என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
    • தங்கள் ஊடக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே இப்படி செய்கின்றனர் என தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் பா.ஜ.க. எம்.பி. ஜகதம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து விளம்பரம் பெற விரும்புகிறார். இந்த ஊடக உத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகளின் முயற்சி ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்களும், தங்கள் ஊடக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று பிறந்தநாளும் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். 

    • தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார்.
    • தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருக்கிறது.

    இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குவதுடன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார்.

    இந்தநிலையில், கிரிஷ் சோடங்கர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மீண்டும். "ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம்." என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், தங்களுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்துள்ளோம். 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம்.

    எங்கள் பலத்தை த.வெ.க.வினர் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு திறந்த வெளியில் அழைப்பு விடுத்துள்ளனர் என்றெல்லாம் தெரிவித்து உள்ளார்.

    எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதாவது ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கிரிஷ் சோடங்கர் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    எனினும் கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதிச் செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற மார்ச் 5-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட் டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.

    • கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார்.
    • அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார்.

    இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தியாகச் செம்மல் தோழர் நல்லக்கண்ணு, வயதுமுதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தநிலையில் இன்று காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் இரங்கல்களை பதிவுசெய்து வருகின்றனர்.

    கட்சியின் தலைமை அலுவகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லக்கண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி,

    "அடிதட்டு மக்கள், தொண்டர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல்கொடுத்த அவருடைய முயற்சிகளுக்காக எப்போதும் நல்லகண்ணு அவர்கள் நினைவு கூரப்படுவார். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர். அதேபோல், அவரது எளிமை மிகவும் குறிப்பிடத்தக்கது. எனது ஆறுதல்கள் எப்போதும் அவரது குடும்பத்தினருடனும், தொண்டர்களுடனும் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ராகுல் காந்தி, 

    "தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த வாழ்க்கை ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கானது. 

    கிட்டத்தட்ட ஒன்பது தசாப்தங்களாக (90 ஆண்டுகள்), அவர் நீதி மற்றும் கண்ணியத்திற்காக உறுதியுடன் நின்றார். அவருடைய குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் மற்றும் எண்ணற்ற தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 


    • இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
    • அந்த ரகசிய ஒப்பந்தமே நாட்டிற்குப் பெரிய அவமானம்.

    டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை ஏஐ தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உலக தொழில்நுட்ப மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 20 ஆம் தேதியன்று காங்கிரஸ் இளைஞரணியினர் நுழைந்து தங்கள் மேலாடையை கழற்றி, இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அங்கிருந்து வெளியேயற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் இன்று கைது செய்யப்பட்டார். 

    நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்வொன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்த சம்பவம் காங்கிரசின் தரம் தாழ்ந்த அரசியல் என்றும், அவர்களின் நிர்வாணம் ஏற்கனவே மக்களுக்கு தெரியும் என்பதால் அதை அவர்கள் காட்ட தேவையில்லை என்றும் விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் நிர்வாண அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நரேந்திர மோடி அவர்களே, அஹிம்சை வழியிலான அமைதிப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை. எங்கள் தொண்டர்கள் சட்டையைக் கழற்றிப் போராடுவது வெட்கக்கேடு என நீங்கள் கூறுகிறீர்கள்.

    ஆனால், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் நண்பரின் பெயர் மற்றும் உங்கள் மத்திய அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருப்பதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியுமா?.

    அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் நீங்கள் நாட்டை விற்றுவிட்டீர்கள். அந்த ரகசிய ஒப்பந்தமே நாட்டிற்குப் பெரிய அவமானம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், ஜனநாயகத்தில் போராடும் உரிமையை அவமதிக்க வேண்டாம், காந்தி மற்றும் பகத் சிங் காட்டிய போராட்ட வழியையே தொண்டர்கள் பின்பற்றுவதாகவும், இதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு துன்புறுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

    சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி செல்வந்தர்களுக்கு போகப்பொருளாக்கும் உலகளாவிய பாலியல் நெட்வொர்க்கை நடத்தி வந்த மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சேமித்து வைத்திருந்த ஆவணங்களின் ஒரு பகுதி அண்மையில் வெளியாகி இருந்தன.

    இதில் பிரதமர் மோடி 2017 இல் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டபோது அமெரிக்க அதிபருக்கு தேவையானதை செய்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதேபோல மத்திய அமைச்சர் ஹர்திக் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோர் எப்ஸ்டீன் உடன் நடத்திய உரையாடல்களும் வெளியான கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.

    தான் எப்ஸ்டீனை அரசுப் பிரதிநிதிகளுடன் பணி நிமித்தமாக 3-4 முறை மட்டுமே சந்தித்தாக ஹர்திக் சிங் புரி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 

    • பஜ்ரங் தள் கும்பல் முதியவரை மிரட்டியுள்ளது.
    • அதற்கு அவர், " என் பெயர் முகமது தீபக்" என்று பதிலளித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரைச் சேர்ந்த தீபக் குமார், அங்கு உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மதவெறுப்புக்கு எதிராக அவர் காட்டிய துணிச்சலைப் பாராட்டும் விதமாக மக்களவை எதிர்கட்சித் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்துள்ளார்.

    கடந்த ஜனவரி 26, கோட்வாரில் 70 வயது இஸ்லாமிய முதியவர் ஒருவரின் கடைக்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், கடையின் பெயரில் உள்ள 'பாபா' என்ற பெயரை நீக்கச் சொல்லி அவரை மிரட்டியுள்ளனர்.

    அந்த முதியவர் ஏற்கனவே பார்கின்சன் என்னும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

    இந்துத்துவா கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்த அவருக்கு ஆதரவாக தீபக் குமார் அந்த கும்பலை எதிர்த்து பேசியுள்ளார்.

