search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட்"

    • டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள்.
    • எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது.

    புதுடெல்லி:

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் அவர் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலரான கபில்தேவின் (51 விக்கெட்) சாதனையை முறியடித்தார்.

    இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டனான 66 வயதான கபில்தேவ், கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிட்டு பேசுவது சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.

    இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-

    தயவு செய்து கிரிக்கெட்டில் யாரையும் ஒப்பிடாதீர். ஒரு தலைமுறை வீரர்களை, மற்றொரு தலைமுறையினருடன் ஒப்பிடக்கூடாது. அது தேவையில்லாத ஒன்று. டெஸ்டில் இந்த காலத்தில் ஒரே நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுக்கிறார்கள். ஆனால் எனது காலத்தில் இவ்வாறு வேகமாக எடுக்க முடியாது. அதனால் தான் இருவேறு தலைமுறையினருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்று சொல்கிறேன்.

    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரை நீக்கியது சரியான முடிவா? என்று கேட்கிறீர்கள். அது குறித்த நான் எப்படி கருத்து சொல்ல முடியும். இது தேர்வாளர்களின் வேலை. அதனால் நான் ஏதாவது சொன்னால் அது தேர்வாளர்களை குறைசொல்வதாகி விடும். அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை.

    ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகப்பெரிய வீரர்கள். விளையாடுவதற்கு சரியான நேரம் எது, ஓய்வு பெற வேண்டிய தருணம் எது என்பது அவர்களுக்கு தெரியும்.

    என்று அவர் கூறினார்.

    • விராட் கோலி தற்போது தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
    • விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா பகுதிக்கு சென்றுள்ளார்.

    பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு பிறகு இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

    இந்நிலையில், விராட் கோலியை பார்த்ததும் ரசிகை ஒருவர் ஆச்சரியப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், "விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் உள்ளார். அப்போது அவர்களுக்கு பின்னால் இருக்கும் பெண் ஒருவர் கோலியை பார்த்ததும் உற்சாகமடைகிறார்.

    இந்தியாவின் நுழைவாயில் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் தான். ஆனால் இந்தியாவிற்கு மற்றுமொரு நுழைவாயில் உள்ளது. அது தான் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா ஆகும்.

    • தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான் என்று அஸ்வின் தெரிவித்தார்.

    சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பட்டமளிப்பு விழாவில் பேசிய அஸ்வின், 'ஆங்கில மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள், தமிழ் மாணவர்கள் யாரெல்லாம் இருக்கிறீர்கள்' என கேட்க தமிழ் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் 'இந்தி மாணவர்கள் யார் எல்லாம் இருக்கிறீர்கள்' என்று அஸ்வின் கேட்க மாணவர்கள் அனைவரும் அமைதியானார்கள்.

    இதனையடுத்து பேசிய அஸ்வின், "இந்தி நமது தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டும் தான்" என்று தெரிவித்தார்.

    இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    • இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரதேசம் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வி 105 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய விதர்பா அணி 47.2 ஓவரில் 313 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியில் அதிக பட்சமாக யாஷ் ரத்தோட் 138 ரன்களும் கருண் நாயர் 112 ரன்களும் எடுத்தனர்.

    கருண் நாயர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் இது அவரது 3-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.

    ஆனால், அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 5-வது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

    லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.

    லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் என்ற வார்த்தை விராட் கோலியால் டிரெண்டானது.
    • ரிஷப் பண்ட் கம்பேக் என்ற வார்த்தையும் டிரெண்டானது.

    2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்தும் எதனால் அந்த வார்த்தை டிரெண்டானது குறித்தும் இந்த செய்தியில் காண்போம்.

    1. ஜஸ்பிரிட் பும்ரா (jasprit bumrah) 

    டி20 உலகக் கோப்பை முதல் பார்டர் கவாஸ்கர் டிராபி வரை பந்து வீச்சில் மிரட்டி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட்டில் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் மட்டும் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

    ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக அளவில் பேசப்பட்ட வார்த்தைகளில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார்.

