என் மலர்
இந்தியா

ராகுல் காந்தி தொடர் பொய்யர்: மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் தாக்கு..!
- ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
- அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்.
பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தி, தொடர் பொய்யர் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-
ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.
மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே.
இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்தார்.
Next Story






