என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ்"
- நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
- கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல.
- ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு...! பரவலாக பேசப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.
அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் கிடைக்கப் போகும் பலன் என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்து உள்ளார்கள் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
இந்திய சமூக அமைப்பு 5 ஆயிரம் ஆண்டுகளாக சமசீரற்ற முறையில் இருந்தது. ஒரு தரப்பு உயர் சாதி என்று அதிகார செருக்கில் இருந்தது.
இன்னொரு தரப்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக யார் கண்ணிலும் படாமல் உரிமையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அன்றைய சமூக அமைப்பில் அதை நியாயம் என்று கூறி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரவர் பிறந்த சமூகத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது ஈஸ்வரன் கொடுத்த வரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு சில சமூகத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற நிலை இருந்தது. பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை அப்படித்தான் வாழ வேண்டும். அதையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அங்கீகரித்தார்கள். ஏற்றுக்கொண்டார்கள். இதைவிட காட்டுமிராண்டித்தனமான அநாகரீகமான, மானுடநெறி பிறழ்ந்த சமூக அமைப்பு இருக்க முடியாது.
மிருகங்களுக்கு இடையே கூட இத்தகைய பாகுபாடு கிடையாது. பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இங்குதான் இருந்தது. வயதான கிழவருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அவர் இறந்ததும் அவரது உடலோடு அந்த பெண்களையும் கட்டி வைத்து எரித்து விடுவார்கள். அந்த பெண் பத்தினியாகி விட்டார்.
சிவலோக பதவி அடைந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வார்கள். இந்த காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்கத்தான் சீர்திருத்தவாதிகளும், புரட்சியாளர்களும் பாடுபட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மனித உணர்வுமிக்க சமூக நீதியை அவர்கள் நிலை நாட்டினார்கள்.
அதேபோல்தான் இடஒதுக்கீடு முறையும். எல்லா சமூகங்களாலும் உடனடியாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட முடியாது என்ற நிலை இருந்தது. அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறை தேவைப்பட்டது.
நமது அரசியல் சட்டத்தை இயற்றிய போது இடஒதுக்கீட்டை தலைவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இட ஒதுக்கீடு அவசியம் என்ற குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சேவலை வழங்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கோர்ட்டு சுட்டிக் காட்டியது. இதுதான் இடஒதுக்கீடு அவசியத்துக்கான பொறியாக அமைந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அவர் அதிகாரத்தில் இல்லாததால் அந்த குரல் எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை.
இந்த பிரச்சனை பெருந்தலைவர் காமராஜரின் காதுகளை எட்டியது. அவரும் அதன் நியாயத்தை உணர்ந்தார். பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயத்தை எடுத்து சொன்னார். இதனால் அரசியல் சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட நேரு பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்தார். ஆனால் அப்போது எம்.பி.க்களாக அதிக அளவில் இருந்த உயர் சாதியினரும், இடஒதுக்கீடு தேவையில்லை என்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் சட்டம் இப்போதுதான் இயற்றப்பட்டுள்ளது. அதில் உடனடியாக திருத்தம் தேவையா? என்றவர்களும் இருந்தார்கள். இதை உணர்ந்த நேரு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். சுதந்திரம் பெற்றது அனைவருக்கும் சமநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது அதற்கு சட்டத் திருத்தம் அவசியமாகிறது. எனவே உங்கள் மாநில எம்.பி.க்களை இந்த சட்டம் நிறைவேற வாக்களிக்க சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அரசியல் சட்ட திருத்தம் நிறைவேறியது. இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தமும் அதுதான்.
அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரும் தேவையை உணர்ந்து சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைத்தார். சட்டப்படி இடஒதுக்கீடு கிடைத்தாலும் சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துல்லியமாக இல்லை என்ற குரல் எழுந்தது. அனைத்து தரப்பு மக்கள், ஏழைகள் கீழ் நிலையில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல. சாதி ஒரு அடையாளம். அதுபோல் வாழ்க்கை கிடையாது. எந்த சாதியையும் ஆதிக்கம் செலுத்த ஜனநாயகம் அனுமதிக்காது.
பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 63.14 சதவீதம் இருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு 27 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.
தமிழகத்திலும் இதே நிலைதான் இருக்கும். சில சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. சிலருக்கு உயர்சாதி என்பதால் கிடைப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு கிடைக்கும். துல்லியமாக அனைத்து தரப்பினருக்கும் இடஒதுக்கீடு தேவை. அதற்கு சாதிவாரியான புள்ளி விவரம் அவசியம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்ட பிறகு நாடு முழுவதும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+2
- நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
- படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன்.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
காமராஜர் கல்வி வளாகத்தில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில், நடிப்பவர்கள் கூட படிப்பை சொல்லி கொடுத்தால் தான் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
விழா முடிவில் கவர்னர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கூறியுள்ளாரே? என கேட்டதற்கு, பேச்சு உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது.
அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்கமாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்கிறாரே. இதை அரசியலில் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள்.
சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்களாக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்நோக்கம் இல்லை என்றார்.
- ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு கடந்த ஒரு வருடமாகவே அடிபடுகிறது. ஆனால் டெல்லி மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது புதிய தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.