    2. ஹர்திக் பாண்ட்யா (hardik pandya)

    பாண்ட்யா டிரெண்டாக முக்கிய காரணமாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் மீது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மைதானத்தில் விளையாடும் போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். டாஸ் போட வரும் போது ரோகித் ரோகித் என முழங்கினர். இதற்கு மேலாக மைதானத்திற்குள் ஒரு நாய் வந்தது. உடனே அதை பார்த்து ஹர்திக் ஹர்திக் என கூச்சலிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்கில் டிரெண்டாகினார்.

    இதனையடுத்து நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை திசை திருப்பி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் மும்பை மைதானத்திற்கு வந்த போது எந்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷமிட்டார்களோ அவர்களே அவருக்கு எதிராக ஆதரவு தெரிவித்தனர்.

    3. டி20 உலகக் கோப்பை (t20 world cup)

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    4. சஞ்சு சாம்சன் (sanju samson)

    இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ரொம்ப காலமாக தவித்த வீரர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார். தொடர்ந்து 2 சதங்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்கள் விளாசி சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார்.

    தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கான நிறந்தரமான இடத்தை அவர் இந்த ஆண்டு தக்க வைத்து கொண்டார்.

    5. கவுதம் கம்பீர் (gambhir era)

    இந்த ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை இழந்தது. 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.

    இதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்ததால் கவுதம் கம்பீரின் வீரர்கள் தேர்வு அதிகாரத்தை பிசிசிஐ பரித்தது. தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் கவுதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    6. இலங்கை & நியூசிலாந்து ஒயிட்வாஷ் (SL&NZ whitewash)

    இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.

    இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    7. ரிஷப் பண்ட் கம்பேக் (rishabh pant comeback)

    2022-ம் ஆண்டு ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதில் விளையாடவில்லை.

    அதன் பிறகு பூரண குணமடைந்து டி20 உலகக் கோப்பையில் களமிறங்கினார். இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தை காயம் என கூறி தனது ஐடியா மூலம் சிறிது நேரம் தாமதப்படுத்தினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இதுவும் பார்க்கப்பட்டது.

    அதன்பிறகு 2025-ம் ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது. இது ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

    8. அஸ் அண்ணா (Ash anna) 

    பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டியுடன் தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இதனால் அஸ் அண்ணா என்ற வார்த்தை அதிக பேசப்பட்டது. அவர் குறித்த பல முக்கியமான வீடியோக்கள் சிறந்த பந்து வீச்சு பேட்டிங் என அனைத்து டிரெண்டானது.

    9. ஓய்வு அறிவிப்பு (retirement)


    இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து அதிக பேர் ஓய்வை அறிவித்தனர். இதனால் Retirement என்ற அதிகமாக பேசப்பட்டது. டீன் எல்கர், டேவிட் வார்னர், கிளாசன், நீல் எல்கர், தினேஷ் கார்திக், கேதர் ஜாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன், தவான், டேவிட் மலான், மொயின் அலி, ஷகிப் அல் ஹசன், மேத்வூ வேட், விருத்திமான் சகா, அஸ்வின், சவுத்தி என முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தனர்.

    10. அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் (outside the off stump)


    outside the off stump என்ற வார்த்தை டிரெண்டாக முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய அணியின் விராட் கோலி. இவர் கடந்த சில போட்டிகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்புக்கு சென்ற பந்தை அடிக்க முயற்சித்து அவுட் ஆகி வந்தார். இதனை பல முன்னாள் வீரர்கள் எடுத்து கூறியும் அதனை கண்டுக்கொள்ளாமல் அந்த ஷாட்டை ஆட முயற்சித்து அவுட் ஆனார்.

    குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 இன்னிங்சுகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் பந்தில் தான் விராட் கோலி அவுட் ஆனார்.

    • 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது.
    • மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    இன்றோடு 2024 ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது. நாளை நாம் 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம்.

    இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டு பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. பல புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. அவ்வகையில் இந்தாண்டு வைரலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ரீவைண்ட் செய்தியில் நாம் பார்க்கவுள்ளோம்.

    1. டி20 உலகக்கோப்பையை வென்றபின் ரோகித்தும் கோலியும் கட்டிப்பிடித்த புகைப்படம்

    2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். 2007-க்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணியின் உணர்ச்சிமிகு தருணமாக இருந்தது.

