search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruturaj Gaikwad"

    • சிஎஸ்கே 20 ரன்னில் தோல்வியடைந்தது.
    • டோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

    எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    வெற்றியோ... தோல்வியோ... டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் விளாசினார்.

    மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ... அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லியை 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பவர்பிளே ஓவர்களுக்குப் பிறகு பந்து வீச்சாளர்கள் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளித்தது. 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான். முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. 2-வது இன்னிங்சில் எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட் இருந்தது. ரச்சின் ரவீந்திரா 12 பந்தில் 2 ரன் என்பது மிகப்பெரிய வித்தியாசம் என நினைக்கிறேன். முதல் மூன்று ஓவர்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இதுதான் போட்டியின் தோல்விக்கான வித்தியாசம். பாதி நேரத்தில் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினோம்.

    எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட்-ஐ நாங்கள் எங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள முடியவில்லை. ரன்ரேட்டை குறைக்க மிகப்பெரிய ஓவராக அமையாமல் போனது. தீபக் சாஹர் முதல் மூன்று ஓவர்கள் வீசினார். நாங்கள் முதல் நான்கு ஓவர்களை நன்றாக வீசினார். ஆனால் பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டோம். நாங்கள் ஒன்றிரண்டு பவுண்டரிகளை நிறுத்தியிருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பான தங்களது பணியை செய்து முடித்தார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். கடந்த இரண்டு வாரங்களாக பிரித்வி ஷா கடுமையான வகையில் பயிற்சி மேற்கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

    இது போட்டி எவ்வாறு செல்கிறது. அதைச் சார்ந்ததாக இருக்கும். முகேஷ் குமார் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியும் என்றால், அது சிறப்பாக இருக்கும். ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்துகிறேன்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாடாத காரணத்தால், கொஞ்சம் நேரம் எடுத்து கொள்கிறது. எது நடந்தாலும், மீண்டும் களத்திற்கு வருவது முக்கியம் என்ற தன்னம்பிக்கை எப்போதும் இருந்தது.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.

    • எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
    • சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் விளாசினர்.
    • தீபக் சாஹர், முஸ்டாபிஜூர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.

    ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி ) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர், முஸ்டா பிசுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், டேரில் மிட்செல், பதிரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார்.

    ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    குஜராத் அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன் கில் கூறும்போது 'இந்த தோல்வி மூலம் நாங்கள் பாடம் கற்றோம். மாறுபட்ட அனுபவம் கிடைத்தது' என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் சந்திக்கிறது. குஜராத் 3-வது போட்டியில் அதே தினத்தில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

    • டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.
    • சென்னை கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி கேப்டனாக எம்.எஸ். டோனி விலகிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் சென்னை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், சென்னை அணி கேப்டனாக முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் டாஸ் சமயத்தில் தனது புதிய பொறுப்பு குறித்து ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ருதுராஜ் கெய்க்வாட், "பெருமையாக உணர்கிறேன். யாருடைய இடத்தையும் பூர்த்தி செய்ய விரும்பவில்லை."

    "கேப்டன் மாறப்போவது பற்றி கடந்த வாரம் எனக்கு தெரியும், ஆனால் எம்.எஸ். டோனி கடந்த ஆண்டே இதை சூசகமாக தெரிவித்தார். இங்கு அனைவரும் அனுபவம் மிக்கவர்கள், வருத்தம் அளிக்கும் வகையில், கான்வே மற்றும் பதிரானா அணியில் இல்லை," என்று தெரிவித்தார்.

    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.
    • அணியில் என்னை வழிநடத்த பலர் உள்ளனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். புதிய கேப்டனை எம்.எஸ். டோனியே தேர்வு செய்த நிலையிலும், இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பொறுப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

     


    அப்போது பேசிய அவர், "அருமையாக இருக்கிறது. இது ஒரு பாக்கியம். இது மிகப்பெரிய பொறுப்பு, ஆனாலும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் பக்கம் பலரும் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், நான் அதிகம் எதையும் செய்ய வேண்டியிருக்காது. மேலும் எம்.எஸ். டோனி, ஜடேஜா, ரகானே ஆகியோர் என்னை வழிநடத்த அணியில் உள்ளனர். இதனால் நான் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.

     


    இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.

    2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    • டோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
    • டோனி இன்னும் 5 அல்லது குறைந்தது 2 - 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன் என ரெய்னா கூறினார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க இருக்கிறது. 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கேப்டனாக திகழும் டோனி 6-வது முறையாக கோப்பை வெல்ல சிஎஸ்கே அணியை வழி நடத்த உள்ளார்.

    கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி விளையாடிய டோனிக்கு தற்போது 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

    இந்நிலையில் டோனி ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெக்வாட் செயல்படுவதற்கு தகுதியானவர் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அடுத்த கேப்டன் யார் என்பதே சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய கேள்வியாகும். ஒருவேளை டோனி கேப்டனாக விலகினாலும் கூட அவர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் போன்ற ஏதோ ஒரு வேலையில் இருப்பார். ஆனால் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்வியாகும். அது போன்ற சூழ்நிலையில் ருதுராஜ் நல்ல தேர்வாக இருப்பார். 

    எனவே எம்எஸ் டோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் இம்முறை டோனி தன்னுடைய துணை கேப்டனை கைகாட்டி அவரிடம் நான் இந்த அணியை 2008 முதல் கையாண்டு வருகிறேன். இனிமேல் நீங்கள் இந்த மஞ்சள் படையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து பெவிலியனில் உட்காருகிறேன் என்று சொல்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது 42 வயதாகும் டோனி தன்னுடைய வருங்காலத்தை எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்ப்பது முக்கியம். அவர் இன்னும் 5 அல்லது குறைந்தது 2 - 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    இவ்வாறு ரெய்னா கூறினார்.

    • இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.

    இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.

    இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.

    என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் ஏமாற்றம்.
    • அறிமுக வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்து வீரர்கள் ஓட்டல் அறைக்கு திரும்புவதற்காக பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் செல்போனை பார்த்தபடி பேருந்து அருகில் வந்து படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தானியங்கி கதவு மூடிக்கொண்டது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் அதிர்ச்சி அடைந்தார்.

    ருதுராஜ் போட்டியில் விளையாடியதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கேப்டன் கே.எல். ராகுல் கதவை மூடியிருப்பார். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் டிரைவர் கதவை மூடியிருப்பார்என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேவேளையில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    • முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.
    • சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 222 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் மேக்ஸ்வெல் சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பின் 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகள் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் நேற்று 52 ரன்கள் குவித்தார். இது 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் விளாசியுள்ளார்.

    சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    • ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
    • 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஃபகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்தை பிடித்தார்.

    5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கிறார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    டி20-யை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரேஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ×