என் மலர்
நீங்கள் தேடியது "lorry"
- லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயபுரம்:
பூந்தமல்லி கூடம்பாக்கம் சேர்ந்தவர் இளங்கோ (வயது 44) லாரி டிரைவர். தண்டையார்பேட்டை இளைய முதலில் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (37) சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து காசிமேடு சிங்காரவேலன் நகரில் லாரி மற்றும் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றனர்.
பின்னர் லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி இளங்கோ, மதன்குமார் ஆகியோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அதில் காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரதீப் (20), அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சூர்யா (26) ஆகியோர் குடி போதையில் லாரி, ஆட்டோ கண்ணாடியில் கல்லை வைத்து உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பிரதீப் மீது 1 கொலை, 3 கொலை முயற்சி உள்பட 13 வழக்குகளும், சூர்யா மீது 1 கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் உள்ளன. இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த கழிவு லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர்.
- இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆலங்குளம்:
தமிழகத்தில் கேரளாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அங்கிருந்து திரும்பி வரும்போது அங்குள்ள இறைச்சி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தென்காசி மாவட்டங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கேரளாவில் இருந்து பிளாடிக், மருத்துவக்கழிவு என சுமார் 10 டன் கழிவுகளை முறைகேடாக ஏற்றி வந்த லாரியை ஆலங்கு ளத்தில் வாகனச்சோ தனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
பின்னர் அந்த லாரியை போலீஸ் நிலையத்திற்கு அருகே உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தினர். அந்த லாரியை அங்கு நிறுத்தியதால், ஆசிரியர்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் மாதக்கணக்கில் போலீசார் அந்த லாரியை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றாமல் உள்ளதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து சில நாட்களாக அந்த லாரி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பள்ளியின் வாசல் முன்பு மீண்டும் அந்த லாரியை போலீசார் நிறுத்தி உள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி மீண்டும் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசாரிடம், தனியார் பள்ளி முன்பு உங்களால் இப்படி லாரியை நிறுத்த முடியுமா? என ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமான பதிலை கூறி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். எனவே உடனடியாக அந்த லாரியை காட்டுப்பகுதிக்குள் எடுத்துச்சென்று விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
- எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
டெண்டர் நீட்டிக்க கோரிக்கை
இதற்காக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் டெண்டர் மூலம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து இருந்ததால் டெண்டரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என சங்கம் சார்பில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தும் அடிக்கடி சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆயில் நிறுவனங்களும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஒப்பந்தம் கையெழுத்து
நேற்றுடன் நடைமுறையில் உள்ள டெண்டர் முடிவடைந்துள்ளதால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஐ.ஓ.சி. ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கையெழுத்திட நேற்று நாமக்கல் வந்தனர்.
செல்லப்பம்பட்டியில் உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் முன்னிலையில் சங்க உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடிதம் வழங்கினர்.
பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ரான் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
சங்கத்தின் சார்பில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அது ஏற்கப்பட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயில் நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
இதன் மூலம் தென் மண்டலம் மற்றும் பிற மண்டலங்களில் இயக்கப்படும் 7,500 எல்.பி.ஜி. வாகனங்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது 54). மரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார். பின்னர் தோட்டப்பா டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வி. கிருஷ்ணாபுரம் பால் சொசைட்டி அருகே வேப்பூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறமாக வடமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வடமலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் வடமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குருசர பிரகாஷ் நேற்று நள்ளிரவு வேலை முடிந்து தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.
- அங்குள்ள பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்தவர் குருசர பிரகாஷ் (வயது 23). இவர் தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு வேலை முடிந்து தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.
அங்குள்ள பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குருசர பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிப்காட் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
- அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.
பல்லடம்:
பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் பணிக்கம்பட்டி அருகே உள்ள இலந்த குட்டை என்ற பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் ரோட்டை விட்டு திடீரென கீழே இறங்கியதால், ஸ்கூட்டர் சரிந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த லாரி நிற்காமல் சென்றதால், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சிறைபிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரம்பலூர் மாவட்டம் பேரளியில் கட்டுப்பாட்டை இழந்த காய்கறி லோடு லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது
- அதிர்ஷ்டவசமாக ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்
குன்னம்,
பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள பேரளி கிராமத்தில், ரியல் எஸ்டேட், தனியார் பேருந்து அதிபர் மனோகரன் என்பரின், சகோதரி வசந்தா என்பவரின் வீடு உள்ளது. வசந்தாவின் கணவர் சிதம்பரம் இறந்து விட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வந்தார். வழக்கம்போல இவர்கள் இரவு நேரத்தில் உணவு உண்டபின்னர் தூங்கி உள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் இடி விழுந்தது போல சத்தத்துடன் வீடு அதிர்ந்துள்ளது. அலறி அடித்து எழுந்த வந்து பார்த்தபோது காய்கறி ஏற்றிய லோடு லாரி ஒன்று அவர்களது காம்பவுண்ட் சுவரை உடைத்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரையையும் உடைத்துக்கொண்டு உள்ளே நின்றதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அரியலூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர்.
- லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
- அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உமையா ள்புரம் கிராமத்தில் உள்ள விவசாயி களிடமிருந்து 60 கட்டு வைக்கோல் போரை வாங்கிகொண்டு மினி லாரியில் ஏற்றி கொண்டு லால்குடி புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் உமையாள்புரம் மெயின்ரோ ட்டில்ல வரும்பொழுது மின் வயரில் லாரி உரசியதாக கூறப்படுகிறது.
இதில் லாரியில் இருந்த வைக்கோல் போர் தீ பிடித்து எரிந்தது. மேலும் லாரி டயர் மற்றும் டீசல் டேங் வெடித்து சிதறியது.
இதில் அதிஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
இது குறித்து லாரியின் உரிமையாளர் லால்குடி சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரூ. 4 லட்சம் சேதம் ஏற்பட்டது.
இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.
- சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்காழி:
விழுப்புரம்- நாகை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விரிவாகப் பணிக்காக விவசாய நிலங்கள் மற்றும் மனை பிரிவு, வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சீர்காழி தாலுகாவை பொறுத்தவரை சட்டநாதபுரம், செம்ப தனிருப்பு, காரைமேடு, காத்திருப்பு, அரசூர், சோதியக்குடி, எருக்கூர், தாடாளன் கோவில், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 5000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு ஒரு சில விவசாயிகளிடம் முன் பணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் மட்டுமில்லாமல் கூடுதல் நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பணம் கொடுக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனுக்களும் அளித்துள்ளனர்.
அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடத்திற்ககு சென்று சாலை விரிவாக்க பணிக்காக சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயின் முக்கிய கோரிக்கையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் வினை நிர்ணயம் செய்துள்ளதாகவும் இன்றைய சந்தை விலைக்கு நிர்ணயம் செய்து தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.