என் மலர்
நீங்கள் தேடியது "விமான விபத்து"
- உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.
- விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் நேற்று இரவு, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் லாதேஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் (41). இவர் ஒரு சிறிய உணவகம் நடத்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
கடந்த வாரம் இவரது உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சஞ்சய் 65% தீக்காயங்களுக்கு உள்ளானார்.
உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், அவரை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
பணக்கஷ்டத்தில் இருந்தபோதிலும், எப்படியாவது அவரைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி, இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை சஞ்சய்யின் மனைவி ஏற்பாடு செய்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் சஞ்சய்யுடன் அவரது மனைவி அர்ச்சனா தேவி மற்றும் உறவினர் துரு குமார் ஆகியோரும் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக சத்ரா மாவட்டத்தின் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் நோயாளி சஞ்சய், அவரது மனைவி, உறவினர், மருத்துவர், செவிலியர், 2 விமானிகள் என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சஞ்சய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் அவரது மனைவியும் பிறரும் அவருடன் சேர்த்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரை அழைத்துச் சென்றனர்.
- வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
விபத்து ஒன்றில் 63 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளியை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.
அவரை அழைத்துக்கொண்டு, 1 மருத்துவர், 1 செவிலியர், 2 உதவியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 7 பேரும் விமானம் நேற்று இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது.
மோசமான வானிலையைத் தவிர்க்க பாதையை மாற்ற கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளது.
அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே, அதாவது 7:34 மணிக்கு, வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் விமானத்தின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம் கசாரியா காட்டுப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது பின்னர் தெரியவந்தது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது.
- தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.

இந்த விபத்தில் சதிச் செயல் இருக்கலாம் என்று பலரை போலவே அஜித்பவாரின் மருமகனும் எம்.எல்.ஏவுமான ரோஹித் பவார் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறார்.
தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் மதிப்பு ரூ.35 கோடி மட்டுமே, ஆனால் அது ரூ.210 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ரோஹித் பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னணியில் உள்ள நிதி நோக்கங்கள் குறித்து விசாரணை தேவை என அவர் கோரியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய வி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் விமான போக்குவரத்து இயக்குனரகமான DGCA அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளது.
எனவே விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து ராம் மோகன் நாயுடு விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ரோஹித் பவார் விரிவான கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
- கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே கண்டறிய முடியும்.
- முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக அவரது இளைய மகன் ஜய் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில், "விமானத்தின் பிளாக் பாக்ஸ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. மகாராஷ்டிர மக்களுக்கு இந்த விபத்தின் முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை உண்டு.
விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தடை விதித்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெய் பவார் தாயாரும் தற்போதைய துணை முதல்வருமான சுநேத்ரா பவார் மற்றும் சகோதரர் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் பட்நாவிஸை சந்தித்து இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இருந்தனர்.
- இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது.
- ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.
மனித உடல் என்பது ஒரே மாதிரியான கூறுகளால் ஆனது. ஆனால் மனித உயிரின் மதிப்பு என்பது எந்த காலத்திலும் சமமாக இருந்ததில்லை. சமூகத்தின் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அது இருந்திருக்கிறது.
நவீன காலத்தில் அரசுகள் மனிதன் வாழ்வதற்கான உரிமையை சமமாக வழங்குவதாக கூறுகின்றன. அனைத்து நாட்டு அரசியலமைப்புகளிலும் அந்த வரி இருக்கிறது.
உணவு, மருத்துவம் உள்ளிட்ட அதற்கான திட்டங்களும் அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சமூகம் இன்னும் பரபட்சமானதாகவே இருந்து வருகிறது. ஒரு நாட்டுக்குள் இருக்கும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதை தாண்டி நாடுகளுக்கிடையேயான இடைவெளியும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடிமகனின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்கும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்போரின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்குமே பாரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தால் அது அந்த வாரத்தின் பரபரப்பாக மாறுகிறது.
ஆனால் சூடானில் கிளர்ச்சியாளர்களால் ஒரே கிராமத்தில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, குறைந்தபட்சம் பேசுபடுவதோ அல்லது உலகளவில் ஆவணமாவதோ கூட கிடையாது.

இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு பழிவாங்க காசாவில் 70,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் மற்றொரு உதாரணம்.
இது ஒரு புறம் இருக்க, அதிகாரம் மக்களின் உயிரின் மீது எத்தனை மதிப்பளிக்கிறது என்பதுமே கேள்விக்குரிய ஒன்றே.
ஒரு விபத்து நிகழ்ந்தால் உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என அறிவிக்கப்டுகிறதே தவிர அதுபோன்ற விபத்து அல்லது தவறுகளை அடுத்து நிகழாமல் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசுகள் தரப்பில் நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ளப்டுகிறதா என்பது பெரிய கேள்விக்குறியே.
மனித உயிர் விலைமதிப்பற்றது. இருப்பினும் இழப்பீடு என்பது உயிரிழந்தவரின் வெற்றிடத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள குடும்பத்திற்கு தேவை என்பதும் மறுக்க முடியாதது.
இதன் அடிப்படையில் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்படுகிறது என்பது ஒரு உயிருக்கு அதிகாரம் எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வகையில் அண்மையில் இழப்பீடு குறித்து வந்த 2 செய்திகள் ஒப்புநோக்கத்தக்கவை.
ஒன்று கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 260 பேருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு.

ஏர் இந்தியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
எனவே உயிரிழந்த 260 பேருக்கும் தலா ரூ.1கோடி வீதம் இழப்பீடாக மொத்தம் ரூ.260 கோடி வழங்கப்படுகிறது.
மற்றொரு செய்தி, அமெரிக்காவில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த 23 வயது இந்திய மாணவி ஜான்வி கண்டுலா குடும்பத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணம்.

கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம், ஜான்வியின் குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி வாகனத்தை சுமார் 119 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே ஜான்வியின் உயிரிழப்புக்கு காரணம்.
எனவே எந்த தவறும் செய்யாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு பொருத்தமானது என அந்நாட்டு நீதிமன்றம் கருதியது.
அகமதாபாத் விமான விபத்திலும் பயணிகள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் அவர்களின் உயிருக்கு மதிப்பு ரூ.1 கோடி என்று முடிவுகட்டபடுகிறது. ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.
- அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரிய வந்தது.
- இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை .
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை மாதம் வெளியான ஆரம்பகட்ட அறிக்கையில் எரிபொருள் ஸ்விட்சை திடீரென அணைந்ததால் 2 என்ஜின்களும் செயலிழந்தது விபத்து காரணம் என்று தெரிய வந்தது.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை வேண்டுமென்றே அணைத்தார் என அமெரிக்க ஊடகங்கள் கூறி வந்தன.
இதற்கிடையே, அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' அண்மையில் வெளியிட்ட செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த அறிக்கையில், "விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.
வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவந்துள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்தது.
போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஊகங்களே என்றும் மத்திய விமான போக்குவரத்துக்கு துறையின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) விளக்கமளித்துள்ளது.
புலனாய்வு இன்னும் நடைபெற்று வருகிறது. இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்று AAIB தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழக்க வாய்ப்பில்லை.
- விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது என்று முதற்கபட்ட ஆய்வில் தெரியவந்தது.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.
ஆனால் அதை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக விமானி சபர்வாலின் 91 வயது தந்தை, இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் வன்மையாக மறுத்துள்ளனர். விமானத் தயாரிப்பு நிறுவனத்தையும் விமான நிறுவனத்தையும் காப்பாற்றவே இறந்த விமானிகள் மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுரோட்டில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்பப் கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.
- அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக விமான விபத்துகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.
மத்திய அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய தரவுகளின்படி, இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளை கண்டறியப்பட்டுள்ளது.
2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட விமானங்களில் சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் முதலிடத்தில் உள்ளது. இக்குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் அதிக கோளாறுகள் பதிவாகி உள்ளது.
ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
எஞ்சின் கோளாறு, கேபின் அழுத்தம் குறைதல் மற்றும் அவசரகால உபகரணங்கள் சரியாக வேலை செய்யாதது போன்ற கோளாறுகள் ஒரு முறை சரிசெய்யப்பட்டபோதும் ஒரு சில நாட்கள் மீண்டும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
எனவே, குறைபாடுகள் உள்ள விமானங்களை முழுமையாக சரிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
விமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததே இந்தப் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
- மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.
- ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது.
மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று, மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.
அப்போது ஐதராபத்தில் இருந்து இண்டிகோ விமானம் பயணிகளுடன் ஓடுபாதையில் வந்திறங்கியது. இதன் போது இரு விமானிகளும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.
இதில் இரண்டு விமானங்களின் இறக்கை முனைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்தைத் தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
விமானங்கள் ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
- திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.
திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்தார்.
- கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்?
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.
நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.
இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.
உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் கூறுகையில், "பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், "அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.






