search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்முறை"

    • கடந்த 15-ந்தேதி தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது.
    • தற்போது சில இடங்களில் பிராட்பேண்ட் இன்டநெட் வழங்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் கடந்த 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது. டி.வி. நிலையங்களுக்கு தீ வைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு என பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர்.

    இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. வன்முறை கட்டுக்குள் வராததால் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டது.

    இதற்கிடையே உச்சநீதிமன்றம் வன்முறைக்கு காரணமாக வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்தது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    அதிகாரிகள் டாக்கா மற்றும் வங்காளதேசத்தின் 2-வது மிகப்பெரிய நகரமான சட்டோகிராமில் சில பகுதிகளில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் சில மணி நேரங்கள் திறந்து இருந்தன.

    இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இன்டர்நெட் முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. அதிகாரிகள் ஊரடங்கை ஏழு மணி நேரம் குறைத்ததால் சாலைகள் கார்கள் அதிக அளவில் இயங்கின.

    கடந்த 15-ந்தேதி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    • மனிதாபிமான நெருக்கடியின்போது அகதிகளுக்கு உதவ வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.
    • 'அகதிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில் மம்தாவுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது'

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்களால் கடந்த வாரம் முதல் கடுமையான போரட்டம் முன்னெடுக்கப்பட நிலையில் போராட்டம் கலவரமாக மாறி பல வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

     

     

    இந்த வன்முறையில் 133 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது . இந்நிலையில் இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.

    இருப்பினும் போரட்டம் இன்னும் அடங்காத நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.வங்காளதேச மக்கள் இந்த போராட்டதால் ஆபத்தான விளைவுகளை சந்தித்து வரும் நிலையில் வங்கதேச எல்லையில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று நடந்த பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவரும் வங்கதேச மக்களுக்கு தங்கள் மாநிலத்தில் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மனிதாபிமான நெருக்கடியின்போது அகதிகளுக்கு உதவ வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.

     

    இந்நிலையில் மம்தா வங்காள தேசத்தினருக்கு அடைக்கலம் தருவதாக வாக்களித்துள்ளது பாஜகவுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் அமித் மாளவியா, அகதிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில் மம்தாவுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது என்றும் மேற்கு வங்காளம் முதல்  ஜார்கண்ட் வரை வங்காளதேசத்தினரை குடியமர்த்தி தேர்தலில் வெற்றி பெற இந்தியா கூட்டணி வகுத்த சதித் திட்டம் இது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

    • நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.
    • நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மாணவர்களால் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 16-ந் தேதி டாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட பலர் பலியாகினர்.

    இதை தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகளை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வங்காளதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி வங்காளதேசத்தில் 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் கல்வி பயின்று வந்த தங்கள் மாநிலத்தை சேர்ந்த 120 மாணவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளதாக அசாம் அரசு நேற்று அறிவித்தது.

    அதே போல் திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 379 மாணவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு காரணமான 30 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில், "அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியான நபர்களுக்கு 93 சதவிகிதமும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 2 சதவிகிதம் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம்.
    • கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எழுப்பிய கருத்துகளின் உரையில் கூறியிருப்பதாவது,

    1. முதலில், நீட் முறைகேடு குறித்த விவாதத்தின் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். NEET-UG 2024 முடிவுகளின் பகுப்பாய்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் ராஜஸ்தானில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையங்களில் குவிந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம். 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அதிக சதவீத விண்ணப்பதாரர்களைக் கொண்ட 50 நீட்-யுஜி தேர்வு மையங்களில், 37 மையங்கள் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மட்டும் அமைந்துள்ளன. 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 30,204 மாணவர்களில், 2,037 பேர் சிகாரைச் சேர்ந்தவர்கள். இந்த அரசு நீட் தேர்வை மறைக்க முயல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் மிக முக்கியமானது.

    2. ஒவ்வொரு உறுப்பினரும் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவாத மேடையாக பாராளுமன்றம் செயல்படுகிறது. எனவே, சபையில் ஒவ்வொரு உறுப்பினரையும் சமமாக நடத்த வேண்டும். சிறிய கட்சிகளுக்கு 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்குவது நெறிமுறைக்கு புறம்பானது. ஒவ்வொரு உறுப்பினரும் அமர்வு நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பேசும் நேரத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.

    3. தற்போது, ஒரு மணி நேர கேள்வி நேரத்தில் வாய்வழி பதில்களுக்காக ஒரு நாளைக்கு 20 கேள்விகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன, பொதுவாக 5 முதல் 6 கேள்விகள் மட்டுமே விவாதிக்கப்படும். எனவே, கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    4. எல்லை நிர்ணய நடவடிக்கையால், மீனவர் சமூகம் உட்பட பல சமூகங்களுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அவர்களின் படகுகள் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். மத்திய அரசு அவர்களை இந்திய மீனவர்களாக அங்கீகரிக்காதது வருத்தமளிக்கிறது. இந்த அமர்வில் இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    5. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2023-ம் ஆண்டு இந்தியா மீதான மத சுதந்திர அறிக்கை, சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், தாக்குதல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு, கடை உரிமையாளர்கள் தங்கள் அடையாளங்களை பெயர்ப் பலகைகளில் காட்ட வேண்டும் என்று மதப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் நிலை குறித்து சபையில் விவாதம் அவசியம்.

    6. இறுதியாக, எஸ்சி மற்றும் எஸ்டிகளின் நிலை குறித்த விவாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன. NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட SDG அறிக்கை, நாட்டில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மோசமான தோல்வியைக் குறிக்கிறது. எனவே, இந்த முக்கியமான பிரச்சினையில் விவாதம் அவசியம்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
    • போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, டாக்கா, சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

    எஞ்சிய சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

    நேபாளம், பூட்டான் நாடுகளை சேர்ந்த மாணவர்களும் கோரிக்கையின் பேரில் இந்தியாவுக்குள் நுழைவற்கு உதவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக  உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

    போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும்பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். 

    • வன்முறையில் போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

    பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள் அறிக்கையில், வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என்றும், அவசர உதவி என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    • நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும், மதுராபூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூன் 3) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

     

    நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து பாஜக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மறு வாக்குப்பதிவானது இன்று நடத்தப்படுகிறது. 

    • சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் ஏற்படுகிறதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை

    சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் அரை மில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம், கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் தங்களது வாழ்விடங்களை இழந்து பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    தெற்காசியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் சுமார் 69,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் பிரதானமாக 97% அளவில் மணிப்பூரில் நடந்த குக்கி - மெய்தேய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 67,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    மேலும் உலகம் முழுவதும் வன்முறை மற்றும் கலவரங்களால் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் உடைமைகளையும் இழந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெருபாலான மக்கள் இன்னும் தங்களது ஊர்களுக்கு திருப்ப முடியாமல் கையறு நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை என்பவதே உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருமித்த ஆதங்கமாக உள்ளது.  

    • மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது.
    • கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

    சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய ஒரு தரப்பினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனற பிரச்சனை கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதனையொட்டி இந்த ஆண்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மீண்டும் அந்த கோயிலில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

    இந்த மோதலில் 5 கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவப்பட்டிப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அங்கு அடைக்கப்பட்டன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சேர்த்து 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காவல்துறையினர் பெண்கள் சிலரையும் தாக்கியதாக அப்பகுதியில் புகார் கூறிய பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தி தீவட்டிப்பட்டி பகுதியில் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×