    அப்போது ரோகித்தும் கோலியும் கண்களில் அக்கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    2. மக்களவை தேர்தலுக்கு பின்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்த புகைப்படம்

    2024 மக்களவை தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார். பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிக இடங்களை வென்ற நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியின் கிங் மேக்கர்களாக உருவெடுத்தனர்.

    அந்த சமயத்தில் நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    3. ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்பு துக்கத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம்

    ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று பதக்கம் வெல்வதை உறுதி செய்திருந்தார்.

    அப்போது வினேஷ் போகத் 50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தியறிந்து சோகத்தில் மூழ்கிய வினேஷ் போகத்தின் புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    4. திருமணத்தின்போது லூடோ விளையாடிய மாப்பிள்ளையின் புகைப்படம்

    திருமணத்தன்று மணமகனும் மணமகளும் பரபரப்பாக இருப்பார்கள். ஆனால் திருமணம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஒரு மாப்பிள்ளை தனது நண்பர்களுடன் மனமேடையிலேயே செல்போனில் லூடோ விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

    5. தாங்கள் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் படத்தை பார்த்து ரசித்த ஷாருக்கான் சல்மான் கானின் வீடியோ

    ஷாருக்கானும் சல்மான் கானும் இணைந்து நடித்த கரண் அர்ஜுன் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை சல்மான் கானும் ஷாருக் கானும் இணைந்து டிவியில் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    6. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வாகன பேரணியை மரத்தின் மேலே அமர்ந்து ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்த நிகழ்வு

    2007-க்கு பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணியினர் மும்பையில் வாகன பேரணி சென்றனர். அப்போது மரத்தின் மேலே ஏறி அமர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய அணி வீரர்களை புகைப்படம் எடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    • ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் டாஸ் போட்டது சர்ச்சையானது.
    • பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

    2024 ஆம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்த சர்ச்சையான சம்பங்களை இந்த செய்தியின் மூலம் காண்போம்.

    1. வங்க தேச கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார்.

    2. ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. அப்போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இந்த சம்பவத்தை அடுத்த போட்டியின் போது பேட் கம்மின்ஸ் உடன் டுபிளிசிஸ் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    3. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த ஆண்டு ஐபிஎல் குறித்து தெரிவித்த கருத்து உள்பட பல சர்ச்சைகள் வெடித்தன.

    பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் மீது லலித் மோடி பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் என். ஸ்ரீனிவாசன் ஆதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லலித் மோடி, ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டார் என்பதால் ஆன்ட்ரூ ப்ளின்டாஃப்-ஐ மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்கவில்லை. அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அது தெரியும். அவருக்கு ஐபிஎல் பிடிக்காது அவர் இது தோல்வியை தழுவும் என்று நினைத்தார்.

    அவர் அம்பயர்களை மாற்றத் தொடங்கினார். சிஎஸ்கே போட்டிகளின் போது அவர் சிஎஸ்கே அம்பயர்களை நியமித்தார். அது எனக்கு பிரச்சினையாக இருந்தது. அது நேரடியாக பிக்சிங் செய்வதை போன்றதாகும். அதை வெளிப்படுத்த நினைக்கும் போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார். என்று தெரிவித்தார். இது 2024-ம் ஆண்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    4. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் தேசிய கிரிக்கெட் லீக்கின் (என்சிஎல்) எதிர்கால எடிஷன்களுக்குத் தடை விதித்தது. ஐசிசி விதிகளுக்கு என்சிஎல் இணங்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    5. டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சையானது. அந்த போட்டியில் இறுதி ஓவரில் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் பவுண்டரி லைனில் பிடிப்பார். அப்போது அவரது கால் பவுண்டரி லைனை பட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    6. பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

    மேல்முறையீட்டிற்குப் பிறகு ஆன்-பீல்ட் அம்பயரின் நாட் அவுட் முடிவு மாற்றியமைக்கப்பட்டது, மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தார். இது பந்து பேட் மற்றும் பேட் இரண்டிற்கும் அருகில் சென்றபோது ஒரு ஸ்பைக்கைக் காட்டியது.