    வாக்குவாதத்தில் போது அந்த கும்பல் அவரின் பெயர் என்ன என்று கேட்கே, அதற்கு அவர், " என் பெயர் முகமது தீபக்" என்று பதிலளித்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, வெறுப்பு அரசியலை தனியாளாக எதிர்த்து நின்ற தீபக் குமாரின் துணிச்சல் மற்றும் நல்லுள்ளத்தை பல தரப்பில் இருந்தும் அனைவரும் பாராட்டினர்.

    இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முகமது தீபக் (எ) தீபக் குமாரை சந்தித்த புகைப்படத்தை காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


    அந்த பதிவில், "தீபக் குமார் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் தைரியத்திற்கு ஒரு சிறந்த உதாரணம். அநீதி மற்றும் வெறுப்புக்கு எதிராக நிற்க நாட்டின் இளைஞர்களுக்கு அவர் ஒரு உந்துசக்தியாக விளங்குகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. 

    • இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் நாளை ராகுல் காந்தி, கார்கே விவசாயிகளுடன் உரையாட இருக்கிறார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கிஷான் மகா சவுபால் என்ற மிகப்பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த விழாவில் இந்தியா- பாகிஸ்தான் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துக்கூற இருக்கிறார்கள். மேலும், விவசாயிகளுடன் குறைகளை கேட்டு அறிந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி ஜவஹார் சவுக் என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜித்து பத்வாரி கூறுயைில் "இந்திய விவசாயிகளின் கழுத்தில் வாளை வைத்துக் கொண்டு அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார்" என்றார்.

    மேலும், இந்த விழாவில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் செல்வாக்கை இழப்பார்.
    • 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார்.

    தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது

    இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்க்கும்போது, பல கூட்டத்தை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் 39 ஆண்டு காலத்தில் நான் இதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்தில்லை.

    அவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு, வளர்ச்சி தமிழகத்தில் புதிய அத்தியாயம் படைக்கும்.

    அவர் 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார். தி.மு.க. திகைத்து நிற்கிறது.

    சட்டம்-ஒழுங்கு கெட்டு தமிழகம் சாம்பல் மேடாக மாறி உள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் எதிர்கட்சிகள் இழந்துள்ளன. இதனை எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.

    ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை இழப்பார் என நினைக்கிறேன். வைகோ தி.மு.க.வுடன் இணைந்துள்ளார்.

    தி.மு.க.வுடன் உள்ளோம், இனியும் இருப்போம் என காங்கிரஸ் கூறவில்லை.

    மார்ச் 9-ந்தேதி தி.மு.க ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது. அன்று எங்கள் பொலிடிகல் பாம் வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் தி.மு.க.வுக்கு மாரடைப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
    • மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

    மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

    மகாராஷ்டிராவின் பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் தொடர்ந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்க உத்தரவாத கடிதம் கொடுத்திருந்தார்.

    அவர் காலமான நிலையில், வேறு ஒருவர் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை காரணமாக, ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் நீதிமன்றத்தில் இன்று உத்தரவாத கடிதத்தை அளித்தார். நீதிமன்றம் அதை ஏற்று ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

    முன்னதாக இந்த விஷயத்தில் உண்மையை முன்வைப்பதாவும், மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, ஒரு கொலை குற்றவாளி பாஜக தலைவராக உள்ளார் என அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேற்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • டிரம்புக்கு வரி விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
    • டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனவும் நீதிமன்றம் விமர்சனம்.

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் சரணடைவார்" என்றார்.

    முன்னதாக காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2010இல் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார்.
    • அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

    2018 இல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பெங்களூரு தேர்தல் பிரசாரத்தில் அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

    ஒரு கொலை வழக்கு குற்றவாளி பாஜக தேசிய தலைவராக இருப்பதாக ராகுல் காந்தி சாடியிருந்தார்.

    இந்த கருத்துக்களுக்காக ராகுல் மீது உ.பி.யின் சூல்தான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கில் இன்று நேரில் ஆஜரான ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். ராகுல் தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 அன்று நடைபெறும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னதாக கடந்த ஜூலை 2024 இல் இந்த வழக்கில் ராகுல் காந்தி தனது முதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் நேரில் பதிவு செய்திருந்தார். வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கடந்த டிசம்பரில் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தபோது ராகுல் ஆஜராக தவறிய நிலையில் ஜனவரியில் மீண்டும் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட்டின் படி தற்போது ஆஜராகி உள்ளார்.

    2010 இல் சோரபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி
    • மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?

    ராகுல் காந்தி மற்றும் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை வீடு புகுந்து சுட்டுக் கொல்வேன் என்று வீடியோ வெளியிட்டு மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கர்ணி சேனா என்ற வலதுசாரி அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ் சிங் என்ற அந்த நபர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    வீடியோவில் பேசிய ராஜ் சிங், " மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவதூறாகப் பேசியதால் காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேர் மீதும் அவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய ராகுல் காந்தி மீதும் பாஜக மற்றும் கர்ணி சேனா தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தால், உங்கள் வீட்டிற்குள் புகுந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருந்தார்.

    இந்த மிரட்டலைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "பாஜக-ஆர்.எஸ்.எஸ் வலையமைப்பு என்பது ஒரு 'கோட்சே தொழிற்சாலை'. ராகுல் காந்திக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல் ஒரு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     மற்றொரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.

    இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா?

    ஒரு குண்டர் பகிரங்கமாகத் துப்பாக்கியால் சுடுவேன் என்று மிரட்டியும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    ×