என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சோளிங்கர் அருகே கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம்
    X

    சோளிங்கர் அருகே கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம்

    • கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
    • தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.

    பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள், 2 டிரைவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×