இதையடுத்து தலைவர் பதவிக்கான ரேசில் பலர் இறங்கி இருக்கிறார்கள். இந்த போட்டியில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்வக்குமார், கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
செல்வப்பெருந்தகை தலித் என்ற துருப்பு சீட்டை வைத்துள்ளார். அதே நேரம் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர். அவருக்கு எதிராக கட்சியினரும் பல புகார்களை மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்கள்.
ஜோதிமணி எம்.பி ராகுலுக்கு நெருக்கமானவர். எனவே ராகுலின் தேர்வு ஜோதிமணியாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் ஜோதிமணிக்கும் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லை. கரூர் தொகுதியை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணிக்கு எதிராக உள்ளார்.
வருகிற தேர்தலிலும் கரூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. எனவே ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டாக்டர் செல்வக்குமார் எம்.பி. இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கட்சியை திறம்பட வளர்த்தவர். தனக்கு தலைவர் பதவி கொடுத்ததால் ஏற்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்தி ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனக்கு அனைத்து தகுதியும் இருப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அவரும் தலைவர் பதவியை பெறுவதற்கு டெல்லியில் தலைவர்களை சந்தித்து வருகிறார். தனது தந்தையான ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதுவரை தலித்துக்கு தலைவர் பதவி வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லை. அதேநேரம் கேரள மாநில பொறுப்பாளராக இருந்து கட்சியை வளர்த்ததையும், ராகுல் யாத்திரையை சிறப்பாக நடத்தியதையும் குறிப்பிட்டுள்ளார். மாநில தலைவர் பதவி வழங்கினால் எம்.பி. தேர்தலில் சீட் கேட்கப்போவதில்லை என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர் ஒரு முறை தலைவராக இருந்துள்ளார். மற்ற தலைவர்களை போல் தனக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கிடையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறும்போது, தலைவர் பதவிக்கான ரேசில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது எனக்கு தெரியாது. அது கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு என்றார்.
இதற்கிடையில் கே.எஸ்.அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். தனது பதவி காலத்தில் கோஷ்டி பூசல் இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனவே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலையும் சிறப்பாக எதிர்கொள்ள தனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இன்று பிற்பகலில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட் டணி கட்சிகளுடன் சுமூகமாக செல்லக்கூடியவர், கூட்டணி கட்சிகள் விரும்பக் கூடியவருக்கு முன்னுரிமை கொடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சித்தராமையா சாதிகளுக்கு எதிராக பேசுகிறார். ஆனால் சாதி வாரியாக நடைபெறும் மாநாடுகளில் கலந்து கொள்கிறார். இது தான் அவரது மதசார்பற்ற கொள்கை. நான் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி நடத்தியபோது கூட மத பிரச்சினைகளுக்கு இடம் அளிக்கவில்லை. ஆனால் தற்போது என்ன ஆகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூகங்களை உடைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு காரணம் யார், பா.ஜனதா அரசு அமைய காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி நடத்தினேன். அதே போல் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தேன். ஆனால் எங்கள் கட்சியை பா.ஜனதாவின் "பீ டீம்" என்று காங்கிரசார் விமர்சிக்கிறார்கள்.
மராட்டியத்தில் சிவசேனா கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. இதை என்னவென்று சொல்வது?. மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க சபதம் செய்து பணியாற்றி வருகிறோம். கர்நாடகத்தில் நல்லிணக்கத்தை பாழ்படுத்த இந்து அமைப்புகளை பா.ஜனதா அரசு ஊக்குவிக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு தேவையான வாக்குகள் எந்த கட்சியிடமும் இல்லை. அதனால் நாங்கள் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
அப்போது, 1991-ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் பேரணியின்போது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாள் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-
எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனது தந்தையின் மரணம். அதைவிட பெரிய அனுபவம் வேறு எதுவும் இல்லை.
என் தந்தையைக் கொன்ற நபர் அல்லது சக்தியை காணும்போது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஒரு மகனாக நான் என் தந்தையை இழந்தேன். அது மிகவும் வேதனையானது.
ஆனால் அதே நிகழ்வு, நான் ஒருபோதும் கற்றுக் கொள்ளாத விஷயங்களைக் கற்றுக் கொள்ளச் செய்தது. அதில் இருந்து என்னால் விலகிச் செல்ல முடியாது. எனவே நீங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்வரை மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் அல்லது தீயவர்கள் என்பது முக்கியமல்ல.
பிரதமர் நரேந்திர மோடி என்னைத் தாக்கினால், கடவுளே அவர் மிகவும் கொடூரமானவர். அவர் என்னைத் தாக்குகிறார் என்று பார்ப்பது ஒரு விதம். மற்றொன்று அதை நன்றாகப் பார்ப்பது. நான் அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் கொடுங்கள் என்பேன்.
வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும், குறிப்பாக பெரிய ஆற்றல்கள் நகரும் இடங்களில் நீங்கள் இருந்தால் எப்போதும் காயப்படுவீர்கள். நான் செய்வதை நீங்கள் செய்தால் நீங்கள் காயமடைவீர்கள். அது சாத்தியமில்லை. ஒரு பெருங்கடல், நீங்கள் கீழே செல்லப் போகிறீர்கள். நீங்கள் கீழே செல்லும்போது அதிலிருந்து எப்படி நடந்துகொள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை பணியில் சேர மாட்டோம் - காஷ்மீர் பண்டிதர்கள்