search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட்"

    • திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
    • நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    நேற்றுடன் 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 ஆட்டத்தில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத் தில் திண்டுக்கல்லுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. திருச்சி அணிக்கு ஒரே ஒரு போட்டியே உள்ளது.

    நெல்லை 5 புள்ளியுட னும், திருப்பூர் தமிழன்ஸ் 4 புள்ளியுடனும், மதுரை 3 புள்ளியுடனும், சேலம் 2 புள்ளியுடனும் உள்ளன.

    டி.என்.பி.எல். போட்டியின் 23-வது ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் நெல்லை அணி 5 புள்ளியுடன் இருக்கிறது. திருப்பூர் அணி 4 புள்ளியுடன் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    • முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
    • முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    ஒருநாள் உலகக்கோப்பையில் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.

    வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கோரி விவாகரத்து கோரியிருந்தார். அப்போது பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கி மேட்ச் பிக்சிங் செய்ததாக முகமது ஷமி மீது அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.

    ஆனால் முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்த புகாரால் மன உளைச்சலுக்கு உள்ளான முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரின் நண்பர் உமேஷ் குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

    சுபங்கர் மிஸ்ராவுடன் பாட்காஸ்ட்டில் பேசிய போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

    "அந்த சமயத்தில் முகமது ஷமி என்னுடன் என் வீட்டில் வசித்து வந்தார். அவர் மீது மேட்ச் பிக்சிங் புகாரை அவரது முன்னாள் மனைவி கூறிய போது அவர் உடைந்துவிட்டார். 'என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.

    நாங்கள் வசித்த 19வது மாடியில், அதிகாலை 4 மணியளவில் முகமது ஷமி பால்கனியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நின்று கொண்டிருந்தார். அந்த இரவு ஷமியின் நீண்ட இரவாக இருந்தது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணை அறிக்கை வெளிவந்த பொது ஷமி மிகவும் சந்தோஷப்பட்டார். உலக கோப்பையை வேன்றபோது கூட ஷமி இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிக்ஸ் அடித்தால் அவுட் என ஏகப்பட்ட விதிமுறைகள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் உள்ளது.
    • கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது பெருமைக்குரிய விஷயம்.

    இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு மிக பிரபலமானது. இங்கு கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை விட தெருக்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களே அதிகம்.

    ஸ்ட்ரீட் கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்த விளையாட்டை இந்தியாவில் விளையாடாதவர்களே கிடையாது என்றே சொல்லலாம். குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் அதிகம் உள்ள இடங்களில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடப்படுவதால் கிரிக்கெட்டை விட இங்கு விதிமுறைகள் ஏராளம்.

    3 பந்துகளை தொடர்ச்சியாக விட்டால் அவுட். ஒன் பிட்ச் கேட்ச் அவுட் என ஏகப்பட்ட விதிமுறைகள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் உள்ளது.

    ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் சிக்ஸ் அடித்தால் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்களை பந்துகள் சேதப்படுத்தும். அதனால் சிக்ஸ் அடித்தால் அவுட் எனும் விதிமுறை ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டின் முக்கிய விதிமுறையான சிக்ஸ் அடித்தால் அவுட் என விதிமுறையை பிரபல கிரிக்கெட் கிளப் விதித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இங்கிலாந்தின் 234 ஆண்டுகள் பழமைவாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் கிளப்பான சௌத்விக் அண்ட் ஷோரேஹம் கிளப்பில், வீரர்கள் சிக்சர்கள் விளாச தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முதல் சிக்சர் அடித்தால் ரன் இல்லை எனவும் 2வது சிக்சர் அடித்தால் அவுட் என புதிய விதிமுறை அந்த கிளப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    வீரர்கள் சிக்சர்கள் விளாசுவதால் மைதானத்திற்கு அருகே உள்ள தங்கள் வீடுகளில் அடிக்கடி சேதம் ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தொடர்ச்சியாக புகாரளித்து வருவதால் இந்த முடிவு என அந்த கிளப் விளக்கம் அளித்துள்ளது.

    அதே சமயம் சிக்ஸ் அடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு கிளப்பில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
    • இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார்.

    இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று அவர் வழிநடத்த இருக்கும் முதல் தொடரை ஒட்டி, கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தலைமை பயிற்சியாளர் காம்பீர், மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தனர். பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் காம்பீர் பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவே.

    "நான் மிகவும் வெற்றிபெற்ற அணியை வழி நடத்துகிறேன். டி20 உலக கோப்பை சாம்பியன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பல வெற்றிகளை நாம் காண வேண்டும்."

    "விளையாட்டு வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கும், வீரர்ளுக்கும் நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு பின்னால் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்."

    "ரோகித் மற்றும் விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். டி20 ஆகட்டும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியாகட்டும், அவர்களுக்குள் இன்னும் நிறய கிரிக்கெட் மீதம் இருக்கிறது."

    "அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பையிலும் விளையாடும் சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம்," என்று கூறியுள்ளார்.

