என் மலர்
நீங்கள் தேடியது "vijay hazare trophy"
- முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது.
- விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கர்நாடகா அணி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. விதர்பா அணி தரப்பில் அதிகபட்சமாக சமரன் ரவிச்சந்திரன் 101 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய விதர்பா அணி 48.2 ஓவர்கள் முடிவில் 312 ரன்களுக்கு ஆல் ஆனது. இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி விஜய் ஹசாரே கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் அதிக முறை சாம்பியன் பட்டம் (5) வென்ற தமிழ்நாடு அணியின் சாதனையை கர்நாடகா அணி சமன் செய்துள்ளது.
இப்போட்டியில் சதமடித்து அசத்திய கர்நாடக வீரர் சமரன் ரவிச்சந்திரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- விஜய் ஹசாரே தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 752 ரன்கள் குவித்துள்ளார்.
- அதில் 6 போட்டிகளில் கருண் நாயர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மிக சிறப்பாக விலையை வரும் கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 போட்டிகளில் அவர் ஆட்டமிழக்கவில்லை. இதனால் அவரின் சராசரி 752 ஆக உள்ளது.
இந்நிலையில், கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.
- மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும்.
- என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் கனவு இன்னும் கலையவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவு. அது இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுதான் நான் விஜய் ஹசாரே தொடரில் அசத்தலாக பேட்டிங் செய்ய காரணம். மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைக்கவில்லை.
இவ்வாறு கருண் நாயர் கூறினார்.
- உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
- ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை.
மும்பை:
இந்திய அளவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் விதர்பா அணியை முதல் முறையாக இறுதி போட்டிக்கு கேப்டன் கருண் நாயர் அழைத்துச் சென்று இருக்கிறார். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி ரன் குவித்து வரும் கருண் நாயரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இந்தத் தொடரின் கால் இறுதி போட்டியிலும் சதம் அடித்த கருண் நாயர், அரை இறுதி போட்டியில் விதர்பா அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் 44 பந்துகளில் 88 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மகாராஷ்டிரா அணிக்கு எதிரான அந்த அரை இறுதி போட்டியில் விதர்பா அணி 50 ஓவர்களில் 380 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் விதர்பா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்த நிலையில் கருண் நாயரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், கருண் நாயர் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து, அதிலும் ஐந்து சதங்களை அடித்து இருப்பது அசாதாரணமான நிகழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு இல்லை. இதுபோன்ற செயல்பாடுகள் எதைச்சையாக நடக்காது. ஆழ்ந்த கவனம் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியம். வலுவாக இருங்கள். உங்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
என்று சச்சின் கூறினார்.
- இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா, மகாராஷ்டிரா அணிகள் மோதின.
- இதில் விதர்பா அணி வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று 2வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்தது. யாஷ் ரதோட் 116 ரன்னும், துருவ் ஷோரே 114 ரன்னும் எடுத்தனர்.
இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் கருண் நாயர் 88 ரன்னும், ஜிதேஷ் சர்மா 51 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மகாராஷ்டிரா களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 90 ரன்னும், அன்கிட் பாவ்னே 50 ரன்னும் எடுத்தனர். நிகில் நாயக் 49 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில், மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது யாஷ் ரதோடுக்கு வழங்கப்பட்டது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதுகின்றன.
- இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, அரியானா அணிகள் மோதின.
- இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானாவும் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
நாளை நடைபெறும் 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றன.
- இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், விதர்பா அணிகள் மோதின.
- இதில் விதர்பா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்றும் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், மஹிபால் லாம்ரோர் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்தது. கார்த்திக் சர்மா அரை சதமடித்து 62 ரன்னும், ஷப்னம் கர்வால் அரை சதம் கடந்து 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரே நிலைத்து நின்று ஆடி சதமடித்தார்.
கேப்டன் கருண் நாயர் அதிரடியாக ஆடி 122 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 292 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது துருவ் ஷோரேவுக்கு வழங்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- முதலில் பேட் செய்த கர்நாடகா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.
- தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்தார்.
வதோதரா:
32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியும், குருணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அனீஷ் அரை சதம் கடந்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பரோடா அணி சார்பில் ராஜ் லிம்பானி, அதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. ஷாஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அதித் ஷேத் அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் பரோடா அணி 49.5 ஓவரில் 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகம் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது.
- மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
- அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்கர்னி 107 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 44.4 ஓவரில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
WHAT A SPELL BY ARSHDEEP SINGH ?
— Johns. (@CricCrazyJohns) January 11, 2025
- Arshdeep gets Ruturaj in the Vijay Hazare Trophy Quarters.
Arshdeep is making a big case for Champions Trophy squad ⚡ pic.twitter.com/4R8DXPQvqF
அப்போது பவுலராக இருந்து சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனே ருதுராஜ் பந்தை ஆக்ரோஷமாக தரையில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Arshdeep Singh's efforts go in vain
— Vipin Tiwari (@Vipintiwari952) January 11, 2025
Ruturaj Gaikwad leads Maharashtra to the semifinals.
pic.twitter.com/SVP0aBnhcu
- முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தமிழகம் சார்பில் இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.
விஜயநகரம்:
விஜய் ஹசாரே டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சத்தீஸ்கர் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்கள் குவித்தது. இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.
சத்தீஸ்கர் சார்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுமையுடன் ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது அசுதோஷ் சிங் 71 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சன்சஞ்சீத் தேசாய் 2 ரன்னும், அமந்தீப் கரே 4 ரன்னும், பிரதீக் யாதவ் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய பூபன் லால்வானி அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில், சத்தீஸ்கர் அணி 46 ஓவரில் 228 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தமிழகம் 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழகம் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 6 லீக் ஆட்டங்களில் (4 வெற்றி, 1 தோல்வி, 1 முடிவில்லை) 18 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
- மிசோரம் அணி 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.
விஜயநகரம்:
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், மிசோரம் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மிசோரம் வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மிசோரம் 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தமிழகம் சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். விஜய் சங்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹாஜே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், தமிழகம் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெகதீசன் 46 ரன்னும், துஷார் ரஹாஜே 27 ரன்னும் எடுத்தனர்.
தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி சத்தீஸ்கர் அணியுடன் மோதுகிறது.
- இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரதேசம் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வி 105 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய விதர்பா அணி 47.2 ஓவரில் 313 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியில் அதிக பட்சமாக யாஷ் ரத்தோட் 138 ரன்களும் கருண் நாயர் 112 ரன்களும் எடுத்தனர்.
கருண் நாயர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் இது அவரது 3-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.
ஆனால், அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 5-வது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.