search icon
என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை.
    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டம் 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

    ஜூலை 31-ந்தேதி முதல் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை மணிப்பூர் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 10 குகி-சோ (Kuki-Zo) எம்.எல்.ஏ.க்களை பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என மணிப்பூர் முதல்வர் பிரேண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

    இரண்டு மந்திரிகள் உள்பட 10 குகி எம்.எல்.ஏ.-க்கள் கடந்த இரண்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. மணிப்பூரில் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையில் நடைபெற்ற வன்முறை காரணமாக கலந்து கொள்ளவில்லை.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தொடர், கூட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் குகி-சோ எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் 5-வது கூட்டத்தொடர் பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

    நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்து, தற்போது நிலவும் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பேன். நேர்மறையான முடிவுகள் ஏற்படும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.

    ஜிரிபாம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீவைப்பு சம்பவம் குறித்து கூறுகையில் "நான் விசாரணை நடத்தினேன். இரண்டு சமூகத்தினரின் தலைவர்களுடன் பேசினேன். இரண்டு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை. குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது வன்முறையை நிலைநிறுத்த முயல்பவர்களின் வேலையாகத் தெரிகிறது" என்றார்.

    கடந்த புதன்கிழமை ஆளில்லா வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் வன்முறை வெடித்தபோது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் வீடு ஆளில்லாமல் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.
    • ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.

    தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

    ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.

    இதனையடுத்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் இந்தியாவின் பெருமைக்குரிய மாநிலமாகும். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க ஒவ்வொரு தேசபக்தரும் உதவ வேண்டும். பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அது மக்களுக்கு சற்று ஆறுதலை தரும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

    • நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.
    • எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தார். இதற்கிடையில், ஜூன் 6-ம் தேதி ஜிரிபாமில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த விவசாயி சோய்பம் சரத் சிங் என்பவர் கழுத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். அதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.


    இந்த நிலையில், அஸ்ஸாமில் பெய்து வரும் தொடர் கனமழையால், 28 மாவட்டங்களில் சுமார் 22.70 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், இன்று மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி, பயணத்தின் வழியில், அஸ்ஸாமில் உள்ள காச்சார் மாவட்டத்திற்கு சென்று ஃபுலெட்ரல் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர்களிடம் நிவாரணம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து மணிப்பூர் சென்றார்.


    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார் ராகுல் காந்தி. தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்றவர், எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார். ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.


    சந்திப்பை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்ற சூழல்.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து மணிப்பூர் சென்றார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இதில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற சூழல் நிலவுகிறது.

    வன்முறை காரணமாக பலர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை டெல்லியில் இருந்து வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் அசாம் மாநிலத்திற்கு சென்றார்.

     


    அசாம் மாநிலத்தின் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு தங்க வைக்கப்பட்டவர்கைளை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து மணிப்பூர் சென்றார்.

    மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்ட உயர்நிலை பள்ளிக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள முகாமில் தங்கியிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    வன்முறை காலக்கட்டத்தில் ஏற்கனவே இரண்டு முறை மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி தற்போது எதிர்க்கட்சி தலைவரான பிறகு முதல் முறையாக மணிப்பூர் சென்றுள்ளார். 

    • மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
    • மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.

    நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பேசும்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். "Save Manipur" எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    மாநில அரசு மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முற்றிலும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.

    வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மணிப்பூர் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இரண்டு தேசிய பேரிடர் குழுவின் இரண்டு அணிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர்.
    • தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள உயர் பாதுகாப்பு செயலக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் என் பிரேன் சிங்கின் அதிகாரபூர்வ பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு

    நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை போராடி அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளிவரவில்லை.

    தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அசாமின் எல்லையில் உள்ள மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில், பள்ளத்தாக்கு ஆதிக்கத்தில் உள்ள மெய்டேய் சமூகத்திற்கும், மலையில் ஆதிக்கம் செலுத்தும் ஹ்மர் பழங்குடியினருக்கும் இடையே புதிய வன்முறை வெடித்த ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.
    • வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.

    மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.46 கிமீ இடைவெளியில் உள்ள நோங்டாம் மற்றும் இத்தம் கிராமங்களை இணைக்கும் சாலையில் ஐஇடி வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ராணுவம், அந்த சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் குழு அந்த இடத்திற்கு வந்து IED குண்டுகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தது. இதனால் கிராமப் பகுதியில் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

     

    இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குக்கி- மெய்தேய் பழங்குடியினருக்கு இடையே மோதல்கள் வெடித்து ஒரு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

     

    இதனால் மணிபூர் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரங்களுக்கு அருகில், இரு சமூகங்களின் கிராமங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று ராணுவத்தினர் தேடி வருகின்றனர். 

    • பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
    • அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மணிப்பூரின் பல பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

    இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிப்பூர் மற்றும் தேரா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.

    இந்நிலையில், மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக 2024 மே 6 மற்றும் மே 7ம் தேதிகள் அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். தற்போதைய வானிலையால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்,"அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது," என்றார்.

    • 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் பதற வைக்கும் வீடியோ வெளியானது
    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

    கடந்தாண்டு மணிப்பூரில் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து மணிப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணையில், ஆறு நபர்கள் மற்றும் ஒரு சிறார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில்,

    "மணிப்பூரில் வன்முறையின் போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், வாகனத்தை எடுக்க சாவி இல்லை எனக் கூறியுள்ள போலீசார், கலவரக் கும்பலிடமே இருவரையும் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

    • மணிப்பூர் உள்பட 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து மறுதேர்தல்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர்.

    தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட வாக்குப்பதிவை மே 7-ம் தேதி நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதல் நடந்துள்ளது.
    • உயிரிழந்த இருவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி ஏராளமானோர் உயிரை பறித்தது.

    இன்னமும் அந்த கலவரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் விடுபடவில்லை. அடிக்கடி இரு இன மக்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.

    நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர். நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினார்கள்.

    இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது.

    இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் துணைநிலை ராணுவத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சர்கார், தலைமை போலீஸ்காரர் அருப்சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

    10-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    மேற்கு வங்காளம்:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி அசாம் 27.43%, பீகார் 21.68%, சத்தீஸ்கர் - 35.47%, ஜம்மு-காஷ்மீர் - 26.61%, கர்நாடகா - 22.34%, கேரளா - 25.61%, மத்தியபிரதேசம் - 28.51%, மகாராஷ்டிரா - 18.83%, மணிப்பூர் - 33.22%, ராஜஸ்தான் - 26.84%, திரிபுரா - 36.42%, உ.பி.யில் 24.31%, மேற்கு வங்காளம் - 31.25% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    ×