என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black Box"

    • ஏர் இந்தியா விமானம் (AI171) ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
    • AAIB விசாரணையை மேற்கொண்டு முழு செயல்முறையையும் ஆராயும் என்று கூறினார்.

    அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI171) ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர்.

    மறுநாள், சம்பவ இடத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டியை அதிகாரிகள் மீட்டனர். கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    இருப்பினும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு செவ்வாயன்று இந்த ஊகங்களை நிராகரித்தார்.

    "இவை அனைத்தும் ஊகங்கள். கருப்புப் பெட்டி இந்தியாவில் உள்ளது. இது தற்போது விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தால் (AAIB) விசாரிக்கப்படுகிறது" என்று ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறினார்.

    கருப்புப் பெட்டியிலிருந்து தகவல்கள் எப்போது மீட்டெடுக்கப்படும் என்று கேட்டபோது, AAIB விசாரணையை மேற்கொண்டு முழு செயல்முறையையும் ஆராயும் என்று கூறினார்.

    விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை கண்டறிய கருப்புப் பெட்டி டிகோடிங் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    • இதுவரை 210 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
    • கருப்பு பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.

    அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்தனர். இதுவரை 210 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 187 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்காக, இந்திய அதிகாரிகள் விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தின் சேதமடைந்த கருப்புப் பெட்டியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்திற்கு (NTSB) அனுப்ப உள்ளனர்.

    பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததால், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற அமெரிக்கா அனுப்ப உள்ளது.

    • 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
    • 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.

    241 பேர் உயிரிழந்த அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், 'பிளாக் பாக்ஸ்' (கருப்புப் பெட்டி) என அழைக்கப்படும் விமானப் பதிவு கருவி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்த இந்த சோகமான விபத்துக்கான உண்மையான காரணத்தை இந்தக் கருவி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விமானம் "மேடே" (MAYDAY) அழைப்பை விடுத்த பிறகு ஏற்பட்ட தகவல்தொடர்பு துண்டிப்பு மற்றும் பிற எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை இது வெளிப்படுத்தும்.

    பிளாக் பாக்ஸ் என்றால் என்ன?

    பிளாக் பாக்ஸ் என்பது விமானப் பயணத்தின்போது விமானம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் ஒரு சிறிய கருவியாகும். இது 1950களின் முற்பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் ரொனால்ட் டி மே வாரன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெடிப்புகள், தீ, நீர் அழுத்தம் மற்றும் அதிவேக விபத்துக்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிளாக் பாக்ஸில் என்ன இருக்கும்?

    ஒரு பிளாக் பாக்ஸில் முக்கியமாக இரண்டு பதிவு கருவிகள் உள்ளன.

    காக்பிட் குரல் பதிவு கருவி (Cockpit Voice Recorder - CVR) - இது விமானிகளின் குரல்கள், காக்பிட் ஒலிகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளைப் பதிவு செய்யும்.

    விமானத் தரவு பதிவு கருவி (Flight Data Recorder - FDR) - இது உயரம், வேகம், விமானப் பாதை, ஆட்டோபைலட் நிலை போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்களைப் பதிவு செய்யும்.

    விபத்துக்களை எவ்வாறு தாங்குகிறது?

    பிளாக் பாக்ஸ், எஃகு அல்லது டைட்டானியம் போன்ற வலுவான பொருட்களால் ஆனது. 3,400 மடங்கு ஈர்ப்பு விசையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, துருப்பிடிக்காத எஃகு அல்லது டைட்டானியத்தால் ஆன 'கிராஷ் சர்வைவபிள் மெமரி யூனிட்' (Crash Survivable Memory Unit). இதில் உள்ளது.

    இது அதிக வெப்பம் மற்றும் குளிர் போன்ற வெளிப்புற காரணிகளிலிருந்து தப்ப உதவுகிறது. மேலும், விபத்தின் தாக்கம் பொதுவாக குறைவாக இருக்கும் விமானத்தின் வால் பகுதியின் கடைசியில் இந்த கருவிகள் வைக்கப்படுகின்றன.

    விசாரணைக்கு எப்படி உதவுகிறது?

    விமான விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மறுகட்டமைப்பு செய்யவும் இந்த இரண்டு கருவிகளும் உதவுகின்றன. விபத்துக்குப் பிறகு பிளாக் பாக்ஸ்களிலிருந்து தரவுகளை ஆய்வு செய்ய பொதுவாக 10-15 நாட்கள் ஆகும். 

    • விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உள்ளிட்ட 72 பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தை நெருங்கியபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உள்ளிட்ட 72 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட

    காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விபத்து பற்றிய முக்கிய தடயங்கள் இந்த பெட்டிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்பது வானொலி ஒலிபரப்புகள், காக்பிட்டில் விமானிகளுக்கு இடையேயான உரையாடல்கள் மற்றும் என்ஜின் சத்தங்கள் போன்ற மற்ற ஒலிகளையும் பதிவு செய்கிறது. ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டரில் விமானத்தின் வேகம், பறக்கும் உயரம் மற்றும் திசை, பைலட்டின் செயல்பாடுகள் மற்றும் முக்கியமான அமைப்புகளின் செயல்திறன் போன்ற 80க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தகவல்கள் பதிவாகும். 

    • மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

    கேரள மாநில காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:-

    கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்திற்கு விமானப்படையின் ஹெலிகாப்டரில் மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டருடன் வந்தார்.

    மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பெட்டியை எடுத்துச் சென்றது சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பெட்டியில் இருந்தது என்ன?

    அது தேர்தலில் பணத்தை வினியோகம் செய்ய பிரதமர் மோடி கொண்டு வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஐந்து வருடங்கள் கழித்தும் கூட தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. மோடி புனிதர் வேடமணிந்த உண்மையான ஊழல்வாதி.

    ஒடிசா மாநிலத்தின் சாம்பல்புர் மக்களவை தொகுதியின் பொது பார்வையாளராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, நரேந்திர மோடி காருடன் அணிவகுத்து சென்ற காரை சோதனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி தேர்தல் பார்வையாளரிடம் எதை மறைக்க வேண்டும்?.

    இவ்வாறு அந்த எக்ஸ் பக்க பதிவில் கேரள மாநில காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #PMModi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திமோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

    2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

    ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.


    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய கருப்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒருவேளை அதில் பணம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் அதில் என்ன இருந்தது என்ற உண்மை வெளியே வர வேண்டும். இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.

    ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியை தனியார் இன்னோவா காரில் ஏற்றி இருக்கிறார்கள். உடனே அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கார் சிறப்பு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இதுதான் பெரும் சந்தேகமாக உள்ளது.

    கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சார்பில் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து தேர்தல் கமி‌ஷன் தான் தனது கடமையை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார். #PMModi #Congress
    இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘லயன் ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகள், 2 பச்சிளங் குழந்தைகள், ஒரு சிறுவன், 2 விமானிகள், 6 பணியாளர்கள் என 189 பேர் பலியானார்கள். இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

    விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர்.


    விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் லயன் ஏர் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் அதில் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் குறித்து நாங்கள் இன்னும் ஏதும் அறியவில்லை. ஆய்விற்குப் பின் தெரியவரும்.

    கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விமானத்தின் விபத்திற்கான முழு விவரம் விரைவில் தெரிய வர வாய்ப்புள்ளது.  #LionAirFlight #PlaneMissing #LionAirPlaneCrashes #LionAir 
    ×