என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்டிஏ"

    • கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர்.
    • தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    கரூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்களான ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட குழுவினர் இன்று மக்களைச் சந்தித்தனர்.

    அப்போது பா.ஜ.க. குழுவினரிடம் பெண்மணி ஒருவர் கூறுகையில், எதிர்ப்பக்கம் யாரோ சிலர் கைகளில் கத்தியால் கிழித்தனர். நான் இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.

    எனக்குத் தெரிந்த 4 பேர் கைகளில் கிழிபட்டு படுகாயம் அடைந்து ஜி.எச்.சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

    ஸ்கூல் பிள்ளைகளில் சிலருக்கு கை உடைந்துள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    எதிர்ப்பக்கத்தில் தான் மரத்தில் ஏறி இருந்தனர். அதிலிருந்து சிலர் கீழே விழுந்தனர். இந்தப் பக்க மரத்திலும் ஏறி இருந்தனர்.

    விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சிலர் ஏறி இருந்தனர் என தெரிவித்தார்.

    • கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?.
    • ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.

    துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

    ஆந்திர மாநில எம்.பி.க்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டிக்கு சாதகமாக வாக்களிப்பார்களா? அல்லது என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குதான் ஆதரவு எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி. சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக் கூடும் என தேசிய ஜனநாயக கூட்டணி பயப்படுவதாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான UPA வேட்பாளர் பிரதிபா பாட்டீலை 2007ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரித்தது. ஏனென்றால், அவர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கக்கூடும் என என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) பயப்படுகிறது.

    கிராஸ் வோட்டிங் விழும் என நீங்கள் (என்டிஏ) அஞ்சுகிறீர்களா?. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான டூப்ளிக்கேட் சிவசேனா மூலம் கிராஸ் வோட்டிங் விழும். பேப்பரில் என்டிஏ கூட்டணி மெஜாரிட்டியாக உள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா எம்.பி.க்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. ராகுல் காந்தி நாட்டிலும், பீகாரிலும் மற்றும் பல இடங்களிலும் உருவாக்கிய சூழ்நிலை காரணமாக, கிராஸ் வோட்டிங் விழ வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை.
    • அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு என்டிஏ-வை விட குறைவான எம்.பி.க்கள் மட்டுமே இருந்தபோதிலும், அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

    எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு செல்லும். அதன்மூலம் பலம் தெரியவரும். நாங்கள் எந்தவொரு ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்கவில்லை.

    என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் கவர்னரை சந்தித்தபோது கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இது தெளிவான உதாரணம். அத்தகைய வேட்பாளருக்கு ஆதரவை எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல. எனவே, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத எனது இயலாமையை நான் வெளிப்படுத்தினேன்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

    • மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.
    • மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்தியாவில் 18 ஆவது பாராளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து, சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் வருகிற 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மேலும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தலை நடத்தி முடித்த இந்தியாவுக்கும், தேர்தலில் வாக்களித்த 65 கோடி மக்களுக்கும் அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, இரு தலைவர்களும் அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் சர்வதேச கூட்டமைப்பு மூலம் சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்த இணைந்து பணியாற்றுவதாக வலியுறுத்தினர்.

    இதே போன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், "பாராளுமன்ற தேர்தல் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து தெரிவித்தார்."

    • பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த அரசு பணியாற்ற முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மந்திரி சபையில் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கியமான இலாகாக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிராஜ் பஸ்வான் கூறுகையில் "நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், அவரது தலைமைக்கும் எங்களுடைய ஆதரவை நாங்கள் தெரிவித்தோம். எந்தவொரு நிபந்தனையின்றி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டோம். எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இந்த வெற்றி பிரதமர் தலைமைக்கான வெற்றி.

    தேசிய ஜனநாயக கூட்டணியை அவருடன் இணைத்து கொண்டு சென்றதன் காரணமாக எங்கள் கூட்டணி இந்த வெற்றியை பெற்றுள்ளது" என்றார்.

    பீகார் மாநிலத்தில் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஜித்தன் ராம் மஞ்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
    • உ.பி. மற்றும் மகாராஷ்டிரவில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.

    ஏற்கனவே மந்திரிகளாக இருந்த எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

    உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிர மக்கள் பா.ஜ.க.வினருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அயோத்தியில் அவர்களால் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. அயோத்தி மக்களை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்? என்.டி.ஏ. கூட்டணியின் தற்போதைய விளக்கம் நாயுடு சார்ந்த கூட்டணி அல்லது நிதிஷ் சார்பு கூட்டணி என தெரிவித்தார்.

    • முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது.
    • நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய போகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக-வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் (16) வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது.

    அதேவேளையில் ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 12-ந்தேதி ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி ஓபிசி-க்களின் இடஒதுக்கீட்டை பறித்து அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் இருக்கும்வரை அதை நடக்க விடமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், விளிம்பு நிலையில் இருக்கம் மக்களின் தரநிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்துவோம் என சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாரா லோகேஷ் கூறியதாவது:-

    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    சிறுபான்மையினர் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய தனி வருமானம் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. ஒரு அரசாக என்னுடைய பொறுப்பு அவர்களை வறுமையில் இருந்து மீட்பதுதான். எனவே நான் எடுக்கும் எந்த முடிவுகளும் சமரச அரசியல் (வாக்கு வங்கிக்காக இடஒதுக்கீடு வழங்குவது) அல்ல, மாறாக அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே.

    நீங்கள் நம்முடைய நாட்டை வளர்ச்சி நாடாக்க விரும்பினால், யாரையும் பின்னாடி விடமுடியாது. அவர்களை ஒன்றிணைத்து, சிறந்த வாய்ப்பை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது, தெலுங்கு தேசம் கட்சியின் முத்திரையாக (Trade Mark) இருந்து வருகிறது.

