என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
மணிப்பூர்
- தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அளித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
- தற்போது நிதிஷ் குமார் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.
மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக-வுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் நிதிஷ் குமார் கட்சி பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
மணிப்பூரில் நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ பதவிதான் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. ஆதரவை இழந்த போதிலும் பைரேன் சிங் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மத்தியிலும், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.-வின் முக்கிய கூட்டணி கட்சியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விளங்கி வருகிறது. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். மத்தியில் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அதரவு அளித்திருந்த நிலையில், அதை திரும்பப் பெற்றது. இந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஐந்து எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 60 இடங்களை கொண்ட பாஜக-வுக்கு 37 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.-க்கள், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கடசியின் மணிப்பூர் மாநில தலைவர்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் நிதிஷ் குமார்.
- மணிப்பூரில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல் மந்திரி பைரேன் சிங்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி-மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரத்தில் 250 பேர் பலியாகினர். இன்னும் அப்பகுதியில் கலவரம் ஓயவில்லை.
கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அம்மாநில முதல் மந்திரி பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை நேற்று மாலை ஒரு கும்பல் தாக்கியது.
இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் சேதமடைந்தன.
இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
- அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் குண்டுகளை வீசினர்
மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் கிராமத்தில் குண்டு வீசி தாக்குதல்
இந்த ஆண்டு [2024] முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த வருடம் மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன் என்று பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி - மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரம் 250 பேர் வரை காவு வாங்கியது. இன்னும் கலவரம் ஓயாத சூழலில் கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/01/7716968-updrunginspector1.webp)
இந்நிலையில் நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் முகாந்திரமாக பாஜகவின் பைரன் சிங் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் இன்று மீண்டும் கிளர்ச்சியாளர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தின் கடங்பண்ட் பகுதியில் இன்று [புதன்கிழமை] அதிகாலையில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கும் நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தாழ்வான கடங்பண்ட் பகுதியில் உள்ள கிராமத்தின் மீது அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் குண்டுகளை வீசியும் தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது .
நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். கிராமத்தினருடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 2023 மே மாதம் மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து கடங்பண்ட் பகுதி கிளர்ச்சியாளர்களால் அதிக தாக்குதலை சந்தித்துள்ளது.
- முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றார்.
இம்பால்:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன்.
நாம் இப்போது கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். அமைதியான மணிப்பூர், வளமான மணிப்பூர் காண நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என மாநிலத்தின் அனைத்து சமூகங்களுக்கும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
கடந்த 2023 மே முதல் அக்டோபர் வரை 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 345 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகின.
இந்த ஆண்டு மே முதல் இதுவரை 112 துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கொள்ளையிடப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2,511 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,047 எப்.ஐ.ஆர்.கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
#WATCH | Imphal: Manipur CM N Biren Singh says "This entire year has been very unfortunate. I feel regret and I want to say sorry to the people of the state for what is happening till today, since last May 3. Many people lost their loved ones. Many people left their homes. I… pic.twitter.com/tvAxInKPdg
— ANI (@ANI) December 31, 2024
- கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
- அங்கு பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது.
மணிப்பூர்:
மணிப்பூரில் குக்கி, மைதேயி இன மக்களுக்கு இடையே கடந்தாண்டு முதல் மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பல மக்கள் குடும்பத்தையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
வன்முறையைக் கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவ நிறுவனங்களுடன், மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/27/7571578-mani2.webp)
இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலின் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
3 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/27/7571579-mani-1.webp)
இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. ஆனாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது. ஜனாதிபதி இந்த பிரச்சனையில் தலையிடவேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
- கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டனர்
- எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த வருடம் முதல் கலவரமான சூழல் நிலவுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக குக்கி- மெய்தேய் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
2023 மே மாதம் பெண் ஒருவர் வன்முறை கும்பலால் சாலையில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியானது நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
240க்கும் அதிகமான மக்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். 60,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து புலம்பெயர்ந்தனர். முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு ஆயுதங்கள் களவாடப்பட்டன. இடையில் கலவரம் ஓய்ந்திருந்த நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சமீபமாக மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்து.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/18/7258432-elonmuskmanipur6.webp)
பதுங்கியிருந்து தாக்கும் கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை திணறி வருகிறது.
இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சின்னம் உள்ளதாக எக்ஸ் தள பயனர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/18/7258406-elonmuskmanipur2.webp)
இதனைதொடர்ந்தகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
Acting on specific intelligence, troops of #IndianArmy and #AssamRifles formations under #SpearCorps carried out joint search operations in the hill and valley regions in the districts of Churachandpur, Chandel, Imphal East and Kagpokpi in #Manipur, in close coordination with… pic.twitter.com/kxy7ec5YAE
— SpearCorps.IndianArmy (@Spearcorps) December 16, 2024
இது பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் செயல்படாது என்று தெரிவித்து உள்ளார்.
செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு இதுபோன்ற நவீன சாதனங்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்து வருகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/12/18/7258553-elonmuskmanipur1.webp)
- மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
- வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஆண்டு மே மாதம் கலவரமாக வெடித்தது. அம்மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. சமீபத்தில் மீண்டும் கலவர சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கின் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் லுவாங்ஷாங்பாம் பகுதியில் முதல்-மந்திரி வீடு அருகே வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.
நேற்றிரவு ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்ட தாகவும், ஆனால் அது வெடிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
- பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.
மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்ற குரலை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மணிப்பூரின் வன்முறைக்கு முழு பொறுப்பேற்று பைரன் சிங் தலையாயினாலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
![மிசோரம் முதல்வர் லால்துஹோமா](https://media.maalaimalar.com/h-upload/2024/11/29/6660358-birensinghmnfnda1.webp)
மிசோரம் முதல்வர் லால்துஹோமா
இதற்கு மத்தியில் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று மிசோரமில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது. MNF பொதுச் செயலாளர் VL Krosehnehzova, மாநில அரசாங்கத்தின் தோல்வியால் தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் இதை கூறி சில மணிநேரங்களுக்குப் பிறகே MNF கட்சியை தேச விரோத கட்சியாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரின் உள் விவகாரங்களில் MNF தொடர்ந்து தலையிடுவதை ஏற்கமுடியாது.தேச விரோத மியான்மர் அகதிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் செய்வது மற்றும் மணிப்பூருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது MNF.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/29/6660359-birensinghmnfnda2.webp)
சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக அண்டை நாடான மியான்மர் அருகே இந்திய எல்லைகளை வேலி அமைக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் MNF தேச விரோதக் கட்சியாக அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்று மணிப்பூர் அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்டனர்
- அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மத்திய அரசு மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் உள்ளதாக தலைமை பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். மாநில தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்,
மணிப்பூரில் ஏற்கனவே உள்ள படைகளுடன் 10,800 வீரர்களைக் கொண்ட மேலும் 90 கம்பெனி மத்தியப் படைகள் சேர்க்கப்பட உள்ளது என்றும் அந்த வகையில் மணிப்பூரில் உள்ள கம்பெனி படைகளின் எண்ணிக்கை மொத்தம் 288 ஆக உயரும் என்று தெரிவித்தார்.
இந்த 90 படைகளில் ஏற்கனவே கணிசமாக பகுதியினர் இம்பால் வந்தடைந்துள்ளனர். மக்களின் உயிரையும் உடைமைகளைப் பாதுகாக்க, அதிக பதற்றம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட படைகளை அனுப்புகிறோம் என்று குல்தீப் சிங் கூறியுள்ளார். அனைத்து பகுதிகளையும் ஒரு சில நாளில் முற்றிலுமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), ராணுவம், அசாம் ரைபிள்ஸ், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் சஷாஸ்த்ரா சீமா பால் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/22/6448769-manipurriots10000troops1.webp)
நவம்பர் 7 அன்று ஜிரிபாமின் ஜைரான் கிராமத்தில் ஹ்மார் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை மெய்தேய் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக 20க்கும் மேற்பட்ட குக்கி போராளிகள் நவம்பர் 11 அன்று ஜிரிபாமின் போரோபெக்ராவைத் தாக்கினர்.
சிஆர்பிஎஃப் நடத்திய என்கவுன்டரில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீதி இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு தப்பினர். அதற்கு முன்னதாக அந்த கிராமத்தில் 2 மெய்தேய் முதியவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஒரு கைக்குழந்தை உட்பட ஆறு பிணைக் கைதிகளின் உடல்கள் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மக்கள் வீதியில் இறங்கி அரசியல்வாதிகள் வீட்டை சூறையாடுவது, முதல்வர் வீட்டை முற்றுகை இடுவது என கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை இட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 2023 முதல் மணிப்பூர் வன்முறையில் 258 பேர் இறந்துள்ளனர். போலீசிடம் இருந்து திருடப்பட்ட 3000 ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
- 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதை விமர்சித்தார்.
- இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/20/6382866-manipurpchidambarambirensingh2.webp)
இந்நிலையில் கடந்த வருடம் நாடு முழுவதும் மணிப்பூர் கலவரம் அதிர்வலையை ஏற்படுத்தியதை போல தற்போதைய மணிப்பூர் சூழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மணிப்பூர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தனது பதிவில், மணிப்பூர் சூழலுக்கு முதல்-மந்திரி பைரோன் சிங் திறமையின்மைதான் காரணம் என்றும் தற்போது 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதையும் விமர்சித்து இருந்தார்.
