என் மலர்
நீங்கள் தேடியது "Shreyas Iyer"
- லக்னோ பவுலிங் அட்டாக்கை சமாளிக்க இங்கிலிஸை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார்.
- குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 54-வது போட்டியில் பஞ்சாப்- லக்னோ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய லக்னோ 20 ஓவரில் 199/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவை ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்ததாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜோஸ் இங்கிலிஸை 3-வதாக களமிறக்கும் முடிவை கேப்டன் எங்களிடம் கூறினார். இந்த பிட்ச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தால் லக்னோ பௌலிங் அட்டாக்கை சமாளிக்க இங்கிலிஸை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார். குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம். அவரது பந்துகள் பெரும்பாலும் ஷார்ட்டாக இருக்கும். அது போன்ற பந்துகளை எதிர்கொள்வதே ஜோஸ் இங்கிலிஸின் பலமாகும்.
அவர் அடித்த புல் ஷாட்டுகள் அபாரமாக இருந்தது. மேலும் அந்த முடிவு தங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட உதவியது. அந்த முடிவு லக்னோவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்து பஞ்சாப் வெற்றிக்கான துவக்கத்தைக் கொடுத்தது.
என பாண்டிங் கூறினார்.
- கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார்.
- இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக சாஹல் செயல்பட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 34-வது லீக் போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை என பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
இது குறித்து பஞ்சாப் அணி கேப்டன் கூறியதாவது:-
பல்வேறு வகைகள் தான் வாழ்க்கையின் ருசி என்று சொல்வார்கள். அதுபோல இந்த மைதானத்தில் நாங்கள் நிறையப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளோம். அது நல்ல சவால். வித்தியாசமாக நான் எதுவும் சிந்திக்கவில்லை. எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன்.
புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை. மார்கோ யான்சென் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்சை உருவாக்கி வேகமாக பௌலிங் செய்து எங்களுடைய கப்பலை நிலை நிறுத்தினார். பவுலர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் எங்களுடைய பவுலர்கள் அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினேன்.
கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேராக சிக்சர் அடிக்க முடியவில்லை. எனவே அதை வைத்து நாங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம்.
ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட வேண்டும். அதை இன்று எங்களுக்கு நேஹல் செய்தார். நீங்கள் மேட்ச் வின்னர் என்பதால் நமக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சஹாலிடம் கூறினேன். கம்பேக் கொடுக்கும் தன்மை கொண்டுள்ள அவர் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார்.
- பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெற ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதும் உதவினார்.
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது.
- அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.
ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்து விளாசத் தொடங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணியின் 2வது தோல்வி இதுவாகும்.
- ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
- பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.
ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.
4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.
5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.
13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.
18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.
ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் குவித்தார்.
- நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல்போட்டியிலேயே ஷ்ரேயாஸ் அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஒரு நபருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக்கை ஓட்டுபவர் இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது அதிரடியாக விளையாடி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி ஓவரை முழுவதும் ஷஷாங்க் சிங் விளையாடி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பந்து கூட கொடுக்காமல் 5 பவுண்டர்கள் விளாசினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
யாராக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் ஒரு ரன் எடுத்து கொடுத்து அவரை சதம் அடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் மத்தியில் இவர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரைக் மாற்றதது குறித்து ஷஷாங்க் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், உங்களுக்கு ஸ்ட்ரைக் வேண்டுமா என ஸ்ரேயஸிடம் நான் கேட்பதற்கு முன்பாகவே "எனது சதத்தை பற்றி நீ கவலைப்படாதே. எல்லா பந்துகளையும் அடித்து விளையாடு. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒரு அணியை சார்ந்த விளையாட்டு என ஷ்ரேயஸ் கூறிவிட்டார். ஆனால் அதுபோன்ற தருணங்களில் சுயநலமின்றி செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல்-ல் சதம் விளாசுவது எளிதான விஷயம் அல்ல என ஷஷாங்க் கூறினார்.
- ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் 243 ரன்களைக் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். கடைசி கட்டத்தில் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடி காட்டினார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 21 பந்தில் 81 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
- இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
- பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.
நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.
நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.
அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.
கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.
- ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது
- இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பின்னர் மூன்றாவது வீரராக களம் புகுந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இறுதியில் 102 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 82 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை முக்கியமான நேரத்தில் பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 1534 ரன்களை 49 ரன்கள் சராசரி உடன் அடித்துள்ளார்.
அதோடு அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய வீரர்களில் வெகுவிரைவாக 1500 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்தவர்கள் சாதனையில் முதல் இடத்தில் இருந்த கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 1500 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் கே.எல் ராகுல் 36 இன்னிங்ஸ்களில் முதலிடத்தில் இருந்த வேளையில் அதனை ஷ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டியின் மூலம் 34-இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.
இவர்கள் இருவரை தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 38 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
- ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.
தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.
இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
- டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
- சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.
முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.