search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death threats"

    • மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.
    • காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது மற்றொரு காரில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார் மற்றும் 2 பேர் வந்தனர். மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.

    இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் (37) தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து நவீன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீ.பா ளை யம் கிரா மத்தைச் சேர்ந்த வர் சுரேஷ் (வயது 46) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடூர் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மற்றும் வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்த மாயவேல் மகன் தமிழரசன் (20) ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சுரேஷ் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் குடிபோதையில் சுரேஷ் வீட்டிற்கு சென்று நீ மாடூர் காரனுக்குத்தான் ஆதரவாக பேசினாய் எனக்கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கையை கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் இவர் மீது கேரள மாநிலத்தில் அடிதடி சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    • அய்யப்பன் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49) விவசாயி.

    சம்பவத்தன்று அய்யப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை வழிமறித்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, வன்கொ டுமை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டபட்ட அய்யப்னுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றத்துறை வக்கீல் அர்ச்சுனன் வாதாடினார்.

    • அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர் பாக குறித்து மனு கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மந்தி பாளையம் பகுதியில் புதி தாக அமைக்கப்பட்ட மனைப்பி ரிவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்க ளுக்கு குடிநீர் தொட்டி அங்க ன்வாடி மையம் அமைப்ப தற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தினை அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து அதே பகுதி யைச் சேர்ந்த திருஞான மூர்த்தி மனைவி செந்தாமரை (வயது34) தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர்பாக குறித்து மனு கொடுத்தார்.

    இதன் காரண மாக ஆத்திரமடைந்த பாவா டை மற்றும் அவரது ஆதர வாளர்க ளுடன் செந்தா மரை வீட்டிற்கு சென்று செந்தா மரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செந்தா மரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு பின் மேல்சிகிச் சைக்கு கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தாமரை புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, நாகராஜ், துரைராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
    • அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அடுத்த பொய்ய பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் சர்வேசன்( வயது 34) அவரது மனைவி விஜயா தேவி, உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தினை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த போலீசில் பணியாற்றி வரும் போலீசார் இருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து பாதை அமைத்து அவரது நிலத்திற்கு செல்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    அதை மீறி அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தங்கள் நிலப்பயிர்களை அழித்து பாதையை பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
    • செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் மெயின்ரோட்டில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மனைவி (செல்வி,45)இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி பழனிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 2 -ந் தேதி காலை 7 மணிக்கு செல்வி டீக்கடையில் இருந்தார்.

    அப்போது அங்கு வந்த பழனி கொதிகலனில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து அக்கா செல்வி மீது ஊற்றி, அசிங்கமாக திட்டி,கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த செல்வி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பழனியை கைது செய்தனர்.

    • இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56), காய்கறி வியாபாரி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் குமரன் (வயது42),ராஜா(வயது 40). அண்ணன் தம்பி. இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கோவிந்தன்அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று உள்ளார்.

    ஹோட்டலுக்கு வந்த அண்ணன் தம்பி குமரன், ராஜா இருவரும் கோவிந்தனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்கு பதிவு செய்து குமரன் , ராஜா ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்

    • அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
    • இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தற்போது தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு, அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்த விஜய் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.

    • பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர்.
    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அடியாருக்கு அடியார் (வயது 40). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வித்யா.

    இவர்களிடம் லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்த புருஷோத்தமன்-செல்வி தம்பதியினர் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் புருஷோத்தமனும், செல்வியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடியாருக்கு அடியார் மற்றும் அவரது மனைவி வித்யாவிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறினர். இதனை நம்பிய அடியாருக்கு அடியார் தன்னுடைய சேமிப்பு பணம் மற்றும் மனைவி, மாமியார், தாயார் ஆகியோரின் நகைகளை அடகு வைத்து ரூ.1 ¼ கோடியை கொடுத்துள்ளார்.

    அதே வேலையில் அடியாருக்கு அடியார் கொடுத்த பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். இதனை அறிந்த அடியாருக்கு அடியார் இது குறித்து புருஷோத்தமனிடம் கேட்ட போது, கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
    • போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கருமாச்சி பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45) . ஊராட்சி செயலாளர். சம்பவத்தன்று எடகொண்டான் பட்டு காலனி பகுதியில் தெரு மின்விளக்கு எரியவில்லை என அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காததால் ஆகாஷ் அதே பகுதியில் இருந்த தெரு மின்விளக்கு மற்றும் மீட்டர் பாக்ஸை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஊராட்சி செயலாளர் சேகர், ஆகாஷிடம் தட்டி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது38). இவருக்கும், இவரது அண்ணன் கந்தசாமி(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மற்றும் அவர் மனைவி முனியம்மாள், மகன் ஏழுமலை(21) ஆகியோர் தண்டபாணியின் வீட்டு மின் இணைப்பை துண்டித்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×