    நாங்கள் ஒருபோதுமு சபாநாயகர் பதவி குறித்து பாஜகவிடம் பேசவில்லை. நாங்கள் மாநிலத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றுதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் மந்திரி பதவி கேட்கவில்லை. மாநிலத்தின் நலம்தான் எங்களுடைய நலம்.

    இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெற அவரது மகனான நாரா லோகேஷ் முக்கிய பங்காற்றினார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதுபோது, தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 4 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
    • பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும்.- காங்கிரஸ் தலைவர்.

    மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை பாராளுமன்றத்திற்கான அக்கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்தனர். ஆனால் உத்தர பிரதேசத்தில் இரண்டு எம்.பி.க்களை கொண்டு ராஷ்டிர லோக் தளம் கட்சி தலைவரும் ஜெயந்த் சவுத்ரி எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார். இவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் சவுத்ரியின் பேரன் ஆவார்.

    எம்.பி.க்களுடன் அமர வைத்து ஜெயந்த் சவுத்ரியை அவமதித்துள்ளது என பாஜக மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. அதேவேளையில் இது ஒரு பெரிய விசயம் அல்ல என ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய்

    இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில் "மேடையில் இடம் வழங்காதது மூலம் சிறந்த விவசாயிகளுக்கான சிறந்த தலைவரின் (சரண் சிங் சவுத்ரி) பேரனை இழிவுப்படுத்துவதாகும். விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் என அழைத்து அதே கட்சிதான் பாஜக.

    விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சமாஜ்வாதி கட்சியில் அவர் மிகப்பெரிய அவரில் மதிக்கப்பட்டார். அவருடைய சுய மரியாதைக்காகவும், விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம். அகிலேஷ் யாதவிடம் யாரெல்லாம் செல்கிறார்களோ, அவர்களை இரண்டு கைகளை விரித்து வரவேற்பார்" என்றார்.

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

    காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில் "பாஜக கூட்டணி கட்சி தலைவரை அவமதித்துள்ளது. பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும். அவர்களுடைய கட்சியில் இணையும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பெரிய மாலை போடுவார்கள். பின்னர் அவமதிப்பார்கள்" என்றார்.

    ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார்

    இதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி எப்போது எங்களுக்கு மரியாதை கொடுத்தது? ஒருவர் மேலே அமர்ந்தாலும் கீழே அமர்ந்தாலும் பெரிய விஷயம் இல்லை. பரந்த மனதுடன் அரசியல் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. எங்கள் கட்சி என்.டி.ஏ.-வின் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகும். தொடர்ந்து அதனுடன் இருக்கும்.

    இவ்வாறு அனில் குமார் தெரிவித்தார்.

    • இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.
    • அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்த முறை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை. மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர் இல்லாமல் இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது, நஜ்முல்லா ஹெப்துல்லா சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதே போன்று, 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற போது நக்விக்கும் சிறுபான்மையினர் நலத்துறையே ஒதுக்கப்பட்டது.

    18 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த இஸ்லாமிய வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாததே அமைச்சரவையில் இஸ்லாமியர் இடம்பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது. கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 24 இஸ்லாமிய எம்.பி.க்களில் 21 பேர் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதர மூவர் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஓவைசி, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களான அப்துல் ரஷீத் ஷேக் மற்றும் முகமது ஹனீஃபா ஆவர். 

    • மைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர்.
    • பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

    இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வின்போது வினாத்தாள் லீக்கானதாக குற்றச்சாட்டு.
    • தேர்வு முடிவில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை எழுப்பியது.

    எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின்போது பேப்பர் லீக்கானதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரிசல்ட் வெளியானபோது 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்ணும், 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.

    இதனால் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தேசிய தேர்வு முகமை முறைகேடு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தது. மத்திய அரசும் பேப்பர் லீக்கானதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றது.

    என்றபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தில் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பான பொதுநல வழக்கு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 8-ந்தேதி நீதிமன்றம் நடைமுறைகள் தொடங்க இருக்கிறது.

    மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் நேற்று, உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார்.
    • இந்தியா கூட்டணி கே. சுரேஷை நிறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. 230-க்கும் அதிகமான இடங்களை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி பெற்றுள்ளதால் எந்த விவகாரத்தையும் ஒருமனதாக தேர்வு செய்ய ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது.

    நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. சபாநாயகர் பதவிக்கு என்டிஏ கூடட்ணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கொடுக்க இந்தியா கூட்டணியிடம் என்டிஏ கேட்டுக்கொண்டது. ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால் துணை சபாநாயகர் பதவி வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால் பாஜக துணை சபாநாயகர் பதவியை கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்வேட்பாளாராக கே. சுரேஷ் என்பவரை நிறுத்தியுள்ளது.

    இதனால் தேர்தல் நடைபெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணை சபாநாயகர் பதவி தர தயராக இருந்தால், நாங்கள் என்டிஏ வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். இரு அவைகளும சமூகமாக நடைபெற பிரதமர் மோடி நேற்று ஒருமித்த கருத்து குறித்து பேசினார்.

    அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யும் சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அவர்களும் எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

    சபாநாயகர் அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை 10 ஆண்டுகளுக்கு என்டிஏ-வுக்கு வழங்கினோம். நேற்று ராஜ்நாத் சிங் மல்லிகார்ஜூனாவிடம் பேசினார். அப்போது கார்கே, உங்களுடைய வேட்பாளரை ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் துணை சபாநாயகர் பதவியை விரும்புகிறோம் என்றார். அப்போது ராஜ்நாத் சிங், மோடியிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.

    இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    ×