    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • நாளை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹராரே:

    சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய போட்டியில் இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ருதுராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பந்து வீச்சில் அலேஷ்கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் பென்னாட், டியான் மியர்ஸ், மாதேவேரே, முசராபானி, சத்தரா, ரிச்சர்ட் நிகரவா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    வெற்றி கட்டாயத்துடன் களம் இறங்கும் ஜிம்பாப்வே அதற்காக கடுமையாக போராடும். ஆனால் இளம் இந்திய அணி வலுவாக இருப்பதால் ஜிம்பாப்வேவுக்கு கடினமாக இருக்கும்.

    • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    • கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    2008 ஆம் ஆண்டு 19 வயதிற்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

    அப்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ குறித்து தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் இடம் கேள்வி எழுப்பட்டபோது.

    அதற்கு பதில் அளித்த அவர், கோலியின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பலரும் என்னை டேக் செய்கிறார்கள். அப்போது தன அந்த வீடியோவை நான் பார்த்தேன். எனக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு சிறப்பான மரியாதையை கிடைத்துள்ளது.

    குறிப்பாக ஒருநாள் கிரிக்கெ போட்டியின் சேஸிங்கில் ரன்களை துரத்தி வெற்றி பெறுவதில் அவர் காட்டும் உத்வேகம் தான் மற்ற வீரர்களை விட கோலியை தனித்துவமானவராக காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    • மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
    • கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    ஐபிஎல் போட்டியில் தற்போது ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    அப்போது பேசிய நடராஜன், மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.

    பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது இந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அங்கு தனிமையை உணர்ந்தேன். எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளருக்கு தமிழ் தெரிந்ததால் அவர் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது விரேந்தர சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார்.

    இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே நீங்கள் கல்லூரியிலேயே பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கல்லூரியில் நீங்கள் பேசத் தொடங்கினால், நாளை உங்களால் எங்கு வேண்டுமானாலும் தில்லாக பேச முடியும் என்று நடராஜன் தெரிவித்தார்.

    • மீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார்.
    • பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷன். அவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு தெரியாது இந்த பிரேக் அவரது வாழ்க்கையை மாற்றப் போகும் தருணம் என்று.

    இஷான் கிஷன் இந்திய அணிக்கு கடைசியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலயாவை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை.

    அதற்கு பிறகு நடைபெற்ற ரஞ்சி டிராபியிலும் இஷான் விளையாட மறுத்தார். இதனால் பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் மறுபடியும் விளையாட வேண்டும் என்றால், உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடினால் மட்டுமே அவரால் மீண்டும் அணிக்காக விளையாட முடியும் என கூறியுள்ளார்.

    இது குறித்து சமீபத்தில் இஷான் கிஷன் அளித்த பேட்டியில், "என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால், சர்வதேச போட்டியில் விளையாட முடியும் என கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு சரியான மனநிலையில் நான் இல்லை. தொடர்ந்து நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாம். இப்போது வருத்தமாகத் தான் உள்ளது." என்று கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் விளையாடினார். ஆனால் அதில் அவர் நினைத்ததுப் போல் விளையாட முடியவில்லை. இதனால் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.
    • ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக கைப்பற்றி ராகுல் டிராவிட் இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெறுகிறார்.

    ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதன்படி முன்னாள் இந்திய அணி வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோர் இந்தியாவின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளனர்.


     

    இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் நியமனம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

    எனினும், இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஐ.சி.சி. போட்டி தொடர்கள் நடைபெற உள்ளன. 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி, இதைத் தொடர்ந்து 2027 ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    அப்போது இந்திய வீரர் ரோகித் சர்மா 40 வயதை கடந்திருப்பார். விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா 39 வயதில் இருப்பர். அந்த வகையில், 2027 உலகக் கோப்பை தொடரில் இவர்கள் விளையாடுவது அவரவர் உடல்திறன் சார்ந்தே முடிவு செய்யப்படும். அந்த வகையில், புதிய தலைமை பயிற்சியாளர் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு பின்பு இந்திய அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கிய பொறுப்பில் இருப்பார்.

     


    இதைத் தொடர்ந்து இந்திய அணியில் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்ற வைகயில், பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரியான வீரர்களை கண்டறிவது மற்றும் வீரர்களை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவது புதிய தலைமை பயிற்சியாளருக்கு சவாலாக இருக்கும்.

    டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறும் நிலையில், இவருக்கு மாற்றாக டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த பதவிக்கு கடும் போட்டியாளர்களாக இருப்பர். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்கல் இருக்காது என்ற வகையில், ஒருநாள் போட்டிக்கான அடுத்த கேப்டனை தேர்வு செய்வது மிக முக்கிய பணியாக இருக்கும்.

    தற்போதைய கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக பங்காற்றி வருகிறார். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரை தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்கும் வீரர் யார் என்பதை முடிவு செய்வதும் அதிக சவாலான ஒன்றாக இருக்கும்.

     


    கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசியாக விளையாடிய இரண்டு ஐ.சி.சி. தொடர்களில் நடைபெற்ற 20 போட்டிகளில் 19 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

    அந்த வகையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார், டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார் என பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் இந்திய அணி தற்காலிக கேப்டன், தற்காலிக பயிற்சியாளருடன் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு முன்னேற துவங்கி உள்ளது.

