என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையின் விஸ்வபிரியநகரை சேர்ந்தவர் சிவானந்தா பாட்டீல். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஷ்ரேயாஸ் பாட்டீல் (வயது 19). பி.காம் மாணவர். இவர் இன்று அதிகாலை 3.45 மணியளவில், அக்ஷய் நகரை சேர்ந்த நண்பர் கே. சேத்தனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிடென்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. இதில் இருவரும் 25 அடியரத்தில் இருந்து பாலத்தின் கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார். சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

    • சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (42), இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார்.

    இதே போல் திருச்செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.

    விசைத்தறி தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரி ஓட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரனும் பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவர் கார்த்திகேயனை தேடி வருகிறார்கள்.

    • புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர்:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.

    மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.

    இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.

    புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு கேபிள் கார் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது.
    • இதில் கேபிள் அறுந்து விழுந்த விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.

    மிலன்:

    இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது65). இவரது மகன் கோபிநாத் (வயது40). இவரது மனைவி ஜீவிதா (35). கோபிநாத் சகோதரிகள் 2 பேர் மற்றும் இரு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் காரில் கர்நாடகாவில் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலா முடித்து விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற மினிலாரி எதிர் பாராதவிதமாக கார் மீது மோதியது.

    இதில் காரில் இருந்த உமாராணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கோபிநாத் உடன் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிய சூழலில் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் அரை மணி நேரம் போராடி அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.
    • இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது. டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார். இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.

    இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் டேங்கர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணித்தவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

    • விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
    • 19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.

    முருகன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.

    ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
    • கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

    சாண்டோ டொமிங்கோ:

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.

    இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.

    அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

    சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் இறந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    • மோகன் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் வரவூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது மகன் நிரோஷன் (7) மகள் சியாஷினி (3) அழைத்து கொண்டு காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள கோவில் திருமாளம் என்கிற இடத்திற்கு பொருட்களை வாங்க வந்துள்ளார்.

    பின்னர் பொருட்களை வாங்கி விட்டு கோவில்திருமாளத்தில் இருந்து வரவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது பேரளம் அருகே அகரதிருமாளம் என்கிற இடத்தில் சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இருந்து மோகனின் மோட்டார் சைக்கிளிலில் மோதியது.

    இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
    • கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

    சாண்டோ டொமிங்கோ:

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.

    இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.

    நேற்று முன்தினம் அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

    சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.

    இந்நிலையில் கட்டிடத்தில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    • இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • இந்த விபத்தில் சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் சொல்லப்படுகிறது.

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

    இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென்று கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

    மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் பலர் பலியாகி இருப்பது தெரியவந்தது.

    இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். 160-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இடிபாடு களுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்கு னர் ஜுவான் மானுவல் மெண்டஸ் கூறும்போது, கேளிக்கை விடுதியின் மூன்று பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்புப்பணி நடந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி மக்களைத் தேடுகிறோம் என்றார்.

    இந்த நிலையில் இந்த விபத்தில் முன்னாள் பேஸ்பால் அணி வீரர் ஆக்டேவியோ டோட்டல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    • பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
    • பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    டெல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒரு இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் டெல்லியைச் சேர்ந்த 24 வயது பிரியங்கா. தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வாட்டர் பார்க் -க்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.

    கடந்த வியாழக்கிழமை, பிரியங்காவும் நிகிலும் மதியம் 1 மணியளவில் கேளிக்கை பூங்காவிற்கு வந்தனர். மாலை ஆறு மணிக்கு இருவரும் ரோலர் கோஸ்டரில் ஏறினார்கள்.

    ஊஞ்சல் அதன் உச்சத்தை அடைந்தபோது, பிரியங்காவைத் தாங்கி நின்ற ஸ்டாண்ட் சரிந்து, அவர் தரையில் விழுந்தார். பிரியங்கா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பிரியங்காவுக்கும் நிகிலுக்கும் ஜனவரி 2023 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் பிப்ரவரி 2026 இல் திட்டமிடப்பட்டது. பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    ×