீட்பு படையினர் அங்கு செல்வதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 24 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனவே விபத்தில் பலியானோருக்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே அந்த பாலம் அறுந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பாலத்தின் மீது அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் ஏறி நின்றதால் பாரம் தாங்காமல் அறுந்தது தெரிய வந்துள்ளது.

    • கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் மேட்சல் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர் முரளி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இவரது கட்டிடத்தில் செல்போன் கடை மற்றும் 2 பூக்கடைகள் உள்ளன.

    நேற்று இரவு கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது.

    அப்போது சாலையில் நடந்து சென்ற ஒருவர் கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் திருப்பாத்தா என்ற மூதாட்டியும், ரபிக், தினேஷ் என்ற 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள்.
    • விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ளது கடலோர கிராமமான திருப்பாலைக்குடி. இவ்வழியாக சிதம்பரம், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், கேரள மாநிலம் களியாக்காவிளை போன்ற ஆன்மீக, சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் சுற்றுலா வாகனங்களும், தொண்டி கடல் பகுதியில் பிடிக்கும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் இவ்வழியாகச் செல்கின்றன.

    அதேபோல் தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தலமான வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள்.

    அந்த வகையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் ஒரு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருப்பாலைக்குடிக்கும் உப்பூருக்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது அதிகாலை 4.30 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் கூட்டத்தில் புகுந்தது. இதில் முனியசாமி மனைவி சாந்தி (வயது 50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி (40) ஆகிய 2 பெண் பக்தர்களும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் என்ன நடந்தது என்று சக பக்தர்கள் எண்ணியபோது, விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. மேலும் இந்த விபத்தில் நாகஜோதி மற்றும் சிலர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு பாதயாத்திரையாக சென்ற 2 பெண் பக்தர்கள் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 13 பேர் கன்வார் யாத்திரையை மேற்கொண்டனர்.
    • விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கன்வார் யாத்திரை என்பது சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் செல்லும் யாத்திரையாகும்.

    கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுக்கும் பக்தர்கள் அந்த தண்ணீரை ஒரு கம்பத்தின் இருபுறமும் தொங்கவிடப்பட்ட கொள்கலன்களில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தோள்களில் சுமந்து சென்று தங்கள் உள்ளூர் சிவாலயங்களில் உள்ள சிவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை ஜூலை 11 முதல் 23-ந்தேதி வரை நடந்து வருகிறது.

    மத்திய பிரேதச மாநிலம் சிதாவுனா கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் கன்வார் யாத்திரையை மேற்கொண்டனர். அவர்கள் நேற்று இரவு குவாலியர் ஷீட்லா மாதா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் யாத்ரீகர்கள் மீது மோதியது. இதில் 4 யாத்ரீகர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவர் இறந்தார். இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேல் நாரியப்பனூரில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விபத்தில் படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே அரசு பேருந்தும் தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவிலிருந்து வேளாங்கணிக்கு சென்றபோது செங்கிப்பட்டி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2பேரும் உயிரிழந்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கியதில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோராபுட், கட்டாக், கோர்த்தா, நயாகட், ஜாஜ்பூர், பாலேசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இதில் 10 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    சமேலி பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மீது கார் நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த மேலும் 2 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி பலியான 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான அனைவரும் ஆண்கள். அவர்கள் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    உயிரிழந்தவர்களின் பெயர், முகவரியை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் நேற்று இரவு வருடாந்திர ஜாத்ரா (ஊர்வலம்) நடைபெற்றது. அப்போது அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறையான அடிப்படை வசதிகள் செய்யாததே இச்சம்பவத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. 

      ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வில் பொக்கோஸ்கி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

      தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

      ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

      ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

      இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்தாண்டு மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

      இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

      இந்நிலையில், தன்னுடைய 27 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வில் பொக்கோஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

      ×