search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black box"

    • மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

    கேரள மாநில காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:-

    கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்திற்கு விமானப்படையின் ஹெலிகாப்டரில் மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டருடன் வந்தார்.

    மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பெட்டியை எடுத்துச் சென்றது சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பெட்டியில் இருந்தது என்ன?

    அது தேர்தலில் பணத்தை வினியோகம் செய்ய பிரதமர் மோடி கொண்டு வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஐந்து வருடங்கள் கழித்தும் கூட தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. மோடி புனிதர் வேடமணிந்த உண்மையான ஊழல்வாதி.

    ஒடிசா மாநிலத்தின் சாம்பல்புர் மக்களவை தொகுதியின் பொது பார்வையாளராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, நரேந்திர மோடி காருடன் அணிவகுத்து சென்ற காரை சோதனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி தேர்தல் பார்வையாளரிடம் எதை மறைக்க வேண்டும்?.

    இவ்வாறு அந்த எக்ஸ் பக்க பதிவில் கேரள மாநில காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    • விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உள்ளிட்ட 72 பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தை நெருங்கியபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உள்ளிட்ட 72 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட

    காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விபத்து பற்றிய முக்கிய தடயங்கள் இந்த பெட்டிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்பது வானொலி ஒலிபரப்புகள், காக்பிட்டில் விமானிகளுக்கு இடையேயான உரையாடல்கள் மற்றும் என்ஜின் சத்தங்கள் போன்ற மற்ற ஒலிகளையும் பதிவு செய்கிறது. ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டரில் விமானத்தின் வேகம், பறக்கும் உயரம் மற்றும் திசை, பைலட்டின் செயல்பாடுகள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் செயல்திறன் போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்கள் பதிவாகும். 

    பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #PMModi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திமோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

    2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

    ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.


    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய கருப்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒருவேளை அதில் பணம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் அதில் என்ன இருந்தது என்ற உண்மை வெளியே வர வேண்டும். இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.

    ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியை தனியார் இன்னோவா காரில் ஏற்றி இருக்கிறார்கள். உடனே அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கார் சிறப்பு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இதுதான் பெரும் சந்தேகமாக உள்ளது.

    கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சார்பில் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து தேர்தல் கமி‌ஷன் தான் தனது கடமையை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார். #PMModi #Congress
    இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

    விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


    விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும்.

    கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது.  #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    ×