search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி"

    • பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது.
    • நாகப்பாம்புகள் விருப்பமான இரையில் கரையான்கள் மற்றும் தவளைகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார்.

    உத்தரபிரதேசத்தின் ஈர நிலங்களில் புதிய வகை நாகப்பாம்பு இனம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ரா என்று பெயரிடப்பட்ட இந்த பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது. அதன் அரிய தோற்றம் கவனத்தை ஈர்க்கிறது.

    சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரயாக்ராஜில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி பயிற்சி மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு மையத்தின் ஆராய்ச்சி மாணவர் ராகுல் நிஷாத் இதனை கண்டுபிடித்துள்ளார்.

    அவரது கண்டுபிடிப்புகள் சர்வதேச இதழான "ரெப்டைல்ஸ் அண்ட் அம்பிபியன்ஸ்" இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நாகப்பாம்புகளில் உள்ள அல்பினிசத்தின் மரபணு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அங்கு இயற்கை நிற நிறமியான மெலனின் இல்லை.

    பிரயாக்ராஜை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் நிஷாத் டேராடூனில் உள்ள டூன் பல்கலைக்கழகத்தில் வனவியல் படிப்பை தொடர்ந்தார், மேலும் பிரயாக்ராஜின் நைனியில் உள்ள ஷுவாட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

    இதுதொடர்பாக ராகுல் நிஷாத் கூறுகையில்,

    இந்த கண்டுபிடிப்பு பல்லுயிர் பற்றிய புரிதலை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல் ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

     

     

    நாகப்பாம்புகள் விருப்பமான இரையில் கரையான்கள் மற்றும் தவளைகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார். இது பெரும்பாலும் ஈரநிலங்கள் மற்றும் சமவெளிகள் போன்ற இரைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கிறது.

    அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ராவின் கண்டுபிடிப்பு, நாட்டில் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் தற்போதைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

     

    • வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இது உ.பி. அரசின் மத துவேச நடவடிக்கை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கான்பூர்:

    முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தர பிரதேசம் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்துக்கு கடந்த 10ந்தேதி அழைப்பு விடுத்திருந்தனர்.

    இந்த போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. இதில் பல இடங்களில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இந்த கலவரத்தில் 20 போலீஸ்காரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் கைது நடவடிக்கைகளையும் தொடங்கினர்.

    இதில் 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரயாக்ராஜ் நகரில் இருந்து 92 பேர், சஹாரன்பூரில் இருந்து 83 பேர், ஹத்ராசில் இருந்து 52 பேர், மொராதாபாத்தில் இருந்து 40 பேர், பெரோசாபாத்தில் இருந்து 18 பேர் மற்றும் அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இருப்பினும் இது உ.பி. அரசின் மத துவேச நடவடிக்கை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    எருமையை தொலைத்ததாக கூறியவர் புகார் அளித்து உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கும் கடிதம் எழுதினார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஈன்ற கன்றுக்குட்டி ஒன்று, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் பல இடங்களில்  தனது எருமைக்கன்றை தேடி அலைந்துள்ளார். இறுதியொல் அவர் அவரது கிராமத்திற்கு அருகே இருந்த சஹரான்பூரின் பீன்பூர் என்ற கிராமத்தில் சத்வீர் என்பவரிடம் ஒரு எருமைக்கன்று இருப்பதை கண்டறிந்தார்.

    அந்த எருமைக்கன்று தன்னுடையது என்று சந்திரபால் உரிமைக்கொண்டாடியுள்ளார். ஆனால் சத்வீர் எருமை கன்றை தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

    இது குறித்து சந்திரபால் பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து, அப்பகுதி காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்துள்ளார். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்திரபால், ஷாம்லி மாவட்ட எஸ்.பி. சுக்ரிதி மஹாதேவிடம் எருமையை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார். மேலும் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார். 


    இதையடுத்து, எஸ்பி சுக்ரிதி, டி.என்.ஏ. சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர். 

    இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது.
    உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து அந்தந்த மாநிலத் தலைவர்களை பதவி விலகுமாறு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தினார். 

    இதனால், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி காலியாகவுள்ளது.

    இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கட்சியின் புதிய மாநிலத் தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பேச்சு வார்த்தை  குறித்து ரஷித் கூறுகையில், ‘உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளது. எனினும், இது உள்கட்சி கூட்டம் என்பதால் இதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது’ என கூறினார்.
    ×