என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவேந்திர பட்நாவிஸ்"

    • ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
    • அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்.

    பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தி, தொடர் பொய்யர் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் தாக்கியுள்ளார்.

    இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-

    ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.

    மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே.

    இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்தார்.

    • என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை.
    • அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    துணை ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு என்டிஏ-வை விட குறைவான எம்.பி.க்கள் மட்டுமே இருந்தபோதிலும், அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

    எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு செல்லும். அதன்மூலம் பலம் தெரியவரும். நாங்கள் எந்தவொரு ஆச்சர்யத்தையும் எதிர்பார்க்கவில்லை.

    என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் கவர்னரை சந்தித்தபோது கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இது தெளிவான உதாரணம். அத்தகைய வேட்பாளருக்கு ஆதரவை எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல. எனவே, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத எனது இயலாமையை நான் வெளிப்படுத்தினேன்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

    • சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும்.
    • குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும்.

    இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும், பணப் பலன்கள் இருந்தால் அவை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பட்டியல் சாதி இடஒதுக்கீடு இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2024 தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

    மேலும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டுவரப்படும் என்றும் பட்னாவிஸ் கூறினார். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

    • உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பைப் பற்றி சிந்திக்கலாம்
    • மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை "பாஜக பாதுகாப்பு மசோதா" என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் (மகா விகாஸ் அகாடி) உள்ள சிவசேனா பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை ஆளும் பாஜக (மகாயுதி) கூட்டணியில் இணையுமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அழைப்பு விடுத்துள்ளார்.

    நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய பட்னாவிஸ், 2029 வரை தங்கள் அரசு எதிர்க்கட்சியாக மாறும் வாய்ப்பே இல்லை என்றும் உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பைப் பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறினார்.

    முன்னதாக, மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை "பாஜக பாதுகாப்பு மசோதா" என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.

    இந்த மசோதா சாதாரண குடிமக்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசுக்கு உரிமை வழங்கும் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    முன்னதாக தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகம் செய்தது.

    இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் போராட்டம் நடத்தினர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உத்தரவை பட்நாவிஸ் அரசு திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அணை கட்ட பரிந்துரை.
    • அணை கட்டுவதற்காக 4 லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மும்பைக்கு குடிநீர் வழங்கும் வகையில் கார்காய் அணை கடட பரிந்துரை வழங்கப்பட்டு்ளது. இதற்கான லட்சணக்கான மரங்கள் வெட்ட பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக பாலைவனமாக்க விரும்புகிறது என அதித்யா தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    இந்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை இதற்கு முன்பாக ஒருபோதும் பார்த்ததில்லை. மாநிலம் முழுவரும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது.

    மாமநில வனவிலங்கு வாரியம் லட்சகணக்கான மரங்களை வெட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தானே மற்றும ்பல்கார் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டள்ளது. மும்பைக்கு குடிநீ்ர் வழங்க கார்காய் அணை கட்டுவதற்கான இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மகாராஷ்டிராவை பாலைவனமாக்க விரும்புகிறது.

    தேவைப்பட்டால் சிவசேனா (UBT) மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர், ஜனாதிபதியை இந்த திட்டத்திற்கு எதிராக அணுகும்.

    இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

    மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் (2019 முதல் 2022 வரை) இருக்கும்போது கர்காய் அணை திட்டத்தை கைவிட்டது.

    • இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
    • மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.

    இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.

    பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.

    தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
    • ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.

    இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.

    • அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது.
    • சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.

    கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார்.

    சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.

    இந்த 93 ஆண்டு பழமையான கேம்லின் நிறுவனம் 1946ல் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு, 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.

    ஸ்டேஷனரி தயாரிப்பில் கேம்லின் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.

    • மகாயுதி- மகா விகாஸ் அகாடி இடையே கடும் போட்டி.
    • மகாயுதியில் பா.ஜ.க., சிவசேனா, என்.சி.பி. கட்சிகள் உள்ளன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் கட்சி.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மகாயுதி, மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் அதிருப்தி தலைவர்கள் எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க இரு கூட்டணி தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அதன்பின் நவம்பர் முதல் வார இறுதியில் இருந்து கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய உத்தரவாத கார்டு (guarantee card) ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கான உத்தரவாத கார்டையும் ரிலீஸ் செய்வார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ், ராகுல் காந்தியின் உத்தரவாத கார்டு இங்கு செல்லுபடியாகாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-

    ராகுல் காந்தியின் உத்தரவாத கார்டு ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், சத்தீஸ்கரில் வெற்றி பெறவும் உதவவில்லை. தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உத்தரவாத கார்டு ஏன் அமல்படுத்தப்படவில்லை என்பதை ராகுல் காந்தி தெளிவுப்படுத்த வேண்டும். அவருடைய உத்தரவாத கார்டு இங்கேயும் தோல்வியடையும்.

    ஏராளமான அதிருப்தி கட்சி தலைவர்கள் எதிர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாங்கள் ஒன்றாக அமர்ந்து அந்த பிரச்சனைகளை பேசி சமூகமாக முடித்துள்ளோம். நவம்பர் 4-ந்தேதி அதிப்தி தலைவர்கள் வேட்புமனுவை திரும்பப் பெறுவதை நீங்கள் பார்க்கலாம்.

    நவம்பர் 5-ந்தேதியில் இருந்து முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வோம்" என்றார்.

    • சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
    • அதிக இடங்களை பிடித்ததால் முதல்வர் பதவியை பெற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் பிடிவாதம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.

    தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

    இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

    5-ந்தேதி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் பதவி ஏற்க இருக்கிறார்கள். தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    • மந்திரி சபையில் 43 பேர் இடம் பெற வாய்ப்பு.
    • பா.ஜ.க. 22 மந்திரிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி கூட்டணிகளான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.-வை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளனர்.

    பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இலாகாக்களும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

    முதல்வரான பட்நாவிஸிடம் நிதியமைச்சர் இலாகா இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிதி இலாகாவை குறிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சி.-யுமான மிட்கரி "அஜித் பவாருக்கு மட்டுமே நிதித்துறையை கையாளும் திறன் உள்ளது. 10 முறை பட்ஜெட் தாக்குதல் செய்துள்ள அவருக்கு, நிதியை ஒவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது தெரியும்.

    அஜித் பவாரை நிதியமைச்சராக ஆக்கவில்லை என்றால், இந்த அரசுக்கு (மகாயுதி) பயனுள்ளதாக இருக்காது" என்றார்.

    14-ந்தேதி (நாளைமறுநாள்) கேபினட் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக முதல்வருடன் சேர்த்து 43 மந்திரிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும், பா.ஜ.க. 21 முதல் 22 இடங்களை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம்.
    • நான் மதியம் முதல் இரவு வரை பணியாற்றுவேன்.

    மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பதில் அளித்தார்.

    அப்போது பட்நாவிஸ் கூறியதாவது:-

    நீங்கள் (அஜித் பவார்) நிரந்தர துணை முதல்வர் என அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், ஒருநாள் நீங்கள் முதல்வராவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.

    மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம். அஜித் பவார் காலையிலேயே எழுந்துவிடுவார். அப்போதில் இருந்து மதியம் வரை பணியாற்றுவார். நான் மதியம் முதல் இரவு வரை பணியாற்றுவேன். அதன்பின் யார் பணியாற்றுவார் என்பது உங்களுக்கு தெரியும். ஏக்நாத் ஷிண்டே நள்ளிரவு தாண்டியம் பணியாற்றுவார்" என்றார்.

    அஜித் பவார் ஆறு முறை மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×