என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vice President Election"

    • துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
    • வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிந்தது.

    புதுடெல்லி:

    நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்று சுதர்சன் ரெட்டியை சந்தித்தனர்.

    இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9-ந் தேதி புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 2 பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் இருவரும் மாநிலம் வாரியாக தனித்தனியாக சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அவ்வகையில் சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

    டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா, வழக்கறிஞர் வில்சன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று சுதர்சன் ரெட்டியை வரவேற்றனர்.

    அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

    இந்நிலையில், நட்சத்திர ஓட்டலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்று சுதர்சன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார்

    இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தந்த கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.

    • சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்.

    சென்னை:

    இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9-ந் தேதி புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 2 பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் இருவரும் மாநிலம் வாரியாக தனித்தனியாக சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

    சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி சமூக நீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பது நம் கடமை என கூறி இருந்தார்.

    இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கவும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் சுதர்சன் ரெட்டி முடிவு செய்து இருந்தார்.

    அதன்படி சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

    டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா, வழக்கறிஞர் வில்சன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று சுதர்சன் ரெட்டியை வரவேற்றனர்.

    அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார். இன்று மாலை 5 மணி அளவில் அக்கார்டு ஓட்டலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் செல்கிறார்கள். சுதர்சன் ரெட்டியை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்.

    இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தந்த கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.

    • நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர் சுதர்ஷன் ரெட்டி.
    • அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சலிசம் ஒழிக்கப்பட்டிருக்கும்.

    திருவனந்தபுரம்:

    உள்துறை மந்திரி அமித்ஷா கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

    இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை, துணை ஜனாதிபதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.

    சுதர்ஷன் ரெட்டி யார் தெரியுமா? அவர் நீதிபதியாக இருந்தபோது சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்க அமைக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர். அவர் மட்டும் அப்படியொரு தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால் 2020-ம் ஆண்டிலேயே நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப் பட்டிருக்கும்.

    அவற்றை ஆதரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற உயர்வான அமைப்பை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர்தான் சுதர்ஷன் ரெட்டி. அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரசுக்கு, இடதுசாரிகள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர் என்பதை கேரள மக்கள் போகப்போக தெரிந்து கொள்வர் என தெரிவித்தார்.

    மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என ஆயுதம் ஏந்திப் போராடிய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த சுதர்ஷன் ரெட்டி சல்வா ஜுடும் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவித்ததுடன், உடனடியாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    • கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?.
    • ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

    ஆந்திர மாநில எம்.பி.க்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு சாதகமாக வாக்களிப்பார்களா? அல்லது என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குதான் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி. சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக் கூடும் என தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுவதாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான UPA வேட்பாளர் பிரதிபா பாட்டீலை 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரித்தது. ஏனென்றால், அவர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் என என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பயப்படுகிறது.

    கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான டூப்ளிக்கேட் சிவசேனா மூலம் கிராஸ் வோட்டிங் விழும். பேப்பரில் என்டிஏ கூட்டணி மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராகுல் காந்தி நாட்டிலும், பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் உருவாக்கிய சூழ்நிலை காரணமாக, கிராஸ் வோட்டிங் விழ வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    காலியாக இருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது.

    இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய மந்திரிகள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் போட்டி இருக்காது என முதலில் கருதப்பட்டது.

    ஆனால் 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி, போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 'இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 2 பேருமே தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் தமிழ்நாடு வர உள்ளார்.

    அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.

    • இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமராவதி:

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் இவரை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகும்.

    இதேபோல், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கும் பொருந்தும். இது இந்தியா கூட்டணி சார்பாக பா.ஜ.க.வுக்கு விடுத்துள்ள சவாலாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்தியா கூட்டணி நிறுத்தியுள்ளது தொடர்பாக, சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் கூறுகையில், எங்களிடம் தெளிவின்மை இல்லை. அரவணைப்பு, மரியாதை மற்றும் உறுதி மட்டுமே. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என தெரிவித்தார்.

    • துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை.
    • புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    தமிழகத்தில் மொத்தம் 55 எம்.பி.க்கள் (மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் சேர்த்து) உள்ளன. இதில் பெரும்பாலமான எம்.பி.க்.கள் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். துணை ஜனாதிபதி தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவதாக அமையும்.

    இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரும் ஆன மு.க. ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
    • என்டிஏ கூட்டணி சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளரான நிறுத்தியுள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். என்.டி.ஏ. ஏற்கனவே சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி, ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளரான நிறுத்தியுள்ளது.

    இதனால் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து கமல்ஹாசன் எம்.பி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கமல்ஹாசன், "இந்தியா கூட்டணியில் தமிழர்களுக்கு மிக நெருக்கமான ஆளுமையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். எனவே, அவரது சொல்படியே செயல்படுவேன்" எனத் தெரிவித்தார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன், சமீபத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.
    • இந்தியா கூட்டணி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் புதிய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்களாக யார்-யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க. தலை வர்கள் கடந்த 6-ந்தேதி இது தொடர்பாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது துணை ஜனாதிபதியை தேர்வு செய்து அறிவிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கும் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்களும் டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள 12 கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து களம் இறங்க தீர்மானிக்கப்பட்டது.

    இதனால் இந்தியா கூட்டணி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர்களில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். எனவே நாளை மாலை துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு கள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    நாளை மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டாலும் பா.ஜ.க. வேட்பாளர் யார் என்பதை பிரதமர் மோடி எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 18 அல்லது 19-ந்தேதி அவர் வேட்பாளர் விவரத்தை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்படப் போவது யார் என்பதை பார்த்து விட்டு இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கலாம் என்று ராகுல் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

    இரு கூட்டணி தலைவர்களும் துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசியத்தை கடைபிடிப்பதால் வருகிற செவ்வாய், புதன்கிழமைகளில் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படக்கூடும். 21-ந்தேதி (வியாழக்கிழமை) துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இருக்குமா? இருக்காதா? என்பது உறுதியாகி விடும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி பாராளுமன்ற அலுவலகத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டு இருக்கும் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள். இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட அதிக எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

    எனவே பா.ஜ.க. அறிவிக்கும் வேட்பாளர் துணை ஜனாதிபதியாக எளிதில் தேர்வு செய்யப்படுவார். செப்டம்பர் 9-ந்தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

    • துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடக்கிறது.
    • இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ம் தேதி வெளியானது.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ம் தேதி வெளியானது.

    துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளும் கூட்டணிக்கான துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிகாரம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. பாராளுமன்ற வாரிய கூட்டம் நாளை மறுதினம் கூடுகிறது.

    • துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீர் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந்தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

    துணை ஜனாதிபதியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற ஜெகதீப் தன்கருக்கு அந்த பதவி காலம் 2027 ஆகஸ்டு 10-ந்தேதி வரை இருந்தது. ஆனால் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியாக நேரிட்டால் கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 68 (2)-ல் குறிப்பிட்டுள்ளது. இந்த விதியின்படி அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பிடித்துள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலை இறுதி செய்ததாக தேர்தல் ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. அதன்படி அன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆகஸ்டு 21-ந்தேதி கடைசி நாளாகும். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மனு செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும். 25-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து போட்டி இருக்கும்பட்சத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெறும். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும். சில மணி நேரத்துக்குள் முடிவு வெளியாகும். அன்றே அதாவது செப்டம்பர் 9-ந்தேதி நாட்டின் புதிய துணை ஜனாதிபதி யார்? என்பது தெரிந்து விடும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் துணை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் களம் இறக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துணை ஜனாதிபதி தேர்தல் 2025-க்கான இறுதி செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு வாக்காளர் பட்டியலை உறுப்பினர்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்பிரிவு 66(1)-ன் கீழ் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்று வாக்குமூலம் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும. அதன்படி வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தேர்வை வாக்காளர் குறிக்க வேண்டும்.

    விதிகளின்படி துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயதை பூர்த்தி செய்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது.

    அதன்படி தற்போது இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது. தற்போது இந்த உறுப்பினர்கள் அனை வரும் வாக்களிக்கும் நிலையில் துணை ஜனாதிபதியாக வெற்றி பெறும் வேட்பாளர் குறைந்தபட்சம் 391 வாக்குகளை பெற வேண்டும்.

    மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ), 542 உறுப்பினர்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினர்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்.டி.ஏ.வுக்கு கிடைத்தால் மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்ப டும் துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தாலும் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வரை அவர் அந்த பதவியில் தொடரவும் அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

    ×