search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricket team"

    • 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன.
    • சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்ப்பதற்காக 6 வகையான டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சென்னை மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கம் புலி கிரிக்கெட் கிளப்-கிராண்ட் பிரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் அணி, சிங்கம் புலி கிளப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராம்குமார் 55 ரன்னும், நவீன் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிங்கம் புலி கிளப் தரப்பில் ஜெப செல்வின் 4 விக்கெட்டும், சந்தான சேகர், தர்ஷன் தலா 2 விக்கெட்டும், ராஜலிங்கம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து ஆடிய சந்தான சேகர் தலைமையிலான சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜோபின் ராஜ் 47 ரன்னும், ஆனந்த் 31 ரன்னும், திவாகர் 30 ரன்னும் சேர்த்தனர். தனிஷ் குமார் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கிராண்ட் பிரிக்ஸ் கிளப் தரப்பில் குமரேசன் 3 விக்கெட்டும், நவீன் 2 விக்கெட்டும், கிருஷ்ண குமார், அர்விந்த் சாமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். லீக் முடிவில் இந்த டிவிசனில் அனைத்து (11) ஆட்டங்களிலும் வெற்றி கண்டு அசத்திய சிங்கம் புலி அணி 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வி.பி.ராகவன் கேடயத்தை தனதாக்கியது. அத்துடன் சிங்கம் புலி அணி 4-வது டிவிசன் போட்டிக்கு முன்னேறியது.

    • கிரிக்கெட் அணிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    காரைக்குடி

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று (4-ம் தேதி) முதல் வருகிற (7ம் தேதி) வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது.

    இதற்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட அணித்தேர்வு அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் செல்லப்பன் வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பைச் சேர்ந்த ஏ.கனிஷ்கர், எஸ்.கே.கவுதம் பாலாஜி, 8-ம் வகுப்பை சேர்ந்த டி.நவீன் ராகவன், சி.சித்தார்த், எஸ்.கைலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வான மாணவர்களையும் மற்றும் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராகவனையும், பள்ளித் தாளாளர் சத்யன், பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்யன், பள்ளியின் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் ராணிபோஜன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    • திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர் தேர்வு பழங்கரை, அணைப்புதூர் டீ பப்ளிக் பள்ளியில், வருகிற 25-ந் தேதி நடக்கிறது.இப்போட்டியில் 2003 செப்டம்பர் 1 அன்றோ அல்லது அதன் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். தங்கள் பெயர், போட்டோ, பிறப்பு மற்றும் முகவரி சான்றிதழ்களுடன் திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    அதன்படி 19ல் துவங்கிய பதிவு இன்று மாலை 5மணி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும். கிரிக்கெட் உபகரணங்கள் வெள்ளை நிற உடை அணிந்து வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்திய அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாய விதிமுறைக்கு எதிராக குரல்கள் தற்போது வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. #YoYoTest

    இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை அணில் கும்ளே பயிற்சியாளராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இந்த முறை இருந்த போது, உடல்தகுதி வீரர்களுக்கு மிகவும் முக்கியமாக கருதப்பட்டு இந்த முறையை இந்தியாவிலும் அவர் அறிமுகம் செய்தார்.

    இந்தியாவில் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற 16.1 மதிப்பெண் எடுத்தாகவேண்டும். ஒவ்வொரு அணிக்கேற்ப இந்த மதிப்பெண் மாறுபடுகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு நடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட அம்பாத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணிக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் இந்திய அணியில் இடம் பெறாமல் போவதற்கு இந்த யோ-யோ டெஸ்ட் காரணமாகிறது என்றால், இது ஒருதலைப்பட்சமானது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷ்ரேயாஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் யோ-யோ டெஸ்டில் 19 மதிப்பெண் பெற்றால் மட்டுமே வீரர்களை அணிக்கு தேர்வு செய்கின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மதிப்பெண் இலக்காக உள்ளது. முன்னணி அணியாக உள்ள ஆஸ்திரேலியா 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த யோ-யோ டெஸ்டை தூக்கி விட்டு வேறு மாதிரியான சோதனையை .வழங்கிறது. 
    இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் விளையாடுவதையொட்டி, ஆப்கான் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #IND #AFG #INDvAFG
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.  இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    ‘ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவதை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துகிறேன். இதுபோன்ற விளையாட்டுக்கள் தொடர்ந்து இரு நாட்டு மக்களிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும்’ என்றும் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரகானே (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

    ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானி ஸ்காய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான். #IND #AFG #INDvAFG

    ×