    ராகுலின் பேட் ஒரே நேரத்தில் மோதியதாகத் தோன்றினாலும், மூன்றாவது நடுவர் ஸ்பைக் ஒரு எட்ஜைக் குறிப்பிட்டு, ஆன்-பீல்ட் அம்பயரின் முடிவை மாற்றினார். உறுதியான ஆதாரம் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் சந்தேகத்தின் பலன் கள நடுவரின் முடிவை உறுதிப்படுத்துகிறது. ராகுல் வெளியேறுவதற்கு முன்பு நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோவுடன் சில நொடிகள் பேசிவிட்டு பெவிலியன் சென்றார்.

    6. அபுதாபி டி10 லீக்கின் முன்னாள் துணை பயிற்சியாளர் சன்னி தில்லானுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் 6 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டது.

    2021 அபுதாபி டி10 லீக்கின் போது போட்டிகளில் முறைகேடு செய்ய முயன்றதற்காக ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மீறல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டன.

    7. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது இன்னிங்சின் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார்.

    இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்தார். அப்போது அல்ட்ரா எட்ஜ்-ல் பார்க்கும் போது அவுட் இல்லை என வந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும் போது பேட்டிலும் கையுறையிலும் தொட்டுச் செல்லும் மாதிரி இருந்தது. மேலும் பேட்டை கடந்த பின்னர் பந்து சென்ற திசையில் மாற்றம் இருந்தது. இருந்ததையடுத்து 3-ம் நடுவர் அவுட் என தெரிவித்தார்.

    இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
    • உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.

    மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். அந்த சமயத்தில் அவர் தேவையற்ற ஷாட் அடித்து அவுட் ஆனதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    போலண்ட் வீசிய 56வது ஓவரில் 3-வது பந்தை ரிஷப் பண்ட் லாப் ஷாட் அடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த பந்திலும் அவர் அதே போலத் தான் ஆடுவார் என போலண்ட் பந்து வீசினார். அது போலவே ரிஷப் பண்ட் கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பேட்டில் டாப் எட்ஜ் ஆன பந்து தேர்டு மேன் திசையில் நின்று இருந்த நாதன் லயனிடம் கேட்ச் ஆனது.


    இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பிட்ட 2 பீல்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த இடத்தில் ரிஷப் பண்ட் பந்தை அடித்தார். இது முட்டாள்தனமானது. அந்த சமயத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.

    இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல. அது ஒரு முட்டாள் ஷாட். இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.

    • கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது
    • இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னம், வங்கி அதிகாரிகளின் கடவுச்சொற்களை (PASSWORD) பயன்படுத்திக் கடந்த 2013-ம் ஆண்டு மோசடி செய்துள்ளார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவும் அதே வங்கியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.
    • பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் ஜமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

    ராவல்பிண்டி:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறும்.

    இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் சமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பேட்ஸ்மேனான இவர், 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உள்ள நிலையில், இறுதி 4 அணிகளுக்கான வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என அவர் கணித்திருக்கிறார்.

    இதன்படி, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புகிறேன் என யூ-டியூப் சேனல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

    • அரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 305 ரன்கள் என்ற இலக்கை எட்டி இலங்கை வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

    ராஜ்கோட்:

    குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் சீனியர் மகளிர் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், அரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.

    இதனால், 390 என்ற வெற்றி இலக்கை நோக்கி வங்காள மகளிர் அணி விளையாடியது. அந்த அணி தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடியது. இதனால், 5 பந்துகள் மீதம் இருந்த சூழலில், 390 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்து வரலாறும் படைத்துள்ளது.

    ஒரு நாள் போட்டியில் இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் கேன்டர்பரிக்கு எதிராக விளையாடிய நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 309 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சாதனையை வங்காள அணி முறியடித்து உள்ளது.

    சர்வதேச அளவில், நடப்பு ஆண்டு தொடக்கத்தில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 305 ரன்கள் என்ற இலக்கை எட்டி இலங்கை வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

    • இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
    • சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது ரசிகர்களில் ஒருவரால் வினோத் காம்ப்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.


    1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.

    உடல் நலம் பதிக்கப்பட்டுள்ள உள்ள வினோத் காம்ப்ளி சமீபத்தில் அங்குள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

    சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

    ×