என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் ராவத்"

    • தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த அஜித் பவார் விமான விபத்தில் காலமானார்.
    • அவரது கட்சியை வழி நடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார் நேற்று முன்தினம் விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது மனைவி அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, பிளவுப்படுத்தி பின்னர் அதை தனதாக்கிக் கொண்டவர் அஜித் பவார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு சரத் பவார் கட்சியையும், தனது கட்சியையும் ஒன்றிணைக்க அஜித் பவார் முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்த அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவ சேனா (UBT) கட்சி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் தலைமைத்துவம் குறித்து பேசுவது மனிதாபிமானமற்ற செயல். இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்கள் மனிதாபிமானற்றவர்கள். அது எம்.எல்.ஏ.-வாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் சரி. அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தனது கணவரை இழந்துள்ளார். அவரது கண்கள் இன்னும் கலங்கி கொண்டிருக்கின்றன.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    சுனேத்ரா பாராமதி தொகுதியில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அஜித் பவார் பாராமதி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸில் பிக்னிக்கில் கலந்து கொள்கின்றனர்.
    • இந்தியக் கண்ணோட்டத்தில் டாவோஸ் மாநாடு அபத்தமானது- சஞ்சய் ராவத்.

    சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றுள்ளார். அவரது பயணத்தை சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்திருந்தார்.

    இதற்கு பட்நாவிஸ் மனைவி அம்ருதா பட்நாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்திருப்பதாவது:-

    சஞ்சய் ராவத்தின் மொழியை ஒருபோதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், பிக்னிக் செல்லும் ஒருவர், பத்திரிகையார்களை சந்திக்கமாட்டார். இந்தியா மற்றும் மகாராஷ்டிராவிற்கு முதலீட்டை கொண்டுவந்து, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்பதை மட்டுமே சொல்வேன்.

    அதனால் சஞ்சய் ராவத்தின் கருத்து மற்றும் இதுபோன்ற மற்றவர்களின் கருத்துகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இந்த மாநாட்டிற்கு செல்வது ஒவ்வொரு மாநில தலைவர்களின் பணி என நம்புகிறேன்.

    இவ்வாறு அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸில் பிக்னிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியக் கண்ணோட்டத்தில் டாவோஸ் மாநாடு அபத்தமானது என சஞ்சய் ராவத் விமர்சனம் செய்திருந்தார்.

    • பாஜக கூட்டணி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • உத்தவ் தாக்கரே கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆண்டிற்கு 74 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மும்பை மாநகராட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    227 கவுன்சிலர் வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சியில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா 29 இடங்களை பிடித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 114 தேவை. ஆனால் பாஜக கூட்டணி 118 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக மேயர் பதவியை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.

    அதேவேளையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (UBT) 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் எங்களுக்கு 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    தற்போது சிவ சேனா (UBT)- 65, மகாராஷ்டிலா நவநிர்மன் சேனா- 6, காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள்- 24, ஏஐஎம்ஐஎம்- 8, சமாஜ்வாடி-2, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்-3, சரத் பவார் கட்சி-1 என எங்களுக்கு 108 இடங்கள் உள்ளன. இலக்கு 114. எங்களுக்கு இன்னும் 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள். மும்பை அரசியலில் எதுவும் நடக்கலாம்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்?.
    • முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்

    மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில், மாநகராட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக மேயர் வேட்பாளரை ஆதரித்து பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின்போது, மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை எனக் கூறியதாக சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    அண்ணாமலை பாஜக-வின் நட்சத்திர பிரசார பேச்சாளர். இது பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? எனத் தெரிய வேண்டும். அவருக்கு எதிராக இங்கே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மகாராஷ்டிராவின் தலைநகர் பற்றி, அவர் எப்படி இதுபோன்று பேச முடியும்?. முதல்வர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது.

    முதல்வர் பட்நாவிஸ் இதில் தெளிவான நிலை எடுக்க வேண்டும். துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டேயின் சுயமரியாதை எங்கே. நீங்கள் எவ்வளவு கையாலாகாதவர்?.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, அந்தக் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம், அதனால் அவர் சரியாக என்ன சொல்ல வந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றார்.

    அண்ணாமலை பிரசாரத்தின்போது "மத்தியில் மோடி ஜி, மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் ஜி, மும்பை மாநகராட்சியில் பாஜக மேயர். ஏனென்றால்... மும்பை மகாராஷ்டிராவின் நகரம் இல்லை. அது சர்வதேச நகரம்" எனப் பேசியிருந்தார்.

    • பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
    • அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள், கலவரம், சஞ்சய் ராவத்

    அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேற்கோள் காட்டி, உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    செவ்வாயன்று, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த கலவரங்களின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் ராவத் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக டேக் செய்தார்.

    அந்த பதிவில், "இன்று நேபாளம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்," என்று எழுதியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   

    • இந்து மதம் மற்றும் தேசபக்தியை விட பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் நாட்டின் உணர்வுகளைப் புண்படுத்துகிறீர்கள்.
    • பாஜகவுக்கு இதற்குப் பின்னால் ஏதேனும் நிதி பலன்கள் உள்ளதா என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே துபாயில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் இரத்தம் இன்னும் வறண்டு போகவில்லை. அவர்களின் குடும்பங்களின் கண்ணீர் வறண்டு போகவில்லை.

    இதுபோன்ற சூழ்நிலைகளில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது மனிதாபிமானமற்ற செயல்.

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது நமது வீரர்களின் வீரத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், காஷ்மீருக்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஷியாம் பிரசாத் முகர்ஜி உட்பட ஒவ்வொரு தியாகியையும் அவமதிப்பதாகும்.

