என் மலர்
நீங்கள் தேடியது "Ranji Trophy"
- டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 547 ரன்கள் குவித்தது.
பெங்களூரு:
ரஞ்சி டிராபி தொடரின் 5-வது சுற்று போட்டி நடந்து வருகிறது. கர்நாடகாவின் ஹூப்ளியில் கர்நாடகா, சண்டிகர் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 547 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்மரண் ரவிச்சந்திரன் சிறப்பாக ஆடி இரட்டை சதம் கடந்து 227 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட நிலையில் கருண் நாயர் 95 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயாஸ் கோபால் 62 ரன்னும், ஷிகர் ஷெட்டி 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மனன் வோரா பொறுப்புடன் ஆடி சதமடித்து 106 ரன் எடுத்தார்.
கர்நாடக அணிச் ஆர்பில் ஷ்ரேயாஸ் கோபால் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பாலோ ஆன் பெற்ற சண்டிகர் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. கர்நாடக அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், சண்டிகர் 2வது இன்னிங்சில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 185 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.
கர்நாடக அணியின் ஷ்ரேயாஸ் கோபால் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- காஷ்மீர் அணி 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய காஷ்மீர் அணி 310 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பராஸ் டோக்ரா 106 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மூ காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.
- கடைசி விக்கெட்டுக்கான வித்யூத்- சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது.
- வித்யூத் 40 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி 2025-26 சீசன் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'ஏ'-வில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. முதல் மூன்று போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒரு தோல்வி, இரண்டு டிரா மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் 4ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் ஆந்திராவை எதிர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான விமல் குமார் (10), என். ஜெகதீசன் (19) விரைவாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன. பி.சச்சின் 4 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 8 ரன்னிலும், பாபா இந்திரஜித் 19 ரன்னிலும், அந்த்ரே சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 103 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
கடைசி விக்கெட்டுக்கு பி.வித்யூத் உடன் சந்தீப் வாரியர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் தமிழக அணியின் ஸ்கோர் 150 ரன்னைக் கடந்தது. இறுதியாக 182 ரன்னில் தமிழ்நாடு அணி ஆல்அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு வித்யூத்- சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. வித்யூத் 40 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தீப் வாரியர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆந்திரா அணி சார்பில் பிரித்வி ராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- கர்நாடகா அணி 2வது நாளில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கருண் நாயர், ஸ்மான் ரவிச்சந்திரன் இரட்டை சதமடித்து அசத்தினர்.
திருவனந்தபுரம்:
ரஞ்சி டிராபி தொடரின் 3வது சுற்று போட்டி நடந்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்நிலையில், 2வது நாளில் கர்நாடக அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 233 ரன்னில் அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி 343 ரன்கள் சேர்த்து அசத்தியது. அவரைத் தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ரவிச்சந்திரனும் இரட்டை சதமடித்தார்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவிச்சந்திரன் 220 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்துள்ளது.
- முதல் நாள் முடிவில் கர்நாடகா 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கருண் நாயர் 142 ரன்கள் விளாசினார்.
திருவனந்தபுரம்:
ரஞ்சி டிராபியின் 3வது போட்டி இன்று தொடங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி தொடர்ந்து சதமடித்த போதிலும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
- நாகாலாந்து 31 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
- 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் சதம் விளாசினர்.
ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு- நாகாலாந்து இடையிலான போட்டி கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. விமல் குமார் (189), பிரதோஷ் ரஞ்சன் பால் (201) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 512 ரன்கள் குவித்து தமிழ்நாடு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் நாகாலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. நிஸ்சால் 80 ரன்களுடனும், யுகாந்தர் சிங் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிஸ்சால் தொடர்ந்து விளையாடி சதம் விளாசினார். யுகாந்தர் சிங் 67 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு நிஸ்சால் உடன் இம்லிவாதி லெம்தூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை தமிழ்நாடு பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இவரும் நங்கூரம் பாய்ச்சி ஆடுகளத்தில் நின்றுவிட்டனர்.
லெம்தூரும் சதம் விளாசினார். இருவரும் 3ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். நிஸ்சால் 161 ரன்களுடனும், லெம்தூர் 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். குர்ஜப்னீத் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுடன் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- விமல் குமார் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டியில் தமிழ்நாடு, நாகாலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு அணியின் ஆதிஷ், விமல் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆதிஷ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் களம் இறங்கினார்.
விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 150 ரன்களை கடந்து சென்றனர். இதனால் இரட்டை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விமல் குமார் 224 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. அடுத்து அந்த்ரே சித்தார்த் களம் இறங்கினார். தமிழ்நாடு அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்திருந்தபோது நேற்றைய முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ஆவது நாள் தொடங்கியது. சித்தார்த் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 512 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபா இந்திரஜித் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கருண் நாயர் 174 ரன்கள் விளாசினார்.
- ருதுராஜ் கெய்க்வாட் 116 ரன்கள் சேர்த்தார்.
ரஞ்சி டிராபியின் 2ஆவது போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கோவா அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 174 ரன்கள் விளாசினார். இதனால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் வீரராக திகழ்ந்த ரகானே, மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர், சண்டிகாருக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது.
- விமல் குமார் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி 2025-26 தொடரின் 2ஆவது போட்டி இன்று தொடங்கியது. தமிழ்நாடு- நாகாலாந்து இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தமிழ்நாடு அணியின் ஆதிஷ், விமல் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆதிஷ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதோஷ் ரஞ்சன் பால் களம் இறங்கினார்.
விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 150 ரன்களை கடந்து சென்றனர். இதனால் இரட்டை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. விமல் குமார் 224 பந்தில் 18 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விமல் குமார்- பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. அடுத்து அந்த்ரே சித்தார்த் களம் இறங்கினார். தமிழ்நாடு அணி 90 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், அந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கெதிராக தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
- முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 93 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
- 2ஆவது இன்னிங்சில் 212 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
சித்தார்த் 4 ரன்களுடனும், ஹேம்சுதேஷன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. அந்த்ரே சித்தார்த் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார். மறுமக்கள் ஹேம்சுதேஷன் 3 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபா இந்திரஜி 22 ரன்னிலும், ஷாருக்கான் 37 ரன்களிலும் வெளியேறினார். அந்த்ரே சித்தார் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அணி 212 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது. ஜார்கண்ட் அணி சார்பில் ரிஷவ் ராஜ் 4 விக்கெட்டும், அனுகுல் ராய் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
- தமிழ்நாடு 14 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.
இன்று 3ஆவது நாள் ஆட்டமும் தொடங்கியது. இன்றைய ஆட்டத்திலும் தமிழ்நாடு அணி திணறியது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டது.
ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
- ருதுராஜ் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஜலஜ் சக்சேனா 49 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியாவில் உள்நாட்டில் நடக்கும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான 91-வது ரஞ்சி கோப்பை தொடர் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்குகிறது. 'எலைட்' பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, பரோடா, நாகாலாந்து, நடப்பு சாம்பியன் விதர்பா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இதேபோல் 'பிளேட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும்.
இந்நிலையில் கேரளா- மராட்டியம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேரள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மகராஷ்டிரா அணி 1 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளையும் 18 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ருதுராஜ் மற்றும் ஜலஜ் சக்சேனா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 15-வது முதல் தர அரை சதம் ஆகும்.
இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது. 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜலஜ் சக்சேனா ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ருதுராஜ் 91 ரன்னில் வெளியேறினார்.
மழை காரணமாக ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மகாராஷ்டிரா அணி 59 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.






