search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ricky Ponting"

    • ஏழு சீசனில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • கடந்த மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தலைசிறந்த பேட்ஸ்மேனான இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த ஏழு சீசனில் இவரது தலைமையில் டெல்லி அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் ஏழு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடைசி மூன்று சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் ரிக்கி பாண்டியை பிரிவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார்.
    • அவர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி குணமடைந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான அவர் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார். அவர் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துள்ளேன். அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனென்றால் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும், அவரது பேட்டிங் ஆற்றல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

    • ஜூலை மாதம் முதல் 2027 டிசம்பர் மாதம் வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட வேண்டும்.
    • வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு சரிபட்டு வராது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளராக விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் 2025 ஜூலை முதல் 2027 டிசம்பர் மாதம் வரையாகும். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் ஸ்டீபன் பிளமிங் யோசிப்பதாக தகவல் வெளியானது. எம்.எஸ்.டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ தன்னை அணுகியது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாய்ப்பை நிராகரித்தாகவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இருந்தால் இதை ஏற்பேனா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஐபிஎல் போட்டியின்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல நடைபெற்றது. நான் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். ஆனால் எனது வாழ்க்கையில் கூடுதலான நேரத்தை ஆஸ்திரேலியாவில் செலவழிக்க விரும்புகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் பதவி ஏற்றுக் கொண்டால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே, தலைமை பயிற்சியாளராக விரும்பினால், ஐபிஎல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    மேலும், தலைமைப் பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலையாகும். இப்போது எனது வாழ்க்கை முறைக்கும் நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களுக்கும் தலைமை பயிற்சியாளர் பதவி பொருந்தாது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பிசிசிஐ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கியது.

    இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. நேற்று தெரிவித்தது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

    • ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்raன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது.
    • சிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் பயன்படுத்தியது.

    ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் டெல்லி- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 185 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்ரோன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் சிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் பயன்படுத்தியது.

    ஆனால் முதல் ஓவரின் 5-வது பந்தில் முடிவில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை சப்ஸ்டிடியூட் வீரராக ஃபீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார். அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இது குறித்து 4-வது நடுவரிடம் கேள்வி எழுப்பினார்.

    குறிப்பாக பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் ஃபீல்டிங் செய்ய முடியும்? என்று பாண்டிங் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிப்பதற்காக 4-வது அம்பையர் வேகமாக ஓடி வந்தார். அவரிடம் டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சஞ்சு சாம்சன் விதிமுறைக்கு உட்பட்டு தான் ரோவ்மன் போவலை ஃபீல்டிங் செய்ய வைத்தார் என்பதை அவர்களிடம் 4-வது நடுவர் விதிமுறை தாளை காண்பித்து விளக்கினார்.

    அதாவது 1.2.6 விதிமுறைப்படி பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் மற்றொரு எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும். எனவே அந்த விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்று 4-வது நடுவர் விளக்கி விளக்கம் கொடுத்ததால் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் அமைதியானார்கள்.  

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    • அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன்.

    புதுடெல்லி:

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றிபெற்றது. இதில், இந்திய வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில், சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில்:-

    உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அந்த சாதனையை முறியடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. விராட் கோலியின் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனையை பார்க்கும்போது அது நம்பமுடியாத அளவில் உள்ளது

    விராட் கோலி 49வது சதம் விளாசிவிட்டார். சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்துவிட்டார் என்பதை நினைத்துப்பார்க்கும்போது நம்பமுடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை.
    • 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இதனால் 384 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர். 

    அதனால் 334 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பந்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது.

    பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பந்தை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார்.

    • டோனி டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.
    • வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை.

    ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

    2-வது போட்டியில் 371 ரன்களை துரத்தும் போது ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்டதால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்தை பென் டூக்கெட் உடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் போராடினார். அதில் பென் டூக்கெட் 82 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜானி பேரஸ்டோவும் சர்ச்சைகுரிய வகையில் அவுட் ஆகி வெளியேறியதால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.