    இந்து மதம் மற்றும் தேசபக்தியை விட பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் நாட்டின் உணர்வுகளைப் புண்படுத்துகிறீர்கள். சிவசேனா உங்கள் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறது

    இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயவில்லை என்று நீங்கள் ஒரு காலத்தில் சொன்னீர்கள். இப்போது, இரத்தமும் கிரிக்கெட்டும் ஒன்றாகப் பாயுமா? பஹல்காம் தாக்குதலை நடத்தியது ஒரு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புதான்.

    அந்தத் தாக்குதல் 26 பெண்களின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டது. அந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நிலையை நீங்கள் கருத்தில் கொண்டீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், பாகிஸ்தானுடனான போட்டிகளுக்குப் பின்னால் மிகப்பெரிய பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் இருப்பதாகவும், அதில் பல பாஜக உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    அமித் ஷாவின் மகனான குஜராத்தைச் சேர்ந்த ஜெய் ஷா தற்போது கிரிக்கெட் விவகாரங்களை கவனித்து வருகிறார். எனவே பாஜகவுக்கு இதற்குப் பின்னால் ஏதேனும் பண பலன்கள் உள்ளதா என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

    • கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?.
    • ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

    ஆந்திர மாநில எம்.பி.க்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு சாதகமாக வாக்களிப்பார்களா? அல்லது என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குதான் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி. சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக் கூடும் என தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுவதாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான UPA வேட்பாளர் பிரதிபா பாட்டீலை 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரித்தது. ஏனென்றால், அவர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் என என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பயப்படுகிறது.

    கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான டூப்ளிக்கேட் சிவசேனா மூலம் கிராஸ் வோட்டிங் விழும். பேப்பரில் என்டிஏ கூட்டணி மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராகுல் காந்தி நாட்டிலும், பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் உருவாக்கிய சூழ்நிலை காரணமாக, கிராஸ் வோட்டிங் விழ வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
    • எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை

    ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய தன்கர் தற்போது எங்கிருக்கிறார்?; ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது?; மாநிலங்களவை எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை" என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

    • காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது.
    • ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க மோடி அரசு தயாராக இல்லை.

    இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் காட்டும் துணிச்சலை சிவசேனா உத்தவ் பிரிவுத் தலைவர் சஞ்சய் ராவத் பாராட்டினார்.

    சுயமரியாதை மற்றும் தைரியம் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் காட்டியுள்ளது என்றும், மத்திய அரசு ஈரானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

    அமெரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், "நெருக்கடியின் அனைத்து நேரங்களிலும் ஈரான் எப்போதும் இந்தியாவுடன் நின்றுள்ளது. காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது. ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் யாருக்கும் பணிந்து போகவில்லை" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க மோடி அரசு தயாராக இல்லாததற்கு காங்கிரஸ் நேற்று கடும் விமர்சனங்களை முன்வைத்தது.   

    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
    • அவர்கள் தனித்தனியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    புதுடெல்லி:

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர். அதன்பின், அவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமருக்கு நாங்கள் எழுதிய கடிதத்தில் 16 அரசியல் கட்சிகளின் கையொப்பங்கள் உள்ளன.

    இது ஒரு சாதாரண கடிதம் அல்ல. எதிர்க்கட்சி என்பது பொதுமக்களின் குரல்.

    நாட்டில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    ஜனாதிபதி டிரம்பின் ஆலோசனையின் பேரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தால், எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்த பிறகும் ஏன் ஒரு சிறப்பு அமர்வை நடத்த முடியாது?

    ஒரு சிறப்பு அமர்வுக்காக அதிபர் டிரம்பிடம் நாம் செல்ல வேண்டுமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    • பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
    • உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தோல்வியடைந்தது என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடந்தது? அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு. உள்துறை அமைச்சராக அவர் தோல்வியடைந்தவர். பிரதமர் மோடி அவரை ராஜினாமா செய்து பதவி விலகச் சொல்ல வேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூர் ஒரு தோல்வி. பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதைக் கோரினார்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.

    மேலும், உத்தவ் தாக்கரே காலில் விழாததால்தான் பாஜக சிவசேனாவைப் பிளவுபடுத்தியது என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

    ஜூன் 2022 இல், ஏக்நாத் ஷிண்டே உத்தவ் பிரிவுடன் முறித்துக் கொண்டு பாஜகவில் இணைந்து மஹாயுதி கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார்.

    மத்தியிலும், மூன்றரை ஆண்டுகாலம் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த பாஜக, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தங்கள் தோல்வியை மறைக்க எதற்கும் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் மீது பழி சுமத்துவதாக சஞ்சய் ராவத் விமர்சித்தார்.

    இந்த மாதம் 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.    

    • பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார்.
    • பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத். இவரின் நரகத்தில் சொர்க்கம் (Narkatla Swarg) என்ற புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிடுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியை கிண்டல் செய்யும் வகையில் சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவர்கள் {சிவசேனா (UBT)} பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், நரகத்தில் விழுந்து இன்று சொர்க்கத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

    பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். குஜராத் மற்றும் தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பணியை பாலாசாகேப் அங்கீகரித்தார்.

    தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, பாலாசாகேப்பின் கொள்கைகளைக் கைவிட்ட நபர்கள் (உத்தவ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல்), அவரது முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ({சிவசேனா (UBT)}) பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்." எனத் தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வரானார். பின்னர் சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கைப்பற்றினார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்கினார்.

    நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது.

    ×