என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Hazare Trophy"

    • 60 பந்தில் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.

    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சண்டிகர் அணிக்கெதிராக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங் அபாரமாக விளையாடி 60 பந்தில் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.

    ஜுயல் 118 பந்தில் 134 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் 57 பந்தில் 67 ரன்கள் அடிக்க உத்தர பிரதுசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது.

    பின்னர் 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சண்டிகர் 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 140 ரன்னில் சுருண்டது. இதனால் உத்தர பிரதேசம் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது.
    • அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

    சென்னை:

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இப்போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் எடுத்தார். மேலும் ஆயுஷ் லோஹருகா, சகிபுல் கானி ஆகியோரும் சதம் அடித்தனர்.

    இந்த நிலையில் உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்து உள்ளார்.

    சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இது அணிகளுக்கு இடையே சரியான போட்டி உருவாகும் வாய்ப்பை முழுமையாக நீக்குகிறது. வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

    ஆனால் நான் மீண்டும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சில அணிகளிடையே தரத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அதாவது வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இது ஒருதலைப்பட்சமாக மாறி எந்தவித போட்டியும் இல்லாமல் போகிறது. இது ஒரு சிறந்த சூழ்நிலை அல்ல.

    வைபவ் சூர்யவன்ஷி என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்கிறார். ஆனால் அருணாச்சலப்பிர தேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

    விராட் கோலி 101 பந்தில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - உத்தரகாண்ட் அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த மும்பையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இது ரோகித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    மற்றொரு போட்டியில் டெல்லி- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியின் வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 6 போட்டிகளில் விராட் கோலி 3 சதம் 3 அரைசதம் விளாசி செம பார்மில் உள்ளார். 

    • அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர்.
    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் பல சாதனைகள் அரங்கேறியுள்ளது.

    •அதன்படி அருணாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீகார் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 38 சிக்சர்களை பறக்க விட்டனர். ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் நொறுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கனடா 28 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    •பீகார் அணியில் சூர்யவன்ஷி, ஆயுஷ் லோஹருகா, கானி ஆகியோர் செஞ்சுரி போட்டனர். விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் சதம் அடித்த 3 வீரர்களை கொண்ட அணி என்ற பெருமையை பீகார் பெற்றது.

    •சீனியர் பிரிவில் சூர்யவன்ஷி இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இவற்றில் 3 சதம் 20 ஓவர் போட்டியில் வந்தவை. 15 வயதுக்கு முன்பாக லிஸ்ட் ஏ மற்றும் 20 ஓவர் போட்டியில் சதத்தை ருசித்த ஒரே வீரர் சூர்யவன்ஷி தான்.

    •அருணாசலபிரதேச வேகப்பந்து வீச்சாளர் மிபோம் மோசு 9 ஓவர்களில் 116 ரன்களை வாரி வழங்கினார். அவர் 'லிஸ்ட் ஏ'-ல் அதிக ரன்களை அள்ளிகொடுத்த மோசமான பந்து வீச்சாளர் பட்டியலில் இணைந்தார். 2023-ம்ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நெதர்லாந்தின் பேஸ் டி லீட் 115 ரன்களை வழங்கியதே முந்தைய மோசமான பந்து வீச்சாக இருந்தது

    விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் பீகார் வீரர்கள் சூர்யவன்ஷி 36 பந்திலும், சகிபுல் கானி 32 பந்திலும் சதம் விளாசிய நிலையில் அதற்கு சற்று முன்பாக ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் அடித்தார். ஆனால் அவரது சதத்துக்கு பலன் இல்லை.

    அமதாபாத்தில் நடந்த கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ('ஏ' பிரிவு) முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 9 விக்கெட்டுக்கு 412 ரன்கள் குவித்தது. 33 பந்தில் சதத்தை எட்டிய இஷான் கிஷன் 125 ரன்களில் (39 பந்து, 7 பவுண்டரி, 14 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரேயில் ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுவாகும். தேவ்தத் படிக்கல் 147 ரன்கள் (118 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டினார்.

    விஜய் ஹசாரே தொடரில் நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் இரட்டை சதமடித்து 202 ரன்கள் எடுத்தார்.
    • பீகார் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 190 ரன் எடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

    நேற்று நடந்த பல்வேறு போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் உள்பட இளம் வீரர்களும் சதமடித்து அசத்தியுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 22 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

    பீகார் அணியின் சூர்யவன்ஷி 190 ரன்னும், சகிபுல் கனி 128 ரன்னும், ஆயுஷ் லோஹருகா 116 ரன்னும் அடித்தனர்.