    இருப்பினும் மறுபுறம் மனம் தளராமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ல் ஹெண்டிங்க்லே மைதானத்தில் தனி ஒருவனாக 135* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றியதை போல் இங்கிலாந்தை வெற்றி பெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது. இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அவர் 9 பவுண்டரி 9 சிக்க்சருடன் 155 ரன்களில் அவுட்டானதால் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் தோற்றது. இருப்பினும் கேப்டனுக்கு அடையாளமாக மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் அனைவரது பாராட்டுகளைப் பெற்றார்.

    இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி அழுத்தமான சமயங்களில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஃபினிஷராக செயல்படும் திறமையைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் களத்திற்கு செல்லும் போது அழுத்தத்துடனேயே விளையாடுவார்கள். ஆனால் மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் மற்றவர்களை காட்டிலும் பென் ஸ்டோக்ஸ் தம்மால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்புகளை தேடுகிறார். அது போன்ற சூழ்நிலைகளில் அசத்தும் வீரர்களை நினைத்தால் எனக்கு டோனி தான் முதலில் நினைவுக்கு வருவார். குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.

    அந்த வகையில் வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை. சொல்லப்போனால் அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் எனக்கு 2019 ஹெண்டிங்க்லே போட்டியை நினைவுப்படுத்தியது. முதலில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் தவறை விட்டதைப்போல 116 ரன்களில் இருக்கும் போது மார்க்கஸ் ஹரிஷ் தவற விட்டார். அதனால் அதே போல இப்போட்டியிலும் அவர் வெற்றியை பறித்து விடுவாரோ என்ற பயம் எங்களது மனதிற்குள் இருந்தது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.

    • சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை.
    • நான் கிரிக்கெட்டில் அதிக காலம் பயணம் செய்து விட்டேன்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தன்னை அணுகியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரொபர்ட் கியிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தது. ஆனால் சர்வதேச பயிற்சியாளர் பணிக்கு அப்போது நான் தயாராக இல்லை. நான் கிரிக்கெட்டில் அதிக பயணம் செய்து விட்டேன். இப்போது என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தொடங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் இதிலிருந்து விலகி இருக்க விரும்பவில்லை.

    மெக்கல்லத்துக்கும் குடும்பம் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளை வைத்து கொண்ட இது போன்ற பணிகளை செய்வது எனக்கு சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலியா போட்டிகளில் விளையாடாமல் ப்ரெஷ்யாக வருகிறது
    • இந்திய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி சோர்வாக வந்துள்ளனர்.

    இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விவரிக்கிறார்.

    இரு அணிகள் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஓவல் சூழ்நிலை இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் பொருத்தமானதாக இருக்கும். இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றதைவிட அதிக அளவில் எதிர் அணிகளை வீழ்த்தியுள்ளன. இதனால் இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்திற்கும் தகுதியானவை.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதேவேளையில் இந்திய வீரர்கள் உச்சக்கட்ட போட்டித்தன்மை வாய்ந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளனர்.

    ஒரு அணி ப்ரெஷ் ஆக வருகிறது. மற்றொரு அணி சோர்வாக உள்ளது. இதுபோன்ற பெரும்பாலான காரணிகள் போட்டியை பாதிக்கலாம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சிறந்த போட்டிகளில் ஒன்று. இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்திய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு பேரையும் தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா 6-வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். அவரது பேட்டிங் திறனை மேம்படுத்தியுள்ளதால், அவரை ஒரு பேட்ஸ்மேனாக கருதலாம். தேவைப்பட்டால் சில ஓவர்கள் வீச வைக்கலாம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜடேஜாவை அணியில் வைத்துக் கொண்டால், போட்டி நான்காவது அல்லது ஐந்தாவது நாள் செல்லும் நிலை ஏற்பட்டு, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், சிறந்த 2-வது சுழற்பந்து வீச்சு வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    • ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்றது.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி துருப்பு சீட்டாக விராட் கோலி மற்றும் புஜாரா இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள்.

    கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.

    கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். தான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.

    என பாண்டிங் கூறினார்.

    ×