என் மலர்
நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"
- ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது
- பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. பல தொகுதிகளில் பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன.
இந்நிலையில் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிக்கு ராகுல் காந்தியை வாழ்த்தியுள்ளார் கேடி ராமா ராவ்.
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த கேடி ராமா ராவ் கூறுகையில், ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்.
பிரதமர் மற்றும் பாஜக கையில் உள்ள ராகுல் இப்போது செய்துகொண்டிருப்பதை தொடர்ந்து செய்து வருவது கே.சி.ஆர். கெஜ்ரிவால், மம்தா, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் போன்ற வலுவான மாநில தலைவர்களை பலவீனப்படுத்துகிறது.
டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் இப்போதாவது காங்கிரஸ், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும், நாட்டிற்கு, குறிப்பாக பாஜகவைத் தடுத்து நிறுத்தும் வலுவான மாநில சக்திகளுக்கு ஏற்படுத்திய சேதத்தையும் உணர்ந்துள்ளது என்று கூறினார்.
மேலும் "பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், இந்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களையும் தன்வசப்படுத்துகிறது. இதனால் நாங்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளார் என பா.ஜ.க. விமர்சனம் செய்தது.
இதற்கிடையே, ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்ட கலெக்டரிடம் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ராகுல் காந்தி தேச விரோத கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. அவர்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக ஜர்சுகுடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கவுகாத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
- டெல்லி மக்களின் உரிமை, மாசு, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.
டெல்லி மாநில தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் டக்அவுட் ஆகியுள்ளது.
ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி.
டெல்லியின் வளர்ச்சி, டெல்லி மக்களின் உரிமை, மாசு, விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
காங்கிரஸ் கட்சி, "டெல்லி மாநில தேர்தல் முடிவு மோடியின் கொள்கைகளை நிரூபித்ததற்கான முடிவு அல்ல. கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி மீதான வாக்கெடுப்பு.
2015 மற்றும் 2020 தேர்தலில் பிரதமர் மோடியின் புகழ் உச்சியில் இருந்தபோது கெஜ்ரிவால் தீர்க்கமான வெற்றியை பெற்றார். இதனால், பிரதமர் கொள்கைளை நிரூபிப்பதைவிட, அரவிந்த் கெஜ்ரிவாலின் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் சாதனை பற்றிய மிகைப்படுத்துதல் அரசியலை நிராகரிப்பதற்கான வாக்கெடுப்பு" எனத் தெரிவித்துள்ளது.
- 2019 மாநில தேர்தல்- 2024 மக்களவை தேர்தல் இடையிலான 5 வருடத்தில் 32 லட்சம் வாக்காளர்கள்தான் சேர்ப்பு.
- ஆனால் மக்களவை- சட்டமன்ற தேர்தலுக்கு இடையிலான காலக்கட்டத்தில் 39 வாக்காளர்கள் சேர்ப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வருடம் இறுதியில் நடைபெற்ற மாநில தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூட்டணி படுதோல்வியை அடைந்தது.
மாநில தேர்தலுடன் ஒரு எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எம்.பி. தொகுதியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஆனால் அதில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ. (6) இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது. இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. அத்துடன், பாராளுமன்ற தேர்தலுக்கும், மராட்டிய மாநில தேர்தலுக்கும் இடைபட்ட 5 மாதத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் இன்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருடன் ராகுல் காந்தி இன்று பத்திரிகையாளரக்ளை சந்தித்தார்.
அப்போது ராகுல் காந்தி 2019 மகாராஷ்டிரா மாநில தேர்தல்- 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றிற்கு இடையிலான ஐந்தாண்டு காலத்தில் 32 லட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், மக்களவை தேர்தல் 2024- மகாராஷ்டிரா மாநில தேர்தல் 2024 ஆகியவற்றிற்கு இடையிலான 5 மாதகால இடைவெளிக்குள் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 39 லட்சம் வாக்காளர்கள் யார்? என்பதுதான் கேள்வி.
இந்த 39 லட்சம் வாக்காளர்கள் என்பது ஏறத்தாழ இமாச்சல பிரதேச மக்கள் தொகையாகும். 2-வது கேள்வி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால், அதைவிட 9.7 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்த வாக்காளர்களை விட, அதிகமான வாக்காளர்கள் இருப்பது ஏன்?.
இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2024 பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.
ஆனால் சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் வெறும் 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
- காங்கிரஸ் தலைவர்களுக்கு தேச வரலாறு, மொழிகள் பற்றி எதுவும் தெரியாது.
யுஜிசி வரைவு விதிகள் தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இன்றை ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது கல்விமுறை மேம்பாட்டுக்கான முயற்சியை ராகுல் காந்தி உள்ளிட்டோர் அரசியல் காரணத்துக்காக எதிர்க்கின்றனர் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
யுஜிசி விவகாரம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
யுஜிசி என்பது தன்னாட்சி அமைப்பு. சுதந்திரத்திற்கு முன்பிலிருந்தே பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்களே இருந்து வந்துள்ளனர் என பல முஐற கூறியிருக்கிறேன்.
எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
ராகுல் காந்தி ஒருபோதும் இந்தியாவை புரிந்து கொண்டதில்லை.
காங்கிரஸ் தலைவர்களுக்கு தேச வரலாறு, மொழிகள் பற்றி எதுவும் தெரியாது.
நாட்டின் அனைத்து மொழிகளும் இந்தியாவின் தேசிய மொழிகள் என பிரதமர் பலமுறை கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல மொழிகள் ஒன்றிணைந்தது தான் இந்தியா எனும் தேசம்.
- யுஜிசி மூலமாக மாநிலங்களின் உரிமையை பறிக்க முயற்சி.