இதற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பைரோன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு ப.சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகளே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தார். அப்போது மணிப்பூரில் இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப.சிதம்பரம் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டவரான தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜோமி மறு ஒருங்கிணைப்பு ஆர்மி என்ற இயக்கத்தின் தலைவர் ஆவார்.
தற்போது மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்ட விரோதமாக மியான்மரில் இருந்து குடியேற்றங்கள் நடந்ததுதான். இதற்கு காரணமாக இருந்தது ப.சிதம்பரம்தான். அவர் தடை செய்யப்பட்ட அந்த இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று மணிப்பூர் முதல்வர் குற்றம்சாட்டினார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/20/6382865-manipurpchidambarambirensingh.webp)
இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியான ஒக்ராம் இபோபி சிங்கும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கார்கேவிடமும் புகார் கூறினார். இதையடுத்து கார்கேவும் தலையிட்டார். எனவே ப.சிதம்பரம் தனது பதிவை நீக்கினார்.
- இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது.
- இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்டு இருந்த பிராட்பேண்ட் இணைய சேவைகள் நிபந்தனையுடன் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சாமானிய மக்கள், சுகாதார வசதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிராட்பேண்ட் சேவைகள் மட்டும் வழங்கப்படும் நிலையில், மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. வன்முறை அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி ஏழு மாவட்டங்களில் இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது.
"இணையத் தடை காரணமாக முக்கிய அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு பிராட்பேண்ட் சேவைகளின் விஷயத்தில் இடைநீக்கத்தை நிபந்தனையுடன் நீக்கும் முடிவை எடுத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு சந்தாதாரர் அனுமதிக்கப்பட்ட இணைப்பைத் தவிர வேறு எந்த இணைப்பையும் ஏற்க மாட்டார், மேலும் வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட்கள் அனுமதிக்கப்படாது. மேலும் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.
- பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து திரண்டனர்.
இம்பால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் என்ற அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கு மணிப்பூரில் வாழும் பாரம்பரிய குகி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு இன மக்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. அன்று இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து குகி பழங்குடியின மக்கள் ஆத்திரம் அடைந்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/19/6347496-newproject23.webp)
ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தஇயலவில்லை. சமீபத்தில் 3 பெண்கள், 3 குழந்தைகளை கடத்தி சென்றனர். அவர்களை சுட்டுக்கொன்று உடல்களை வீசினார்கள்.
இதனால் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. நேற்று இரவும் கலவரம் நீடித்தது. இன்று காலை பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணிப்பூரில் அமைதி திரும்பாமல் பதட்டம் ஓயாத நிலை ஏற்பட்டுள்ளது.
குகி பழங்குடியின மக்கள் இன்று (செவ்வாய் கிழமை) சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். கடந்த 11-ந் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் பழங்குடியின மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/19/6347442-newproject20.webp)
அந்த உடல்களை தகனம் செய்ய அவர்கள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் நடத்துவதாக அறிவித்தனர். இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
அதை ஏற்று மணிப்பூரில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து திரண்ட னர். இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
தற்போது வரை அங்கு 218 சி.ஏ.பி.எப். பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் ஏ.டி.சிங் உள் ளிட்ட மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ள னர்.
இதையடுத்து, மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப் படுத்த மேலும் 50 படைப் பிரிவுகளைக் கொண்ட 5,000 துணை ராணுவப் படையினரை விரைவில் அனுப்ப உள்துறை அமைச்ச கம் முடிவெடுத்துள்ளது.
மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகம், பொருளா தாரம் மற்றும் புள் ளியியலுக்கான இயக்கு னரகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு, மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு நேற்று போராட்டத்தை தொடங்கியது.
குகி பழங்குடியினர் மீது ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி காலவரை யற்ற மறியல் போராட்டத்தையும் அந்தக் குழு மேற்கொண்டு வருகிறது. தலைநகர் இம்பால் முழு வதும் மைதேயி போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட பொருள்கள் சிதறிக் கிடக் கின்றன.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அசாம் ரைபிள்ஸ் படையினர் எல்லை பாதுகாப்புப் படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/19/6347443-newproject22.webp)
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு விஷ்ணுபூர், தெனபால், காக்சிங் ஆகிய 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு, காங்போக்பி மற்றும் சூர்சந்த்பூர் ஆகிய மாவட் டங்களில் இணைய மற்றும் கைபேசி சேவைகளுக்கு நாளை வரை மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது.
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து பிரேன் சிங் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.