என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்.. தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கருத்து
    X

    கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்.. தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கருத்து

    • கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம்.
    • நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

    இந்நிலையில் நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார் என தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு ஆட்டங்களிலும் நாங்கள் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளோம். இது மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு முறை கேட்சை இழக்கும்போதும், அதே பேட்டர் 20-25-30 ரன்கள் கூடுதலாகச் சேர்க்கிறார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஹிட்களில் தான் தோல்வியைத் தழுவினோம்.

    பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நாங்கள் சரியாக விளையாடி இருந்தோம். மேலும் பவர்பிளேவில் நாங்கள் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. இது நாங்கள் எங்களுடைய சிறந்த மற்ற மேம்பட்ட செயல்திறனாகும். மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் எங்கள் சில நேர்மறையான அம்சங்களும் கிடைத்துள்ளன.

    என ருதுராஜ் கூறினார்.

    Next Story
    ×