    உலக கிரிக்கெட்டில் வலிமை மிக்க இந்திய அணியை அடுத்து வழிநடத்தப் போவது யார், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் இந்திய அணியின் எதிர்காலம் புதியவர்கள் கையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

    "போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

    இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.


    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • பும்ரா மற்றும் எனது அணியினருக்கு வெற்றிக்கான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இது குறித்து பாண்ட்யா கூறியதாவது:-

    மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் கடினமாக உழைத்தோம். சில நேரங்களில் அது கிளிக் ஆகாது. ஆனால் மொத்த தேசமும் விரும்பியதை இன்று நாங்கள் சாதித்துள்ளோம். எனக்கு இன்னும் இது அதிக ஸ்பெஷலானது. ஏனெனில் கடந்த 6 மாதங்களாக எனக்கு மோசமாக சென்றது. அப்போது நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இருப்பினும் கடினமாக உழைத்தால் என்னால் ஜொலிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற வாய்ப்புகள் தான் ஸ்பெஷலாக்குகிறது. எங்களுடைய திட்டத்தை செயல்படுத்தி அமைதியாக இருந்து அழுத்தத்தை எதிரணி பக்கம் கொண்டு சென்றால் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். பும்ரா மற்றும் எனது அணியினுக்கு வெற்றிக்கான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு பந்திலும் 100% கமிட்டாக விரும்பினேன். ராகுல் டிராவிட்டுகாக மகிழ்ச்சி. அற்புதமான மனிதரான அவருடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நாங்கள் அற்புதமான வழியனுப்புதலை செய்துள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். அனைத்து துணை பயிற்சிகளுக்காகவும் மகிழ்ச்சியாடைகிறேன். என்று கூறினார்.

    • பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.
    • வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.

    20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஐ.சி.சி. கோப்பை கனவு நசுங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்ஷர் படேல் வீசிய 15-வது ஒவரில் கிளாசன் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 24 ரன் கிடைத்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்தில் 30 ரன் தேவை என்ற எளிதான நிலை ஏற்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.

    16-வது ஓவரில் பும்ரா 4 ரன்னே கொடுத்தார். இதனால் 24 பந்தில் 26 ரன் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 17-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. அவர் முதல் பந்திலேயே கிளாசனை அவுட் செய்தார். அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது. பும்ரா 18-வது ஓவரில் 2 ரன்னே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி 2 ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. அர்ஷ்தீப்சிங் 19-வது ஓவரில் 4 ரன்னே கொடுத்தார். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரை வீசினார்.

    முதல் பந்தில் மில்லர் பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். எல்லையில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாககேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் 8 ரன்னை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். கடைசி கட்டத்தில் ஏற்பட்ட திருப்பத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைத்தது.


    பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்து திருப்புமுனை ஏற்படுத்திய 5 வீரர்கள் வருமாறு:-

    பும்ராவின் மந்திர பந்துவீச்சு

    இந்தியா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல பும்ராவின் மேட்ச் வின்னிங் பந்து வீச்சு உதவியாக இருந்தது. அவர் மீது கேப்டன் ரோகித் சர்மா வைத்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. 16-வது ஓவரில் வெறும் 4 ரன்களே கொடுத்த அவர் 18-வது ஓவரில் ஜான்சென் விக்கெட்டை கைப்பற்றி 2 ரன்னே விட்டு கொடுத்தார். பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.


    சூர்யகுமார் யாதவின் அற்புத கேட்ச்

    கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அவரது புத்தாலித்தனமான செயல்பாடு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பந்தை பிடிக்காமல் இருந்தால் சிக்சருக்கு சென்று இருக்கும். சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் சமூக வலைதள பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.


    அக்ஷர் படேலின் ஆல்ரவுண்டு பங்களிப்பு

    அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். 31 பந்தில் 47 ரன் எடுத்தார். இந்திய அணி 34 ரன்னில் 3 விக்கெட்டை இழந்த போது களத்துக்கு வந்தார். அவர் கோலியுடன் இணைந்து 72 ரன் எடுத்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டான ஸ்டப்சை அவுட் செய்தார்.


    வீராட்கோலியின் அரை சதம்

    வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. அவர் 76 ரன்கள் (56 பந்து) எடுத்து மற்றொரு மேட்ச் வின்னிங் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அக்ஷர் படேல், ஷிவம் துபேபுடன் இணைந்த அவரது ஆட்டம் மிகவும் முக்கியமானது.


    ஹர்திக்பாண்ட்யாவின் அபார பந்துவீச்சு

    சுழற்பந்து வீரர்கள் சாதிக்காத போது ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றார். முக்கிய விக்கெட்டான கிளாசனை அவர் வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையாகும். கடைசி ஓவரில் மில்லர், ரபடா ஆகிய 2 விக்கெட்டை கைப்பற்றியது அடுத்த திருப்புமுனையாகும்.


    அவர் 3 ஓவர் வீசி 20 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.

    ×