    ஒடிசா அணியின் ஸ்வஸ்திக் சமல் 202 ரன்னும், பிப்லாப் சமந்த்ரே 100 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா அணியின் துருவ் ஷோரே 136 ரன்னும், அமன் மோகடே 110 ரன்னும் எடுத்தனர்.

    மேகாலயா அணியின் கிஷான் லிங்டோ 106 ரன்னும், அர்பித் படேவரா 104 ரன்னும் அடித்தனர்.

    மும்பை அணியின் ரோகித் சர்மா 155 ரன்னும், கர்நாடகா அணியின் தேவ்தத் படிக்கல் 147 ரன்னும், சவுராஷ்டிரா அணியின் சம்மார் கஜ்ஜார் 132 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணியின் விராட் கோலி 131 ரன்னும், ஜம்மு காஷ்மீர் அணியின் ஷுபம் கஜுரியா 129 ரன்னும், அரியானா அணியின் ஹிமான்ஷு ரானா 126 ரன்னும் அடித்தனர்.

    ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 125 ரன்னும், ஆந்திரா அணியின் ரிக்கி புய் 122 ரன்னும் எடுத்தனர்.

    ரயில்வேஸ் அணியின் ரவி சிங் 109 ரன்னும், கோவா அணியின் ஸ்நேஹல் கவுதன்கர் 107 ரன்னும், மத்திய பிரதேச அணியின் யாஷ் துபே 103 ரன்னும், கேரளா அணியின் விஷ்ணு வினோத் 102 ரன்னும், மணிப்பூர் அணியின் ஜோடின் பெய்ரோஜியாம் 101 ரன்னும் அடித்தனர்.

    • ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
    • விராட் கோலி 101 பந்தில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்நிலையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார். இன்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி - ஆந்திரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். மேலும் அதிவேகமாக 10 ஆயிரம் முதல் 11, 12, 13, 14, 15, 16 ஆயிரம் ரன்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    • மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 83 பந்து சதம் அடித்துள்ளார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.

    இந்நிலையில் சீக்கிம்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 61 பந்தில் சதம் விளாசிய மும்பை வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

    மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் சதம் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் இருவரும் அசத்தி வருகின்றனர்.

    • விஜய் ஹசாரே தொடரில் நடக்கும் லீக் போட்டி ஒன்றில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர்.
    • இதில் ஒடிசா வீரர் ஸ்வஸ்திக் இரட்டை சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இன்று நடக்கும் ஒரு லீக் போட்டியில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒடிசா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்வஸ்திக் சமல் 212, சாமந்த்ரே 100 ரன்கள் எடுத்தனர்.

    இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் விளாசி ஸ்வஸ்திக் சமல் சாதனை படைத்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14-வது இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
    • ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.

    இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.

    எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

    ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:

    32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)

    33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)

    35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)

    36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)

    40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)

    41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)

    42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)

    முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    32 பந்துகள்: சகிபுல் கனி

    33 பந்துகள்: இஷான் கிஷன்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    • விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பீகார்- அருணாச்சல பிரதேசம் அணி விளையாடி வருகிறது.
    • முதல் பேட்டிங் செய்த பீகார் அணியில் 3 பேர் சதம் விளாசினர்

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் சூர்யவன்ஷி 190, சகிபுல் கனி 128, ஆயுஷ் லோஹருகா 116, பியூஷ் சிங் 77 ரன்கள் விளாசியுள்ளனர்.

    இதனால் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்தது. அதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இன்று அந்த வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.

    • சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார்.
    • லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் 'பிளேட்' வகைப்பிரிவில் இன்று பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடினார்.

    எப்போதும் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் 36 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

    சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-

    வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)

    ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)

    ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)

    மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.

    இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:

    35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024

    36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று

    40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010

    41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023

    42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021

    ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்

    29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

    31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

    35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

    36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

    36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

    37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

    குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-

    59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)

    64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)

    65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)

    • வைபவ் சூர்யவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் விளாசியுள்ளார்.
    • இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.

    33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. அவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு எலைட் வகைப் பிரிவுக்கு ஏற்றம் பெறும். எலைட் பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த ஆண்டு பிளேட் வகைப்பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.

    இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த வைபவ், இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ரன்னில் தனது இரட்டை சதத்தை வைபவ் தவறவிட்டார். அவர் 84 பந்தில் 190 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.

    இதற்கு முன்பு u19 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 171 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×