புதுடெல்லி:
புதிய யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
மாநிலங்கள் இணைந்தது தான் இந்தியா என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மாநிலங்களின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும். பல மொழிகள் ஒன்றிணைந்தது தான் இந்தியா எனும் தேசம்.
யுஜிசி மூலமாக மாநிலங்களின் உரிமையை பறிக்க முயற்சி. கல்வியை ஆர்எஸ்எஸ் மயமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.
இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அரசியலமைப்பை தகர்க்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமது மாநிலங்களைத் தகர்க முடியாது.
அவர்கள் நமது கலாச்சாரங்கள், நமது மரபுகள் மற்றும் நமது வரலாறுகளைத் தாக்க முடியாது என்றார்.
#WATCH | Delhi | While addressing the protest by the DMK students wing against the University Grants Commission (UGC) draft rules, Lok Sabha LoP & Congress MP Rahul Gandhi says, "I have been saying now for some time that the aim of the RSS is the eradication of all other… pic.twitter.com/BuMKrGbJLU
— ANI (@ANI) February 6, 2025
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் யுஜிசி வரைவு விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
- தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
- டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.
யுஜிசி விதிகளுக்கு எதிராக டெல்லியில் நாளை திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எழிலரசன் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து மாநில உரிமைகளை பறிப்பதிலும், குறிப்பாக காவிமயமாக்குவதற்காக கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்கள் கட்டுப்பாட்டை கொண்டு செல்கிற முயற்சிகளில், தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்தார்கள்.
அந்த அறிக்கையில் வழங்கப்பட்டதை போல இனி யுஜிசி என்று ஒன்று இருக்காது. இன்று யுஜிசி மூலம் கல்வியை மொத்தமாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்கலைக்கழக நிதி நெல்கைக் குழு என்பதனை இன்றைக்கு பல்கலைக்கழகங்களை விழுகுகின்ற குழுவாக மாறுகின்ற வகையில் மாநில உரிமைகளை பறிப்பதற்கும், கல்வி உரிமையை பறிப்பதற்கும், சமூக நீதிக்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும், பல வரைவு நெறிவு முறைகளை வெளியிட்டிருக்கிறது.
அதை எப்போதும் போல பிற மாநிலங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அதனை விரைவாக எதிர்க்கக்கூடிய மாநிலமாக சமூக நீதியின் மண்ணாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் கண்டித்தும் அதை நிறைவேற்றக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை அவரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இதைதொடர்ந்து திமுக மாணவர் அணியும், பிற மாநில அமைப்புகளின் மாணவர் அணியும் கூட்டமைப்பை கொண்டு ஒரு மாபெரும் போராட்டம் சென்னையின் நடந்தது.
ஒரு மாதம் ஆன நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
- கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிர்மான் பவன் வாக்குச்சாவடிக்குயில் தனது வாக்கினை பதிவு செய்தார். பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு வந்த ராகுல் காந்தி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.
கடந்த முறை குடும்பத்துடன் சென்று வாக்களித்த ராகுல் காந்தி இம்முறை தனியாக சென்று வாக்களித்தார்.
#WATCH | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi arrives at the polling station at Nirman Bhawan to cast his vote for #DelhiElections2025 pic.twitter.com/i1qhGR7Xp5
— ANI (@ANI) February 5, 2025
- சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர்.
- ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது.
அதன் முடிவில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் நிறைய எதிர்மறை கருத்துக்கள் உள்ளன.
* மற்றவர்களை போல சொகுசு மாளிகையில் தாம் வாழவில்லை. மாளிகைகளில் வசிக்காமல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.
* மற்றவர்களை போல் மாளிகை கட்டிக்கொள்ளாமல் ஏழைகளின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்திருக்கிறேன்
* சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர்.
* நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பாஜக அரசு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது
* ஏழை மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது சிலருக்கு பொழுதுபோக்காகி விட்டது.
* ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி உரை அலுப்பூட்டுவதாக தான் இருக்கும்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
- இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார்.
- இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.
அப்போது, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் வேலை செய்து வருகிறது. நாம் பின்தங்கியுள்ளோம்.
உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது. ராகுல் காந்தி பொய் பேசுகிறார் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களுக்கு உரிய ஆதாரங்களை வழங்கவில்லை என்றால், அவர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் வழங்க பாஜக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
- வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது என்றார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர், "இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை அனுப்ப மாட்டோம். மாறாக அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது" என அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:-
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என எச்சரிக்கிறேன்.
நான், அப்போது அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்க சென்றிருந்தேன்.
மேலும், அங்கு நடந்த இந்திய தூதரகங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நான் தங்கியிருந்த காலத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார். எந்த கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பிதழ் பற்றி பேசப்படவில்லை.
நமது பிரதமர் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய நிகழ்வுகளில் இந்தியா சார்பில் சிறப்பு தூதர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.
ராகுல் காந்தியின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் அவை வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது
- இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் கொண்டு வந்தார். அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். 2014-ல் 15.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, இன்று 12.6% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தியில் இது தான் மிக குறைவானதாகும். இதற்காக நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று என்னால் கூற முடியும்
சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் வேலை செய்து வருகிறது. நாம் பின்தங்கியுள்ளோம்.
உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது
இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், அமெரிக்க அதிபரின் பதிவியேற்பு விழாவிற்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை அனுப்ப மாட்டோம். மாறாக அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது" என அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.
#BudgetSession2025 | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says "...Our Chief of Army Staff has said that the Chinese are inside our territory. This is a fact. The reason China is inside our territory is important...The reason China is sitting inside this country is because… pic.twitter.com/icqd5S365j
— ANI (@ANI) February 3, 2025