என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death threats"

    • ஜூலை 30-ந்தேதிக்கள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.
    • காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் ரூ. 1 கோடி கேட்டு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தில்,

    * ஜூலை 30-ந்தேதிக்குள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.

    * காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.

    * இமெயில் ஐ.டி.யில் ஒரு ரகசிய குறியீடு வரும், அந்த குறியீட்டை பகிர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கடிதத்தின் பின்பக்கம் கூகுள் மேப் வரைபடம், drop the bad hear என்று எழுதப்பட்டுள்ளது.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
    • முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

    இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.

    இந்நிலையில், முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, முகமது சமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக முகமது சமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் காவல் நிலையத்தில் கம்பீர் அளித்துள்ளார்.
    • கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் புகார் அளித்துள்ளார்.

    'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

    தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
    • அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் மிரட்டல் விடுத்ததாக அடையாளம் காணப்பட்ட குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த  மயங்க் பாண்டியா என்ற 26 வயது இளைஞரை வோர்லி போலீசார் இன்று  கைது செய்தனர். ஆனால் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார். இதனால் ஒரு நோட்டீசுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

    முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    • கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
    • பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    • குடிநீர் வினியோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார்.
    • போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (41). டேங்க் ஆபரேட்டரான இவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் (வயது 45) என்பவர் குடிநீர் வினி யோகம் செய்வது தொடர்பாக சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், டேங்க் ஆபரேட்டர் சரவணன் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதை கேட்ட என்னை ஆபாசமாக திட்டியதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் டேங்க் ஆபரேட்டர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது தங்கை பிறந்தநாளுக்கு சூர்யா என்பவர் தனது நண்பர்களுடன் வாழ்த்து கூற வந்தார். அப்போது சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து எதற்காக வாழ்த்து கூற வந்தீர்கள்? என்று கூறி சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட 3 பேரும், சபரி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (40) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதைபார்த்த தயாளன் எதற்காக எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    • பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
    • டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் இருந்து நேற்று மாலை திருவக்கரைக்கு சென்ற, தடம் எண் 12என்ற எண் கொண்ட அரசு பஸ், மீண்டும் திருவக்கரையிலிருந்து பயணிகளை ஏற்றி க்கொண்டு திண்டிவனம் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை தழுதாளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்எ ன்பவர் ஓட்டி சென்றார். அப்போது மயிலம் பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அரசு பஸ் மீது மோதுவது போல் கட்டடித்து சென்றுள்ளனர். இதனால் பஸ் டிரைவர் அவர்களிடம் எதற்காக இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில், பைக்கில் வந்தவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மயிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரைவரை தாக்கியவர்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது ரமேஷ் உட்பட 3 பேர் பஸ்சை மோதுவது போல் வந்து டிரைவரை தாக்கி விட்டு, ஓடி விட்டதாக தெரிவி த்தனர். இதனையடுத்து ரமேஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர் சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீது விழுந்துள்ளது.
    • இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(வயது62). சக்திவேல் (65). இவர்கள் இருவரும்பக்கத்து பக்கத்துவீட்டுக்காரர்கள். சம்பவத்தன்று பெய்த மழையால் சக்திவேல் வீட்டின் மழைநீர்சுப்பிரமணியன் வீட்டுசுவரின் மீதுவிழுந்துள்ளது. இதனைஅவர்தட்டிக்கேட்டு தண்ணீரைதிருப்பிவிடசொல்லியுள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல், அவரதுமகன்கள்வினோத், விக்னேஷ், மருமகள் பிரியங்கா ஆகியோர் சேர்ந்துசுப்பிரமணியன் மற்றும்அவரது மகன்களை அரிவாளால் வெட்டி இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் அவரது மகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாகசுப்பிரமணியன் கொடுத்தபுகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து சக்திவேல், அவரது மகன்கள் வினோத்,விக்னேஷ்,மருமகள் பிரியங்கா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர்.
    • வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோ ட்டையைச்சேர்ந்தவர் மீனாட்சி(வயது35) இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு சில மாதங்களில் கணவன் விட்டு விலகிச் சென்றதால், சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மீனாட்சியின் தாயார், மீனாட்சிக்கு 2-வது திருமணம் செய்து வைப்பதற்காக வரன் தேடினார். இதனை அறிந்த காரைக்காலை சேர்ந்த மரிய லூர்து ராஜ் என்பவர், தான் திருமணமாகாத நபர் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிஉள்ளார்.

    அதன்பின்னர் மரிய லூர்து ராஜ், மீனாட்சியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்ததார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். அப்போது மீனாட்சி மரியலூர்துராஜிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய போதெல்லாம், ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்ததால், மீனாட்சி காரைக்காலில் விசாரித்தார்.

    அப்போது மரிய லூர்து ராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆன விபரம் தெரிய வந்துள்ளது. உடனே ஏமாற்றப்பட்டதை அறிந்த மீனாட்சி, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய லூர்து ராஜ், புகாரை வாபஸ் வாங்கினால், திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து புகாரை மீனாட்சி வாபஸ் வாங்கியுள்ளார். மீண்டும் மீனாட்சி திருமணம் பேச்சை எடுத்தபோது, திருமணம் என்ற பேச்சை எடுத்தாலோ, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, கொலை செய்து விடுவதாக, மரியலூர்துராஜ் வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    அதனை தொடர்ந்து, காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளிக்க சென்றார். ஆனால் புகாரை வாங்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாமதப்படுத்தியதால், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனாட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்தப்பெண்ணை சமரசம் செய்த போலீசார், மீனாட்சியின் புகாரை பெற்றனர். புகாரில், மீனாட்சி, மரிலூர்துராஜ் பழகிய புகைப்படம், வீடியோ, வாட்ஸ் அப் கால் பதிவுகள், துப்பாக்கி காட்டி மிரட்டும் படம் போன்றவற்றை ஒப்படைத்துள்ளார்.

    • கடலூர் அருகே பெண்ணை மாணபங்கம் படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இது சம்பந்தமாக கமலா ராஜேந்திரனிடம் தட்டி கேட்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த சாத்த மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 32). சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குப்பை யைக் கொட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கமலா ராஜேந்திரனிடம் தட்டி கேட்டார். அப்போது ராஜேந்திரன் கமலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் கமலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

    ×