என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி ஆட்சி"

    • மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
    • மேலும் 6 மாதத்துக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    புதுடெல்லி:

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து, கடந்த வாரம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது.

    மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    • மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
    • மேலும் 6 மாதங்களுக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    புதுடெல்லி:

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    • பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
    • அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் பாராளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு, ஜனாதிபதி ஆட்சி பிப்ரவரி 13, 2026 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 வரை பதவிக்காலம் உள்ள மாநில சட்டமன்றம், அதுவரை செயல்படாமல் இருக்கும்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு வன்முறை சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

    • திட்டமிட்டு கலவரத்தை தூண்டியதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
    • இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.

    மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

    இதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக விமர்சித்தது. ஆனால் போராட்டத்தில் திட்டமிட்டு கலவரத்தை தூண்டியதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரும் வரை அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் முன் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர், இந்த மனுவை குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளித்த நீதிபதி கவாய், இதை அமல்படுத்துமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? தற்போதுள்ள நிலையில், ஏற்கனவே நிர்வாகத்தில் (நீதித்துறை) அத்துமீறுகிறது என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.சுப்ரீம் கோர்ட்டு சூப்பர் பாராளுமன்றம் போல் செயல்படுவதாக தன்கர் தெரிவித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.இந்த காருத்துகளின் பின்னணியில் நீதிபதி பி.ஆர்.கவாய் இவ்வாறு பேசியுள்ளார். பி.ஆர்.கவாய் வரும் மே 14 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019, அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.
    • சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டசபை தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019, அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

    தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த ஒமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விரைவில் புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்துசெய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

    • இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்
    • அவர்கள் [ஷிண்டே - பாட்னாவிஸ் - அஜித் பவார் தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர்

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 இல் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. ஆனாலும் அடுத்த முதல்வரை தேர்வு செய்து ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஷிண்டே விட்டுக்கொடுத்த நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்பு என்றும் நரேந்திர மோடி வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக கட்சித் தலைவர் சந்திரசேகர் பவான்குலே எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் முதல்வர் இப்பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே பொறுப்பளாராக நீடிக்கிறார்.

     

    இந்த நிலையில்தான் முடிவு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் வரை ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகிறது, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை... என்ன நடக்கிறது? டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர்   அறிவிக்கிறார். அவர் என்ன ஆளுநரா?... இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு முதல்வரைத் தீர்மானிக்க முடியாததும், அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்பதும் மகாராஷ்டிராவை அவமதிப்பு மட்டுமல்ல, அவர்களின் அன்பான தேர்தல் ஆணையம் வழங்கிய உதவியையும் கூட அவமதிக்கிறது [கிண்டலாக]. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும், சில சிறப்புக் கட்சிகளுக்கு விதிகள் பொருந்தாது.

    ஆட்சி அமைக்க உரிமை கோராமல், ஆளுநரிடம் எதையும் காட்டாமல், ஒருதலைப்பட்சமாக பதவிப் பிரமாண தேதியை அறிவிப்பது, அராஜகமாகும். இதற்கு மத்தியில் நமது காபந்து முதல்வர் [ஷிண்டே] ஒரு மினி விடுமுறையில் [சொந்த கிராமத்தில்] இருக்கிறார், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று தெரிகிறது. அவர்கள் [மகாயுதி தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர். இந்நேரம் இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • மணிப்பூர் முதல்வராக இருந்த பைரன் சிங் ராஜினாமா செய்த நிலையில், மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யவில்லை.
    • மணிப்பூர் முதல்வராக இருந்த பைரன் சிங் ராஜினாமா செய்த நிலையில், மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யவில்லை.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின.

    இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின. இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குகி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்தார்.

    பைரன் சிங்கிற்கு மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யாமல் இருந்தது. சட்டசபையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், புதிதான தேரதல் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

    "குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, சிபிஐ(எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்காக நிற்கும். மேலும் மாநிலத்தை உடைக்கும் எந்தவொரு முயற்சியும் அனுமதிக்கப்படாது" என மணிப்பூர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சாந்தா தெரிவித்துள்ளார்.

    ×