என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

    • மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
    • மேலும் 6 மாதங்களுக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    புதுடெல்லி:

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×